Friday, June 26, 2015

CPS நிதியில் 25% தொகையை 10 வருடம் பணிமுடித்தவர்கள் திரும்ப பெறலாம் - பயனுள்ள அறிவிப்பா?

தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த அனைவரும் CPS திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளனர். 
CPS  கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஊழியர் ஓய்வுபெறும்போது 60%  திருப்பிக் கொடுக்கப்படும். எஞ்சிய 40%  தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். 

பழைய ஓய்வூதிய திட்டமான GPF முறையில், ஊழியர்கள் தங்களின் GPF நிதியிலிருந்து  6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கடன்பெறலாம். கடனை திருப்பி செலுத்திய பிறகு மீண்டும் கடன் பெறமுடியும். மேலும் 15 ஆண்டுகள்  பணி முடித்த ஒருவர் GPF நிதியில் இறுதித்தொகையின் ஒரு பகுதியை (Part Final Withdrawal) திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் GPF போன்று கடன்பெறும் வசதியோ, பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியோ இல்லாமல் இருந்துவந்தது.
  
தற்போது CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால் தங்களின் CPS நிதியில் இருந்து 25% தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 
ஆனால்  இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி, 
  • CPS சந்தாதாரர்கள் தங்கள் பணிக் காலத்தில் 3 முறை சிபிஎப் தொகையை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். 

  • பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு, வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, மருத்துவ செலவினங்களுக்கு (புற்றுநோய், சீறுநீரக குறைபாடு, இதய நோய் போன்றவை) இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • ஒவ்வொரு முறைக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்.இருப்பினும், மருத்துவ செலவினத்துக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.