Saturday, October 17, 2015

சாலை விபத்தில் தமிழகத்தில் 8 மாதங்களில் 10 ஆயிரம் பேர் மரணம்


போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் விளக்கம் :

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது.

அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து சாலை விரிவாக்கம் செய்வது, புதிய சாலைகளை அமைப்பது, பாலங்கள் கட்டுவது, இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்வதற்கான நடவடிக்கைகள்  என  சாலை விபத்துக்களை குறைக்க தமிழக அரசு சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

என்ன காரணம்?


சாலை விதி மீறல்கள், ஓட்டுநர்களின் கவனக்குறைவு, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுவது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்வது போன்ற காரணங்களால் சாலை விபத்துகள் நடக்கின்றன. 


எப்படி குறைப்பது?
விபத்துகளை குறைக்கும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின் றன. அரசின் நடவடிக்கைகளின் பலனாக 2014-ல் விபத்துகளால் பலியானோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம். 

கடந்த 1-ம் தேதிக்கு பிறகு புதிதாக உற்பத்தி செய்யும் லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டாயம் வேகக்கட்டுபாட்டு கருவியை பொருத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை பெரும்பாலான மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டன.


Link :  கனவுகளை நொடிப்பொழுதில் தகர்க்கும் சாலை விபத்துகளை தவிப்பது எப்படி?


தமிழகத்தில் இந்த ஆண்டு 

நம்பிக்கை
 
தமிழகத்திலும் இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. முறையாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கும் வகையில் கணினி மூலம் கண்காணிக்கும் வசதி 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விரைவில் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களால் வரும் நாட்களில் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகள் குறையும் என நம்பு கிறோம்.