Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Wednesday, April 29, 2015
PAY EXPRESS ORDER FOR ALL TEMPORARY POST FOR THE MONTH OF APRIL 2015
Click Below to Download the
Pay Express Order for All Temporary Post
Pay Express Order for Computer Instructor will be issued on 30.04.2015
The Following Orders are published for G.O. References only.
Vocational Instructor Pay order for Jan to March 2015 for G.O. References only.
Labels:
PAY / PAYROLL
பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன்
125வது பிறந்த நாள்
(29.04.1891 - 21.04.1964)
பைந்தமிழ்த் தேர்ப் பாகன்; அவனொரு
செந்தமிழ்த் தேனீ; சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய ருசியும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ்இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்.
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ்எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்.
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
7243 நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ( 7243 NURSE RECRUITMENT - TMRB ANNOUNCED)
தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (MRB) 7 ஆயிரத்து 243 நர்ஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியிட்டு உள்ளது. இதில் 6 ஆயிரத்து 792 இடங்கள் பெண்
விண்ணப்பதாரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிகளுக்கு 1-7-15 தேதியில் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜெனரல் நர்ஸ் (ஆண், பெண்) 3 ஆண்டு படிப்பு படித்தவர்கள், நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.சி.-ஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு 1-7-15 தேதியில் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜெனரல் நர்ஸ் (ஆண், பெண்) 3 ஆண்டு படிப்பு படித்தவர்கள், நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.சி.-ஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
Notification ஐ டவுன்லோட் செய்ய கீழே கிளிக் செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in வலைத்தளத்தை அணுகவும்.
Labels:
RECRUITMENT'S
Monday, April 27, 2015
SBI PO Recruitment for 2,000 posts - Last Date 02.05.2015
SBI RECRUITMENT
State Bank of India is looking for 2,000 Probationary Officer posts. The interested candidates who meet the eligibility criteria can submit the application forms by May 2..
Pay scale:
The starting basic pay is Rs 16,900 (with 4 increments) in the scale of Rs 14,500-600/7-18,700-700/2-20,100-800/7-25,700 applicable to Junior Management Grade Scale I. The official will also be eligible for D.A, H.R.A & C.C.A as per rules in force from time to time. The compensation per annul at Mumbai is around Rs 8,55,000.
The breakup of monthly compensation is as under:
Cash Component: 36,046
Bank's contribution to PF: 1,690
Housing (Lease Rental): 29,500
Perquisites (Conveyance,Newspapers,Entertainment,House & Furniture Maintenance etc): 4,130
In addition, the officers are also entitled to other benefits like:
(i) Medical Aid for self (100 per cent) and for family (75 per cent)
(ii) Home Travel Concession/Leave Fare Concession
(iii) Concessional Interest Rates for Housing/Car/Personal Loans
Eligibility:
The candidates
applying for the post should have completed their graduation level exams in any
discipline from a recognised university or any equivalent qualification
recognized as such by the central government. Those who are in the final
year/semester of their graduation may also apply provisionally, subject to the
condition that, if called for interview, they will have to produce proof of
having passed the graduation examination on or before September 1, 2015.
Besides, the candidates should not be less than 21 years old and more than 30
years old as on April 1, 2015.
for more information,
Recruitment of
Probationary Officers in State Bank of India
Important
Events
|
Dates
|
Commencement of on-line registration of application
|
13/04/2015
|
Closure of on-line Registration of application
|
02/05/2015
|
Closure for editing application details
|
02/05/2015
|
Last date for printing your application
|
17/05/2015
|
Online Fee Payment
|
13/04/2015
to 02/05/2015
|
Saturday, April 25, 2015
முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) வெளியீடு
BT TO PG PROMOTION PANEL FINAL
AS ON 01.01.2015
AS ON 01.01.2015
பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) திரு மு. பழனிச்சாமி அவர்களால் 23.04.2015 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நீக்கம், சேர்க்கை, திருத்தம் ஆகியவைகளை செய்து 13.05.2015க்குள் ஒப்படைக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய படங்களுக்கு இப்பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
PROMOTION PANEL பட்டியலை கீழே DOWNLOAD செய்யவும்.
பொறியியல் விண்ணப்பம் மே 6 , மருத்துவம் மே 11 - தேதிகள் அறிவிப்பு (Engineering May 6 , Medical May 11 - Date Announced)
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளதால் Engineering படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 6ம் தேதியும், MBBS, BDS படிப்புகளுக்கான
விண்ணப்ப வினியோகம்
மே 11ம் தேதியும் துவங்குகின்றன.
மெடிக்கல் விண்ணப்பங்கள்
மருத்துவக்கல்வி இயக்குனர் Dr.S.Geethalakshmi,M.D.,Ph.D. அவர்கள் கூறியதாவது: MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் 19 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை பல் மருத்துவக் கல்லூரியிலும் கிடைக்கும். http://www.tnhealth.org/ இணையதளத்தில்
இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தம் 40
ஆயிரம் விண்ணப்பங்கள் தரப்பட உள்ளன. மே 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே 29ம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 12ல், கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு,
15 சதவீத இடங்கள் (383) போக, 2,172 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கிறது. ஓமந்தூரார்
புதிய அரசு கல்லூரியில்
100 இடங்களுக்கான அனுமதி
எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜினீயரிங் விண்ணப்பங்கள்
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான
விண்ணப்ப வினியோகம், மே 6ம் தேதி முதல் சென்னையில் சென்னையில் Anna University-Guindy, Govt Polytechnic
College-Purasaivakkam, MIT-Chrompet, மற்றும்
Bharathi Womens College-Broadway ஆகிய நான்கு இடங்களிலும்,
தமிழகம் முழுவதும், 60 இடங்களிலும் வினியோகம் செய்யப்படும். 2.40
லட்சம் விண்ணப்பங்கள் தரப்படும். அண்ணா பல்கலை வளாகத்தில்
29ம் தேதி வரையும், பிற இடங்களில் 27ம் தேதி வரையும் கிடைக்கும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 29ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பத்தின் விலை 500
ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 250 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்ஜினியரிங் படிப்புக்கு, அண்ணா பல்கலையின் 16 அரசு கல்லூரிகளும், 596 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. இதில், 2.30 லட்சம் இடங்கள் உள்ளன.
Friday, April 24, 2015
May 7th - 12th & May 21st - 10th வேற என்ன? Result தான்.
மே மாதம் 7-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளும், மே 21-ம் தேதி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. மே 7-ம் தேதியன்று காலை 10 மணிக்கு பன்னிரன்டாம்
வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதியன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட
உள்ளன.
தேர்வு முடிவுகள் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
Labels:
RESULT
Thursday, April 23, 2015
அரசு பள்ளிகளில் 4360 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 24.04.2015 முதல் விண்ணப்பம் - 4360 LAB ASST POST ON GOVT SCHOOLS - APPLY THROUGH ONLINE
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய
4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை
எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக
விண்ணப்பிக்க 24– ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 06.05.2015
மேலும் விவரங்களுக்கு www.tndge.in வலைதளத்தை பார்க்கவும்
வேலூர் , திருவள்ளூர் மாவட்ட தினத்தந்தி விளம்பரங்களை கீழே பார்க்கவும்
மேலும் விவரங்களுக்கு www.tndge.in வலைதளத்தை பார்க்கவும்
வேலூர் , திருவள்ளூர் மாவட்ட தினத்தந்தி விளம்பரங்களை கீழே பார்க்கவும்


Wednesday, April 22, 2015
அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - DA Hike to 6% - DOWNLOAD THE G.O.
6% சதவீதம் அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம்
அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு
ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு
ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி
முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. ரூ.366 முதல் ரூ.4620 வரை அகவிலைப்படி
உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள்
பயன்பெறுவார்கள். அரசாணையை பெற இங்கே கிளிக் செய்யவும்.
Labels:
TEACHERS NEWS
உங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திடுங்கள் - SEED YOUR AADHAAR NO. WITH VOTERS ID(EPIC) CARD
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்
19 April 2015 , 26 April 2015 , 3 May 2015, 10 May 2015, 17 May 2015
அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும்
ஆன்லைனில் உங்கள் வீட்டிலிருந்தே வாக்காளர் பட்டியல் மற்றும் EPIC விவரங்களை சரி செய்ய,
கிளிக் செய்யவும்.
ஆன்லைனில் உங்கள் வீட்டிலிருந்தே ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திட
http://elections.tn.gov.in/Aadhaar_2015.htm
ஐ கிளிக் செய்யவும்.
மேலே வருகின்ற திரையில் குறிப்பிட்ட நபரின் மொபைல் எண்ணிலிருந்தே எளிமையாக ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
Labels:
NEWS FOR SOCIETY
கல்லூரிகள், பள்ளிகளில் ஜூன் 21ல் சர்வதேச யோகா தினம் கொண்டாட உத்தரவு
கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில், ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினத்தை கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 செப்., 27ம் தேதி, ஐ.நா., பொது சபை கூட்டத்தில், பிரதமர்
மோடி பேசியபோது, சர்வதேச யோகா தினத்தை, ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாட
கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக
ஐ.நா., அறிவித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகப் பரிந்துரையில், UGC மற்றும் CBSE ஆகியவை, தங்கள்
கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி
நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளன.
அதில் "ஜூன் 21ம் தேதி, கல்வி நிறுவனங்களில் சர்வதேச
யோகா தினம் கொண்டாட வேண்டும். ஐ.நா., சபை அறிவிப்புக்குப் பின் முதல்
முறையாக, யோகா தினம் கொண்டாட உள்ளதால், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள்
விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். யோகா குறித்த பயிற்சிகள், போட்டிகள், விழிப்புணர்வுப் படங்கள், வீடியோ
கிளிப்பிங்ஸ் பாடல்கள் போன்றவற்றை உருவாக்கலாம். இதற்கான ஆயத்தப் பணிகளை
தற்போதிருந்தே துவங்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் யோகா குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்" என
கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை
தமிழகத்தில் புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை
என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் மூன்று நாள் சர்வதேச
மாநாடு சென்னையில் துவங்கியது. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த
நிகழ்ச்சியில், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் தலைவர் சந்தோஷ்
பாண்டா உட்பட பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சந்தோஷ் பாண்டா அவர்கள் பேசும்போது,
நாட்டிலேயே, தமிழகத்தில்தான் அதிக
பி.எட்., கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் இனி புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு
மத்திய கல்வியல் கவுன்சில் அனுமதி அளிக்காது. தரமற்ற கல்லூரிகள்
அதிகமாவதைத் தடுக்கவும், தரமான கல்லூரிகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை
எடுக்கப்படுகிறது. புதிய கல்லூரி தேவை என்று, மாநில ஆசிரியர் கல்வியியல் பல்கலையில்,
தடையில்லா சான்று அளித்தால் மட்டுமே, அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Monday, April 20, 2015
விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து, ஒழுங்கு நடவடிக்கை
பத்தாம் வகுப்பு விடைத்தாள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம்
ரத்து செய்யப்படும் எனவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என
கல்வித் துறை எச்சரித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று
(20.04.2015)துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75
மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
திருத்தம் தொடர்பாக, அனைத்து Govt, Aided, Matric, Anglo Indian பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். தேர்வுத்துறை
இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த
சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின் விவரம் பின்வருமாறு
விடைத்தாள் திருத்தும் பணி 20.04.2015 ல் துவங்கி 25.04.2015க்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. எனவே ஒரு ஆண்டுக்கு மேலாக, 10ம்
வகுப்பு பாடம் நடத்தி அனுபவம் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு சம்மந்தப்பட்ட பள்ளிகள் விடுவித்து அனுப்ப வேண்டும்.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத
ஆசிரியர்களுக்கு ஊதியம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களின் விடுமுறை நாள்,
ஆப்சென்ட் ஆக கணக்கிடப்படும்.
அவர்களது விடுமுறை நாள், மொத்த விடுமுறையில் வரைமுறை செய்யப்படாது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும்
எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ல் வெளியிடப்படலாம் என அறிவிப்பு
+2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியாகலாம் என, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மே 22ம் தேதி முதல், மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணி
துவங்கும்.இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாவதால், அதன்
தயாரிப்புப் பணி அடிப்படையில், ரிசல்ட் வெளியாகும் தேதி முடிவாகும்.
எப்படியும், மே 4ம் தேதி முதல் 7ம் தேதிக்குள் ரிசல்ட் வெளியாகலாம்.பெரும்பாலும், மே 7ம் தேதியே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
மே 8 முதல் 18 வரை B.Ed தேர்வுகள்
பி.எட்., படிப்புக்கான
தேர்வுகள் மே 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடக்கின்றன. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு.
வ.எண்
|
தேதி
|
பாடம்
|
1
|
மே
8ம் தேதி
|
இந்திய
சமூகத்தில் கல்வி
|
2
|
மே
9ம் தேதி
|
கற்றல்
உளவியல் மற்றும் மனித வளர்ச்சி
|
3
|
மே 11ம் தேதி
|
கல்வி
மற்றும் பாடத்திட்ட மேம்பாடு
|
4
|
மே
12ம் தேதி
|
விருப்ப
பாடங்கள்
|
5
|
மே, 13, 14ம் தேதி
|
மொழிப்பாடங்களுக்கான
தேர்வுகள்
|
6
|
மே
15ம் தேதி
|
M.Ed மாணவர்களுக்கான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி
அறிவியல்,
புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம்
மற்றும் கணினி அறிவியல்
|
7
|
மே
16ம் தேதி
|
B.Ed பட்டதாரிகளுக்கான கணிதம், உடற்கல்வி அறிவியல், உயிரி
அறிவியல், வரலாறு, புவியியல்
மற்றும் கணினி
அறிவியல் பாடங்கள்
|
8
|
மே
18ம் தேதி
|
M.Ed முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, மேல்நிலைப் பள்ளிக்கல்வி தொடர்பான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம்
மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள்
நடக்கும்.
|
Saturday, April 18, 2015
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது?
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான
விண்ணப்பம் வினியோகிக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை
என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக்
கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன. இதில், 2,176
எம்.பி.பி.எஸ். இடங்கள், 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், மே 11, 12ம் தேதிகளில் துவங்கும் என எதிர்பார்க்கப் பட்டது.
இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த
ஆண்டு மே 14ல், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப
வினியோகத்தை துவக்கினோம். இந்த ஆண்டு பிளஸ் 2
தேர்வு முடிவு வெளியாவதைப் பொறுத்தே, விண்ணப்ப வினியோக தேதியை முடிவு
செய்வோம்" என்றார்.
+2 தேர்வு முடிவுகள் மே 16 அல்லது மே 17ல் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Friday, April 17, 2015
பள்ளி மாணவர்களுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் Insight அறிவியல் கருத்தரங்கம் - அனுமதி இலவசம்
Advertisement
Insight 2015
Insight is back this year too on May 4, 5 and 6 from 9.00 A.M to 4.00
P.M. in the Department of Information Science and Technology, CEG
Campus, Anna University. We invite students of IX-XII to participate.
The workshop is conducted free of cost.
About Insight
This workshop aims at presenting the scientific thought process that
has been followed for centuries in our country. All major areas of study
from Mathematics and Astronomy to Logic and Grammar are influenced by
this thought process. The highlight of this thought process is that it
improves the ability to think differently, yet quickly; and communicate
precisely. This is embedded in the techniques used for Mathematics,
Logic and Astronomy. This workshop will train the students in these
techniques through short-cuts and mental calculations that the students
can effectively use in their day-to-day activities. In turn, these
techniques will enhance in depth understanding of academics, lateral
thinking and memory.
To Register Insight 2015 Click Here
TOPICS IN THIS WORKSHOP
Indian Mathematics- Place Value System
- Arithmetic – multiplication, squaring, division, square-root, divisibility and other short-cuts
- Algebra – solution of simultaneous and quadratic equations
- Introduction to Tarka
- Classification from Tarka perspective
- Intellect, apprehension, perception and inference
- Inference structure
- Defective reasoning
- The planets and the Stars
- The Indian Calendar
காதல் வலையில் சிக்கும் பள்ளி மாணவிகள் - வீட்டை விட்டு ஓடும் மாணவியர் எண்ணிக்கை அதிகரிப்பு
பள்ளி பொதுத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், காதல் வலையில்
சிக்கி, வீட்டை விட்டு ஓடும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 25 மாணவியர் மாயமாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி,கல்வியில் பின்தங்கிய மாவட்டம். குறிப்பாக பெண் கல்வி சதவீதத்தில், மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. பொருளாதார ரீதியில், பின்தங்கியிருப்பதால், படிக்கும் வயதிலேயே, குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் அதிகமாக உள்ளது.உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலும், சினிமா, 'டிவி' உள்ளிட்டவை, பள்ளி மாணவியரை ஹீரோயினாக்கி விடுவதால், 'ரோமியோ'க்கள், பள்ளிகளை முற்றுகையிட துவங்கி விடுகின்றனர். மொபைல் போன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உதவியுடன், பள்ளிப் பருவம் முடிவதற்குள், 'காதலை' வளர்த்துக் கொள்கின்றனர்.பள்ளிப் படிப்பை முடித்தவுடன், பெண் குழந்தைகளை, உயர்கல்விக்கு அனுப்பாமல், பல குடும்பத்தினர், திருமணம் நடத்துவதில் குறியாக உள்ளனர். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, தேர்வு முடிந்தவுடன் மாணவியர், 'காதலனோடு' ஓட்டம் பிடிப்பது அதிகரித்து வருகிறது.
நடப்பு கல்வியாண்டில் இதைத் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேர்வு
மையங்களையொட்டிய பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த வாலிபர்களை விசாரித்து
விரட்டியடித்தனர். ஆனாலும், தேர்வு முடிந்த ஒரு வாரத்துக்குள், கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் மட்டும், 25க்கும் மேற்பட்ட மாணவியர், குறிப்பாக, 10ம்
வகுப்பு தேர்வு எழுதியோர் மாயமாகி உள்ளதாக புகார் பதிவாகியுள்ளது.
புள்ளி விவரம்
போலீஸ் விசாரணையில், பெரும்பாலான மாணவியர், காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளது
தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, இது போன்று காணாமல் போன மாணவியர் எண்ணிக்கை,
17. இந்த ஆண்டு, 25 ஆக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரம், போலீசில்
பதிவு செய்யப்பட்ட புகார் அடிப்படையிலானது. போலீசில் புகார் செய்யாத
குடும்பத்தினர் பலர், தனிப்பட்ட முறையில் தேடி வருவதும் நடந்து வருகிறது.
போலீசார் கூறியதாவது:
காதல் என்ற பெயரில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவியர் ஓட்டம் பிடிப்பது
அதிகரித்து வருகிறது. பல ரோமியோக்கள், பள்ளி மாணவியரை இலக்காக கொண்டு
உள்ளனர். வாழ்க்கை குறித்த எவ்வித தெளிவும் இல்லாமல், சில நாளிலேயே, இந்த
காதல் முடிவுக்கு வந்து விடுகிறது. பலரும், மாணவியரை விட்டு ஓடி
விடுகின்றனர்.
பெற்றோர் கண்காணிப்பு
பெற்றோர்,குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். நடவடிக்கையில்
சந்தேகம் இருந்தால், விசாரித்து
அறிய வேண்டும். ஏனென்றால் இவ்வாறு ஓட்டம் பிடிக்கும் மாணவியரில், 90 சதவீதம்
பேர், சில
நாட்களிலேயே கைவிடப்படுகின்றனர். மாணவியருக்கு மொபைல் போன்
வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
காற்றினால் இயங்கும் 4 சக்கர வாகனம் கண்டுபிடித்த மாணவர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் PSNA இன்ஜி., கல்லூரி மாணவர்கள், காற்றினால் இயங்கும் மாசு
ஏற்படுத்தாத நான்கு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.
மெக்கானிக்கல் பிரிவு இறுதியாண்டு மாணவர்கள் ரெக்ஸ்ஆரோ, சந்தோஷ்
தங்கராஜ், ரிஷிமணிகண்டன், சதீஷ்பாண்டியராஜா, மிதிவண்டியின் ப்ரீ வீல்
தத்துவத்தில், காற்றால் இயக்கப்படும் நான்கு சக்கர (மாதிரி) வாகனத்தை
தயாரித்துள்ளனர். துறை தலைவர் வாசுதேவன், பேராசிரியர் கண்ணன் உதவியுடன்
ரூ.14,500ல் வாகனம் தயாரிக்கப்பட்டது.
பேராசிரியர் கண்ணன் கூறியதாவது: காற்றில் இயங்குவதால் மாசு ஏற்படாது.
சைலன்சர் இதில் இல்லை. பத்து பார் அளவுள்ள காற்றை டேங்கில் அடைத்து, ஏர்
ரெகுலேட்டருக்கு அனுப்பிவைக்கப்படும். பின், செலிநாய்டு வால்வு மூலம்
இரண்டு ஏர் சிலிண்டர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக காற்று செலுத்தப்படும்
அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிலிண்டர் மூலம், திறன் பெறப்பட்டு ப்ரீ வீலுக்கு சக்தி
கடத்தப்பட்டு வாகனம் நகரும். மணிக்கு 17 கி.மீ., செல்லும். 60 மீட்டரை 10
நொடிகளில் கடக்கும். வேகத்தை கட்டுப்படுத்த, டைமிங் கண்ட்ரோல் போர்டு
அமைத்திருக்கிறார்கள். இதேபோல் காற்று மறுபடியும் டேங்கிற்கு
கடத்தப்படுகிறது. தொடர்ந்து காற்று வெளியேறாமல் திறன் பெறும்படி
அமைக்கப்பட்டுள்ளது. இது, மாதிரி கண்டுபிடிப்புத்தான். தற்போது, கல்லூரி
வளாகத்தில் பொருட்களை கொண்டுசெல்ல பயன்படுத்த உள்ளோம். அடுத்தகட்ட ஆய்வில்,
பெரியளவில் காற்றினால் இயங்கும் வாகனம் உருவாக்குவோம், என்றார்.
Subscribe to:
Posts (Atom)