வாழையும், மோரிஸ் வாழையும்
எவ்ளோ அழகா பளபளப்பா இருக்கு இல்ல?
நீங்க இப்படிப்பட்ட வாழை பழத்தை தான் செலக்ட் பண்ணி வாங்குவீங்களா?
அப்படின்னா கேன்சர் கூட வரலாம்.
எப்படி?
ஏன் ?
- வாழைப் பழத்தில் "ப்ரக்டோஸ், க்ளூக்கோஸ், சுக்ரோஸ்' ஆகிய மூன்று வித சர்க்கரைகள் உள்ளன.
- இதில் உள்ள ஆன்டாசிட் நெஞ்சு எரிச்சலை சரிப்படுத்துகிறது.
- பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- வைட்டமின் B6 சர்க்கரை அளவ சமநிலையில் வைக்கிறது.
- இதில் உள்ள நார்ச்சத்து (Fiber) குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- இதில் உள்ள ட்ரைப்டோபென் (Tryptophan), இதை உட்கொண்டவுடன் செரோடனின் ( Serotonin ) ஆக மாற்றப்படுகிறது. இது மன அழுத்தத்தை குறைப்பதில் மிகச்சிறந்த மருந்தாகும்
- வாழைப் பழம் ஒரு ஆண்மை பெருக்கி.
- மலச் சிக்கலை போக்கக் கூடியது
- வாழை இலை ஒரு நச்சு முறிப்பான்.
வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன.செவ்வாழை, பச்சை வாழை (மோரிஸ்),ரஸ்தாளி, மொந்தன், பேயன், கற்பூர வாழை,நேந்திரம் என்பன அவற்றுள் பிரபலமான சில வகைகள் ஆகும். எளிதில் கிடைக்கக் கூடியது. விலை மலிவானது. அனைவரும் விரும்பி உண்ணும் பழமாகவும் வாழைப்பழம் இருக்கிறது.
ஆனால் செயற்கை முறையில் எதிலின்(Ethelin) வாயுவைக் கொண்டு பழுக்க வைக்கப் படும், நீளமான, பளபளப்பான மோரிஸ் பச்சை வாழைப் பழங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இப்போதெல்லாம் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு மரபணுமாற்று பெரிய மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடவேண்டாம் என்று மருத்துவர்களே எச்சரித்து அனுப்பும் நிலை உள்ளது.
இத்தகைய மரபணு மாற்று மஞ்சள்வாழைப்பழங்களை உட்கொள்வதால் தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரகக்கற்கள், அடிக்கடி தலைவலி, உணவு விஷத் தன்மை ஆதல், ஏன் நாட்பட்ட அளவில் தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உணவுக்குழல் மற்றும் குடல் புற்று நோய் கூட வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .