ஏப்ரல் 15ம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்திலிருந்து (https://www.annauniv.edu/) ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 60 மையங்களில் சமர்பிக்கலாம் என உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையில் நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் கணேசன் அவர்கள் தெரிவித்தார்.
விண்ணப்பிப்பது எப்படி?
- ஏப்ரல் 14ல், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
- ஏப்ரல் 15 முதல், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில், விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
- பதிவு செய்த விண்ணப்பத்தை, மாணவர்கள் பிரதி எடுத்து, விண்ணப்ப கட்டணத்தை வங்கியில் செலுத்தி, அதற்கான, D.Dயுடன் அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.
- பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து, ஏழு நாட்களுக்குள், ஆன்லைன் பதிவை முடித்து கொள்ள வேண்டும்.
- பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து, 10 நாட்களுக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்; அதன்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.