Wednesday, October 28, 2015

மார்ச் 2016: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் கடினமானவையாக இருக்கும்

 

மார்ச் 2016ல்  நடைபெற  உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு களுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியை  தேர்வுத் துறை துவங்கியுள்ளது.  வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு  பாடங்களின் உள் அம்சங்களில் இருந்து புதிய கேள்விகள் கேட்குமாறு  உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே  மார்ச் 2016ல்  நடைபெற  உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு வினாத்தாட்கள்  கடினமானவையாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.