கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது,
கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
- இறையனார், குறிஞ்சித்தினை
மயிலைப் போல மென்மையானவள்,
அழகிய முத்துப் பற்களை உடையவள்,
என் இதயத்தில் பொருந்தி,
என்மீது நட்பும் உரிமையும் கொண்டவள்
என் உயிரைக் கவர்ந்த,
என்னவளின் கூந்தலிலே வீசுகின்ற மணத்தைப் போல,
நீ அறிந்த மலர்களிலே மணமுடைய மலர்களும் உள்ளனவா?