Thursday, October 15, 2015

ஆசிரியர் குறை தீர்க்க கமிட்டி அமைக்க உத்தரவு

பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம்:

·  பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்துஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும்.

·  அதில்குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால்வட்டார வள மைய அதிகாரி தலைமையிலானவட்டார கமிட்டி விசாரித்து, 30நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்.

·  அதற்கு மேல்கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் மாவட்ட கமிட்டிமூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடிஆசிரியர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

· இறுதியாகமாநில அளவில்தொடக்கக் கல்வி இயக்குனரை தலைவராக கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இந்தக் கமிட்டிஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடிகுறைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

· ஆசிரியரின் பணி விதிமுறைகள்பதவி உயர்வுநிதி சார்ந்த கோரிக்கைகள்ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனை தொடர்பான குறைகளைஇந்தக் கமிட்டிகள் விசாரிக்காது. 

·         மத்திய மனிதவள அமைச்சகத்தின் இந்த உத்தரவால்எந்த பலனும் ஏற்படாது எனஆசிரியர்கள் குறை கூறி உள்ளனர். 

இதுகுறித்துபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: 
ஏற்கனவேஅனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தில்கிராம கல்விக் குழு என்ற குறை தீர்ப்பு கமிட்டி இருக்கிறதுஆனால்அது முறையாக செயல்படவில்லை என்ற குறையே இன்னும் போக்கப்படவில்லை.
பணி விதிமுறைகள்பதவி உயர்வுஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை ஆய்வு செய்யாமல்,ஆசிரியர்களின் குறைகளை எப்படி தீர்க்க முடியும்இவ்வாறு அவர் கூறினார்.