ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்
பொதுமாறுதல்
கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை
முடிவு செய்துள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக
அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட்டு
பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தற்போதுள்ள
காலிப் பணியிடங்களில் பணி நிரவல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
பள்ளிகளில் உபரிப்பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டங்களில் வேறு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களிலோ, வெளிமாவட்டங்களிலோ நியமிக்கப்பட உள்ளனர். அதன்பின்னர் எஞ்சிய காலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன்படி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்என பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
பள்ளிகளில் உபரிப்பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டங்களில் வேறு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களிலோ, வெளிமாவட்டங்களிலோ நியமிக்கப்பட உள்ளனர். அதன்பின்னர் எஞ்சிய காலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன்படி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்என பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.