Showing posts with label NEWS FOR SOCIETY. Show all posts
Showing posts with label NEWS FOR SOCIETY. Show all posts

Wednesday, November 9, 2016

How much time do I have to exchange 500,1000 Rupee notes? RBI answers all your questions.

Thanks for Business Standard

1. Why is this scheme?

The incidence of fake Indian currency notes in higher denomination has increased. For ordinary persons, the fake notes look similar to genuine notes, even though no security feature has been copied. The fake notes are used for anti national and illegal activities. High denomination notes have been misused by terrorists and for hoarding black money. India remains a cash based economy hence the circulation of Fake Indian Currency Notes continues to be a menace. In order to contain the rising incidence of fake notes and black money, the scheme to withdraw has been introduced.

2. What is this scheme?

The legal tender character of the notes in denominations of Rs 500 and Rs 1000 stands withdrawn. The old notes can be exchanged for full value at any of the 19 offices of the Reserve Bank of India or at any of the bank branches or at any Head Post Office or Sub-Post Office.

3. Can I get all in cash?

No. You will get upto Rs 4000 per person in cash irrespective of the size of tender and anything over and above that will be receivable by way of credit to bank account.

4. Rs 4000 cash is insufficient for my need. What to do?

You can use balances in bank accounts to pay for other requirements by cheque or through electronic means of payments

5. Need I go to my bank branch only?

For exchange upto 4000 in cash you may go to any bank branch with valid identity proof. For higher value, you can to any other branch of your own bank.

6. Can I withdraw from ATM?

It may take a while for the banks to recalibrate their ATMs. Once the ATMs are functional, you can withdraw from ATMs upto a maximum of Rs 2,000/- per card per day upto 18th November, 2016. The limit will be raised to Rs 4000/- per day per card from 19th November 2016 onwards.

7. Can I withdraw cash against cheque?

Yes, you can withdraw cash against withdrawal slip or cheque subject to ceiling of Rs 10,000/- in a day within an overall limit of Rs 20,000/- in a week (including withdrawals from ATMs) for the first fortnight i.e. upto 24th November 2016.

8. How much time do I have to exchange the notes?

The scheme closes on 30th December 2016. After that the amount can be deposited in specified offices of the RBI, along with necessary documentation.

9. I am a foreign tourist, I have these notes. What should I do?

You can purchase foreign exchange equivalent to Rs 5000 using these old notes at airport exchange counters within 72 hours after the notification, provided you present proof of purchasing the notes.

10. I have emergency needs of cash (hospitalization, travel, life saving medicines) then what I should do?

You can use the old notes for paying for your hospitalization charges at government hospitals, for purchasing bus tickets at government bus stands for travel by state government or state PSU buses, train tickets at railway stations, and air tickets at airports, within 72 hours after the notification.

புதிய ரூ.500, 2000 ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப். பதுக்கினால் செயற்கைக்கோள் கண்டுபிடித்துவிடும்.

நாளை மறுநாள் முதல் புதிதாக வங்கிகள் மூலமாக புழக்கத்தில்  வெளியிடப்பட  உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன நேனோ ஜிபிஎஸ் சிப் இருக்கும் என்றும், இதன்மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லாத காசாகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள் முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்த ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்க கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாக சேமிக்கப்படும் பணத்தை கண்டுபிடித்துவிடலாம். பூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூட காட்டி கொடுத்துவிடும் என்பதும் கூடுதல் செய்தியாக பரவி வருகிறது.

Tuesday, November 8, 2016

500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு (Rs 500 and 1000 currency demonitised: PM Modi )


மத்திய மந்திரி சபை கூட்டம் முடிந்த நிலையில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


இதுதொடர்பாக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:

ஏழை மக்களுக்காவே அர்ப்பணிக்கப்பட்டது இந்த அரசு. ஏழை மக்களின் நலனுக்காக செயல்படும். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 

இந்த அரசாங்கம் ஏழை மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது. ஊழலுக்காக அரசு மட்டுமின்றி நாட்டு மக்களும் பாடுபட வேண்டும். அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அண்டை  நாடு இந்தியாவிற்குள் கள்ளநோட்டு புழக்கத்தை விட்டு இருப்பது உலகம் அறியும்.

 ஊழலுக்கு எதிராகவும்,கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் இது தான் சரியான தருணம். மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் சமூகத்திற்கான  வறுமை ஒழிப்புக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும். 

முக்கிய விவரங்கள் 
  1. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் 





  1. இன்றிரவு(08.11.2016) 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது 

  2. இதனால் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்.

  3. ரூ.500 ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். 

  4. நவம்பர் 9-ம் தேதி 10ம் தேதிதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காது. 

  5. நவம்பர் 10 முதல் வங்கி அல்லது தபால் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

  6. ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து ரூ.500,ரூ1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்லாம்.

  7. மருத்துவமனைகளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும். 

  8. நவம்பர் 11-ம் தேதிவரை விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்களில் 500 ,1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  9. டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,காசோலை மற்றும் டிடி பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் இல்லை. 


Saturday, October 29, 2016

கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு. வங்கி ATM உட்பட அனைத்து பரிமாற்றங்களிலும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு: 


அதிக மதிப்பு உடைய ரூபாய் நோட்டுகளான ரூ.1000, ரூ 500 ஆகியவற்றின்  போலி கரன்சி நோட்டுகளை, சில விஷமிகள், பொது இடங்களிலும், கடைகளிலும் புழக்கத்தில் விட துவங்கியுள்ளனர். எனவே அதிக மதிப்பு உடைய ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அனைத்து பொது மக்களும்  தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என  ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது.


கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க, ரூபாய் நோட்டுகளில் மேலும் புதிய பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

1000 ரூபாய் நோட்டிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள்:


500 ரூபாய் நோட்டிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள்:


https://paisaboltahai.rbi.org.in என்ற இணையதளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் குறித்த  பாதுகாப்பு அம்சங்களை  முழுமையாக தெரிந்து கொள்ளலாம். அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த பொதுமக்கள் முன்வரவேண்டும்.



Tuesday, May 24, 2016

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : இணையதளங்கள் விவரம் ( SSLC (10th) Results Will Be Announced on 25th May 2016)



10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணிக்கு வெளியிடப் படுகின்றன. 
இந்த முடிவுகளை, 
ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். 
மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை  பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

ஜூன் 1-ந் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து 

ன்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Marksheet) தாங்களாகவே  டவுன்லோடு செய்து கொள்ளலாம். அத்துடன், அன்றைய தினமே மாணவர்கள் பயின்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Friday, May 13, 2016

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், வாக்களிக்க, எந்தெந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் : தேர்தல் ஆணையம்


 

வரும் மே 16 ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள்,  வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) இல்லாவிட்டாலும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள கீழ்க்கண்ட  11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க  முடியும்.

தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்கள் விவரம்

1. கடவுச்சீட்டு (Passport)2. ஒட்டுநர் உரிமம் (Driving License)
3. மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள் (Identity Card provided by central/state public sector employers)4. வங்கி/ அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது) (Bank/Post Office Passbook)
5. நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card)
6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை ( Smart Card Provided by Chief Registrar of NPS)
7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை(MGNREGA Card)
8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை ( RSBY Card etc..)
9. புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம் ( Pension Docuemnts)
10. தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு  (Voters Slip)
11. பார்லி., சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை. ( Identity Card provided for MP/MLA/MLC)

இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர்கள் காண்பித்து தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

 

Tuesday, March 15, 2016

வெயிலின் தாக்கத்தால் மின்கட்டணம் அதிகரிக்கும். சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை:

தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில்  இரண்டு மாதங்களுக்கு  ஒரு முறை மின் பயனீட்டு  கணக்கு எடுக்கிறது. 

வீடுகளில், 1 - 100 யூனிட்; 101 - 200; 201 - 500; 500 யூனிட் மேல் என்ற பிரிவுகளில், மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், 500 யூனிட்டுக்கு கீழ், மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, தமிழக அரசு மானியம் வழங்குகிறது. ஆனால், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு கட்டணமும் செலுத்த வேண்டும். 


வெயில் காரணமாக வீடுகளில்,  மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், 500 யூனிட்களுக்கு அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துவோர், அரசின் மானியத்தை இழக்க நேரிடும். 


கடந்த நிதி ஆண்டில், வீட்டு மின் நுகர்வோர் மூலம், 5,884 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இதில் 500 யூனிட் மேல் உள்ளவர்கள் செலுத்திய கட்டணம் மட்டும், 2,566 கோடி ரூபாய். 

தற்போது, வெயில் காரணமாக, 400 யூனிட் பயன்படுத்தியவர்கள் கூட, 500 யூனிட் மேல் பயன்படுத்தலாம். அவர்களுக்கு, அரசு மானியம் கிடைக்காது. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் குறைந்தபட்சம் மாதம் ரூ. 1000/- வரை சேமிக்க முடியும்' என எரிசக்தி துறை அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Wednesday, December 30, 2015

மகப்பேறு விடுமுறை இனி 26 வாரங்கள் : மத்திய அரசு அறிவிப்பு விரைவில்.....

 
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்  மேனகாகாந்தி  நிருபர்களிடம் கூறுகையில், ''குழந்தை பிறந்த பின், ஆறு மாத காலம் குழந்தைகளை பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், பெண்களுக்கு 26 வார காலம் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தொழிலாளர் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தொழிலாளர் துறை உயரதிகாரி கூறுகையில், 'தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறரை மாதம், மகப்பேறு விடுமுறை அளிப்பதென  தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. விரைவில் அறிவிப்புவெளியாகும்' என்றார்.

Sunday, November 15, 2015

மழைக்காலங்களில் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அவர்களின் சுற்றறிக்கை

 
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அவர்கள்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:


  1.  நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மாணவர்கள் ஆறு, ஏரி, குளங்களுக்கு வேடிக்கை பார்க்கச் செல்ல வேண்டாம். 

  2.  தொடர் மழையின் காரணமாக பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரத்துக்கு மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். 

  3.  மழை காரணமாக சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய அறைகளை பயன்படுத்தக் கூடாது. அவற்றை பூட்டிவைக்க வேண்டும்.

  4. மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின்கசிவு, மின்கோளாறு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துக்கொள்ளலாம். அத்துடன் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு மின் கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

  5. பள்ளி வளாகத்தில் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால், அவை மூடப்பட்ட நிலையில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  6. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். விடுமுறை காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக் கூடாது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  7. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வழியை தவிர்க்க வேண்டும்.

  8. சாலையில் செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடுவதோ அல்லது அருகே செல்வதோ கூடாது. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்கள் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

  9. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.

  10. சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாத வண்ணம் இருக்கின்றனவா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

  11. மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது.

  12. பள்ளியில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  13. பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். பள்ளங்களைச் சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  14. மழையில் இருந்து காத்துக்கொள்ள மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது என்றும் அவ்வாறு ஒதுங்கினால் இடி, மின்னலால் ஆபத்து நேரிடக்கூடும் என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

  15. பருவகால மாற்றங்களால் ஏற்படக்கூடிய டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

Saturday, October 17, 2015

சாலை விபத்தில் தமிழகத்தில் 8 மாதங்களில் 10 ஆயிரம் பேர் மரணம்


போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் விளக்கம் :

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது.

அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து சாலை விரிவாக்கம் செய்வது, புதிய சாலைகளை அமைப்பது, பாலங்கள் கட்டுவது, இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்வதற்கான நடவடிக்கைகள்  என  சாலை விபத்துக்களை குறைக்க தமிழக அரசு சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

என்ன காரணம்?


சாலை விதி மீறல்கள், ஓட்டுநர்களின் கவனக்குறைவு, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுவது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்வது போன்ற காரணங்களால் சாலை விபத்துகள் நடக்கின்றன. 


எப்படி குறைப்பது?
விபத்துகளை குறைக்கும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின் றன. அரசின் நடவடிக்கைகளின் பலனாக 2014-ல் விபத்துகளால் பலியானோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம். 

கடந்த 1-ம் தேதிக்கு பிறகு புதிதாக உற்பத்தி செய்யும் லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டாயம் வேகக்கட்டுபாட்டு கருவியை பொருத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை பெரும்பாலான மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டன.


Link :  கனவுகளை நொடிப்பொழுதில் தகர்க்கும் சாலை விபத்துகளை தவிப்பது எப்படி?


தமிழகத்தில் இந்த ஆண்டு 

நம்பிக்கை
 
தமிழகத்திலும் இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. முறையாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கும் வகையில் கணினி மூலம் கண்காணிக்கும் வசதி 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விரைவில் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களால் வரும் நாட்களில் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகள் குறையும் என நம்பு கிறோம். 

Wednesday, August 26, 2015

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 - National Population Survey 2011( Religious Survey)

மக்கள் தொகை கணக்கெடுப்பு  2011
(Religion Wise)

S.No
Religion
2001
(in Crore)
2001
%

2011
(in Crore)
2011
%

Increase (+) / Decrease (-)
1
Hindu
82.75
80.5%
96.63
79.8%
-
2
Muslim
13.8
13.4%
17.22
14.2%
+
3
Christian
2.40
2.3%
2.78
2.3%
No Change
4
Sikh
1.92
1.9%
2.08
1.7%
-
5
Buddhist
.79
0.8%
.84
0.7%
-
6
Jain
.42
0.4%
.45
0.4%
No Change
7
Others
.66
0.6%
.79
0.7%
+
8
Not Related to Any Religion
.07
0.1%
.29
0.2%
+



100%

100%


Thursday, August 20, 2015

கல்விக்கடன் பெற புதிய இணையதளம் துவக்கம் - மத்திய அரசு (NEW WEBSITE FOR EDUCATIONAL LOAN)


மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் 2015 பட்ஜெட் கூட்டத் தொடரில்  கல்வி கடன் பெறும் மாணவர்களின் வசதிக்காக  புதிய இணைதளம் துவக்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார்.

தற்போது இந்த இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இந்த இணையத்தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து, ஆன்லைன் மூலமாக எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். 

இணையதள முகவரி

Sunday, August 16, 2015

, 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்


உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும்  இந்தியர்கள்  



தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின்  முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, Google தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) 10.08.2015 அன்று சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

Google நிறுவனர் மற்றும்  தலைமை நிர்வாக அதிகாரி  Larry Page, கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைக்கும் பிரதான நிறுவனமாக 'Alphabet' (https://abc.xyz/) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை உருவாக்கி உள்ளார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக  தன்னை நியமித்துக் கொண்ட லாரி பேஜ், 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்க வாழ் தமிழரான சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்களை நியமித்துள்ளார்.