Wednesday, June 10, 2015

நர்ஸ் தகுதித் தேர்வு - 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

 

 அரசு மருத்துவமனைகளில்  தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள 451 ஆண் நர்ஸ்கள் உட்பட  7243 நர்ஸ்கள் பணியிடங்களுக்கு  40 ஆயிரம் பேர்  ’ஆன் லைன்’ மூலம் விண்ணப்பித் துள்ளனர்.  இதற்கான மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு ஜூன் 28ம் தேதி நடக்க உள்ளது.


இதற்கான பணிகளில்  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக  நர்ஸ் பணிக்கு  அரசு தகுதித் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.