Thursday, August 6, 2015

இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும், ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தமிழகம் முழுவதும் 333 இடங்களில் பொது இ-சேவை மையங்களை அமைத்துள்ளது. 
தலைமைச் செயலகத்தில் ஒன்றும், 264 தாலுகா அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு மையமும் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள், 50 கோட்ட அலுவலகங்களில் தலா ஒரு பொது இ-சேவை மையமும், மதுரை மற்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் தலா ஒரு மையமும் என மொத்தம் 333 மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அமைத்துள்ளது.


ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கி தொலைத்தவர்கள் பொது இ-சேவை மையத்தில் ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை பெறலாம். 


ஆதார் அட்டை பெறுவதற்கு கண்விழி-கைரேகை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையத்துக்கு சென்று ரூ.40 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை பெறலாம்.