Friday, August 7, 2015

கொங்கு தேர் வாழ்க்கை



                       கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

          காமம் செப்பாது, கண்டது மொழிமோ

          பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,

          செறி எயிற்று, அரிவை கூந்தலின்

          நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

                                                                                - இறையனார், குறிஞ்சித்தினை
  
 

மயிலைப் போல மென்மையானவள், 
அழகிய முத்துப் பற்களை உடையவள்,
என் இதயத்தில் பொருந்தி, 
என்மீது நட்பும் உரிமையும் கொண்டவள்
என் உயிரைக் கவர்ந்த,
என்னவளின் கூந்தலிலே வீசுகின்ற மணத்தைப் போல
நீ அறிந்த மலர்களிலே மணமுடைய மலர்களும் உள்ளனவா?