Saturday, August 29, 2015

2009 ஏப்ரல் 1 முதல் 2014 மார்ச் 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு வட்டித்தொகை தள்ளுபடி

வங்கிகளில் 2009 ஏப்ரல் 1 முதல் 2014 மார்ச் 31ம் தேதி வரை  கல்விக்கடன் பெற்றவர்களுக்கு  வட்டித்தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. 

'அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் உடனே அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற, தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை வங்கியின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். இணையதளத்தில் விவரங்கள் வெளியிட்டுள்ளது குறித்தும் விளம்பரம் செய்ய வேண்டும்' என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தி உள்ளது.

மாணவர்களே வங்கிகளை நேரடியாக அணுகி மனு அளித்தும்  கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடியைப் பெறலாம். 

'வட்டி தள்ளுபடி தர மறுக்கும் வங்கிகள் மீது சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவரிடம் புகார் செய்யலாம். புகாரின் பிரதியை, இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் அனுப்பலாம்' என கல்விக்கடன் ஆலோசனைக் குழு அமைப்பாளர், 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன் ஆலோசனை கூறியுள்ளார்.