தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான
டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, அருள்மொழி
நேற்று பதவி ஏற்றார். அரசு
இ-சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அவர் அளித்த பேட்டி:
போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள், தாமதமின்றி வெளியிடப்படும். அரசு துறை காலியிடங்களை
நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும்.
டி.என்.பி.எஸ்.சி.,யின் இணைய வழி சேவை அனைத்தும், மிகக் குறைந்த செலவில் கிடைக்க, இ-சேவை மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.நிரந்தர பதிவு, தேர்வு
விண்ணப்பம், அதில் மாற்றம், நகல்
பெறுதல் போன்ற சேவைகளுக்கு,
அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை
மையங்களை அணுகலாம். அதற்கு, கட்டணம்
உண்டு. இந்த சேவைகள்,
எல்காட் நடத்தும், இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.