Tuesday, June 23, 2015

தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் DEO பதவி உயர்வு


பள்ளிக்கல்வித் துறையில்  காலியாக உள்ள 60 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, தலைமை ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில்  நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களில், மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியலை மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.