Showing posts with label SBI. Show all posts
Showing posts with label SBI. Show all posts

Tuesday, November 15, 2016

ATM களில் விரைவில் ரூ.20, 50 நோட்டுக்கள்: எஸ்பிஐ தலைவர்

பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், விரைவில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் விநியோகம் துவங்கும் என ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும். மத்திய அரசு அறிவிப்பு

வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

டில்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

வங்கிக்கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கூட்ட நெரிசல் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது. வங்கியில் நெரிசலை குறைக்க, தேர்தலின் போது மை வைக்கப்படுவது போல், பணம் வாங்க வருபவர்களுக்கு விரலில் மை வைக்கப்படும். பணம் வழங்கும் கவுன்டரில் பணம் வாங்குவோரின் விரலில் மை வைக்கப்படும். பெருநகரங்களில் இன்று நடைமுறைக்கு வந்தது.


Sunday, November 22, 2015

SBI - 5000 Clerk's , 2000 Probationary Officers Recruitment- Will be Announced Soon (End of the Nov.2015)

 

5000 Clerk's , 2000 Probationary Officers பணிகளுக்கு,   பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India - SBI ) விரைவில் பணியாளர்களை நியமனம் செய்யவுள்ளது.  

நடப்பு நிதியாண்டில் 700 புதிய வங்கிக் கிளைகளைத் திறக்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எஸ்பிஐ வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 17000 ஆக  உயரும். இந்த புதிய வங்கிக் கிளைகளில் பணியாற்றுவதற்காக 7000 புதிய வங்கி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தற்போது பாரத ஸ்டேட்  வங்கியில் 2 லட்சம் ஊழியர்கள்  பணிபுரிகின்றனர்.  இந்த ஊழியர்களில் 45 ஆயிரம் மாற்றுத் திறனாளி ஆண் ஊழியர்கள் , 2,500 மாற்றுத் திறனாளி பெண் ஊழியர்கள்  அடங்குவர். இதன்மூலம்  வங்கித்துறையில்  அதிக பணியாளர்களை கொண்ட  வங்கி என்ற  பெருமையை பாரத ஸ்டேட் வங்கி பெற்றுள்ளது. 



Tentative  schedule

Serial
Event
Date
1
Online registration of application form begins
4th week of November 2015
2
Online registration of application form ends
3rd  week of December 2015
3
Last date to reprint application form
3rd  week of December 2015
4
Online fee payment
4th week of November 2015 to 3rd  week of December 2015
5
Offline fee payment
4th week of November 2015 to 3rd  week of December 2015
6
Admit card release
End of December 2015
7
Online written exam
January 2016
8
Result declaration
February 2016

Tuesday, October 13, 2015

வங்கிகளின் இணைய சேவைக்கு (Net Banking) கட்டணம்



வங்கிகளின் இணைய சேவைக்கு (Net Banking) அக்டோபர்  1 முதல் கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது.
வங்கிகளுக்கு சென்று பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க ATM மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ATM மூலம் ஐந்து முறை,  பிற வங்கி ATM   மூலம் மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். 

இதற்கு மேல் ATM  சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இதை தொடர்ந்து, தற்போது இலவசமாக இருக்கும் வங்கிகளின் இணைய சேவைக்கும்(Net Banking)  கட்டணம் வசூலிக்க வேண்டும் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.

Friday, September 11, 2015

வங்கிகளுக்கு 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை நாளை முதல் அமல்




 



நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் அமலாகிறது.



இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும், வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையை மாற்று முறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.



அதன்படி, இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 12) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இதேபோன்று 4-ஆவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 26) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.

2, 4-ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதால், அனைத்து வங்கிகளும் மற்ற சனிக்கிழமைகளில்  முழுநேரம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.