Showing posts with label Indian Currency Security Features. Show all posts
Showing posts with label Indian Currency Security Features. Show all posts

Saturday, October 29, 2016

கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு. வங்கி ATM உட்பட அனைத்து பரிமாற்றங்களிலும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு: 


அதிக மதிப்பு உடைய ரூபாய் நோட்டுகளான ரூ.1000, ரூ 500 ஆகியவற்றின்  போலி கரன்சி நோட்டுகளை, சில விஷமிகள், பொது இடங்களிலும், கடைகளிலும் புழக்கத்தில் விட துவங்கியுள்ளனர். எனவே அதிக மதிப்பு உடைய ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அனைத்து பொது மக்களும்  தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என  ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது.


கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க, ரூபாய் நோட்டுகளில் மேலும் புதிய பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

1000 ரூபாய் நோட்டிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள்:


500 ரூபாய் நோட்டிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள்:


https://paisaboltahai.rbi.org.in என்ற இணையதளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் குறித்த  பாதுகாப்பு அம்சங்களை  முழுமையாக தெரிந்து கொள்ளலாம். அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த பொதுமக்கள் முன்வரவேண்டும்.



Tuesday, September 8, 2015

ரூ.500, ரூ.1,000 தாள்களில் 7 புதிய மாற்றங்கள்: ரிசர்வ் வங்கி திட்டம் ( RBI Plans 7new security features in 500,1000 Rs.)



கள்ள நோட்டுப் புழக்கத்தைத் தடுக்க ரூ.500, ரூ.1,000 தாள்களில் 7 புதிய மாற்றங்கள் செய்ய  ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது

கடந்த சில மாதங்களாக இந்திய சந்தை முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் தொடர்ந்து புகார் வந்து வண்ணம் உள்ளன. மேலும் இக்கள்ள நோட்டுகள்  வங்கி .டி.எம்.களிலும்  இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே ரூ.500, ரூ.1,000 தாள்களில் 7 புதிய மாற்றங்கள் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. உதாரணமாக  மேலே படத்தில் உள்ள ரூபாய் நோட்டில் உள்ளது போல வரிசை எங்கள் ஒரே அளவில் இல்லாமல் முதல் 3 எண்-எழுத்துக்கள்(Alpha Numerals) ஒரே அளவிலும், அடுத்த 6 எங்கள் வளரும் நிலையிலும் (Rapid Growth) இருக்கும்.

மேலும் இதேபோல புதிதாக செய்யப்படவுள்ள மாற்றங்கள் அனைத்தும் சாதாரண மக்களாலேயே நல்ல ரூபாய் நோட்டுகளை அடையலாம் காணவல்ல வகையில் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.