Tuesday, April 7, 2015

அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடங்கள்



பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை 

மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் RMSA திட்டத்தின் கீழ், தமிழக அரசு பள்ளிகளில், 25 வகை தொழிற்கல்வி படிப்புகள் துவங்கப்பட உள்ளன. மாணவர்கள் தொழிற்கல்வியினையும்   கற்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த பகுதிகள் சார்ந்துள்ள தொழில்களுக்கு ஏற்ப, பொது இயந்திரவியல், எலெக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், ஆடை உற்பத்தி, ஜுவல்லரி தயாரிப்பு உட்பட, 25 வகை தொழில் படிப்புகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


முதற்கட்டமாக, ஒன்பதாம் வகுப்பில் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளிகளிலும், அந்த பகுதிகளில் நிலவும் தொழில் சார்ந்த இரண்டு படிப்புகள் துவங்கப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.