10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணிக்கு
வெளியிடப் படுகின்றன.
இந்த முடிவுகளை,
ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
மாணவர்கள் தங்களது பதிவு
எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும்
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 1-ந் தேதி முதல்
தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து
என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Marksheet) தாங்களாகவே டவுன்லோடு செய்து கொள்ளலாம். அத்துடன், அன்றைய தினமே மாணவர்கள் பயின்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத
இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை,
விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு
வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.