Thursday, August 6, 2015

Zen Parables


 Zen  Parables 
 
அற்புதம் 


ஜென் குரு பாங்கெய் அவர்கள்  ஆலயத்தில் மக்களுக்கு அருளுரைகளை வழங்கி வந்தார்.

அவரைக் காண வந்த  ஷின்ஷு போதகர் ஒருவர்,  ஜென் குருவின் அருளுரைகளைக் கேட்கத் திரளாக மக்கள் வந்து கூடுவதைக் கண்டு பொறாமை கொண்டார்.
 
ஜென் குருவிடம் வாதம் செய்து அவரைச் சிறுமைப் படுத்தவேண்டும் என்பது அவரது எண்ணம்.

ஜென் குரு உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஷின்ஷு போதகர் பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஜென் குரு தனது பேச்சை நிறுத்தி  அவரிடம்  "உங்களுக்கு என்ன பிரச்சினை என நான் தெரிந்து கொள்ளலாமா ?" எனகேட்டார்.

ஷின்ஷு போதகர் குருவை நோக்கி, "முன்பொரு நாள், எங்கள் குருவானவர் ஒரு கரையிலும், அவரது சீடர் எதிர்க் கரையிலும் நின்றபோது ஓர் அற்புதம் புரிந்தார். 

கையில் ஒரு எழுதுகோலுடன் எங்கள் குரு இக்கரையில் இருக்க , அவரது சீடர்  எதிர்க்கரையில் தாளினை வைத்திருந்தார்.

அப்போது எங்கள் குருவானவர் "அமிதா" என்ற புனித நாமத்தை வானத்தின் வழியே எழுதி அனுப்பினார். அது அக்கரையில் சீடரின்  கையில் இருந்த தாளில் எழுதப்பட்டது.

இது போன்ற  அற்புதங்களை நிகழ்த்த உங்களால் முடியுமா?" என்று கேட்டார்.

ஜென் குரு இப்படி பதில் கூறினார்.

"ஒருவேளை உனது நரி அப்படிப்பட்ட வித்தையைச் செய்து காட்டி இருக்கலாம். ஆனால், அதற்குப் பெயர் ஜென் இல்லை!

நான் நிகழ்த்தும் அற்புதம் என்னவென்றால் எனக்குப் பசி ஏற்படும்போது சாப்பிடுவேன். எனக்குத் தாகம் எடுக்கும்போது தண்ணீரைக் குடிப்பேன்."

 





ஞானம்
 

ஜென் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தத்துவ ஞானி ஒருவர் நெடுங்காலம் ஜென் நூல்களை நன்கு பயின்று வந்தார். 

ஒரு நாள், திடீரென்று அவருக்கு உயரிய ஞானம் கிடைத்தது.

உடனே அவர் தனது எல்லாப் புத்தகங்களையும் கொல்லைப் பக்கம் கொண்டு சென்று குவித்தார். 

அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினார்.