Monday, April 20, 2015

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து, ஒழுங்கு நடவடிக்கை

பத்தாம் வகுப்பு விடைத்தாள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும் எனவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை எச்சரித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று (20.04.2015)துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

திருத்தம் தொடர்பாக, அனைத்து Govt, Aided, Matric, Anglo Indian பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் விவரம் பின்வருமாறு 

விடைத்தாள் திருத்தும் பணி  20.04.2015 ல் துவங்கி 25.04.2015க்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. எனவே  ஒரு ஆண்டுக்கு மேலாக, 10ம் வகுப்பு பாடம் நடத்தி அனுபவம் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு சம்மந்தப்பட்ட பள்ளிகள் விடுவித்து அனுப்ப வேண்டும்.

விடைத்தாள் திருத்தும்  பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ஊதியம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களின் விடுமுறை நாள், ஆப்சென்ட் ஆக கணக்கிடப்படும்.

அவர்களது விடுமுறை நாள், மொத்த விடுமுறையில் வரைமுறை செய்யப்படாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.