Monday, September 14, 2015

2014-2015 CPS Annual Account Statement வெளியிடாமல் தாமதம்

                               Pic Source: Vanguard, Nigeria

Nigeria
Nigeria
Nigeria
Nigeria
Nigeria
Nigeria
2003ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த தமிழக அரசுப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் Contributory Pension Scheme (CPS) நடைமுறையில்  உள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு ஓட்டைகளும், செயல்பாட்டில் எண்ணற்ற குழப்பங்களும் கூட நடைமுறையில் தான் உள்ளதாக ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் (GPF) இருக்கும் சலுகைகளில் ஒன்று கூட CPS திட்டத்தில் இல்லாதது இதன் சிறப்பாகும். சிறிய அளவிலான பண நெருக்கடிகளுக்குக் கூட வங்கிகளில்  Personal Loan போடவேண்டிய வாய்ப்புகளை இத்திட்டம்  அரசு ஊழியர்களுக்கு அளித்து வருகிறது.

CPS சந்தாதாரர்கள்  10 ஆண்டுகள்  பணி முடித்தப் பின் அவர்கள் கணக்கில் இருந்து 25% தொகையை எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய உத்தரவு இருந்தாலும், அது  தமிழில் 'புலி' படமாக மாறியிருக்கும் John
Carter படத்தில் வருவதைப் போல ஏழு மலைகள் , ஏழு கடல்கள் தாண்டுவது மட்டுமல்லாமல் செவ்வாய் கிரகத்தையே தாண்டுவது போன்ற பிரமிப்பை தரக்கூடிய கடுமையான விதிமுறைகளுடன் கூடியதாக உள்ளது.

மேலும்  புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி இறந்தவர்களுக்கு கூட இன்னும் CPS தொகையை அரசு அளிக்கவில்லை என பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நக்கீரன் இதழும் தனது ஆகஸ்ட் 22-25 வெளியீட்டில்
"13 லட்சம் பேரின் 12000 கோடி CPS பணம் அம்போ" என தனது பாணியில் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 2013-2014 ஆம் ஆண்டு  வரை மட்டுமே  http://218.248.44.123/auto_cps/  மற்றும்    http://218.248.44.123/auto_cps/public/index.php   இணையதளங்களில்  CPS Annual Account Statement வெளியிடப்பட்டுள்ளது.  இதில் 03/2013 முதல் 02/2014 வரை மட்டுமே கணக்கு விவரங்கள் உள்ளன.

2014-2015ம் வருவாய் ஆண்டு முடிந்து 5 மாதங்கள் ஆகின்றன.  03/2014 முதல் 02/2015 வரையிலான Account Statement இன்னும் வெளியிடப் படவில்லை. இன்னும் 5 மாதங்கள் கடந்தால்  03-2015 முதல்  02/2016 வரையிலான Account Statement கூட நிலுவையில் வரலாம் என CPS சந்தாதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Microsoft க்கு மாற்றாக BOSS ஆப்பரேட்டிங் சிஸ்டம் - மத்திய அரசு முடிவு



 
அதிகரித்து வரும் Cyber Crime, சீனாவின் Hacker களால் இந்திய அரசின் இணையதளங்கள் உளவு பார்க்கப்படுவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மத்திய அரசின் அங்கமான நவீன கணினி மேம்பாட்டு மையம் உருவாக்கி உள்ளது. 

புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற்றாக Linux இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் BOSS (Bharath Operating System Solutions) என்ற அதிநவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

மேலும் கல்வி சார்ந்த பிரத்யேக தேவைகளுக்காக EduBOSS   ஆப்பரேட்டிங் சிஸ்டமும் உருவாக்கப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



Click Here to Download  BOSS & EduBOSS Operating System


இந்த BOSS ஆப்பரேட்டிங்  சிஸ்டம், கடந்த வாரம் நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது 

ராணுவம், உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இணையதளங்கள் பல்வேறு விதமான  ஊடுருவலுக்கு (Intruder) உட்படுத்தப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகளை பாஸ் முறியடித்து, வெற்றி கண்டுள்ளது.


அமெரிக்கா, ரஷ்யா, சீன உளவுத்துறைகளால் இணையத் தளங்களில் அதிகம் கண்காணிப்படும் நாடு இந்தியாஇதனால் வெளிநாட்டினர் இந்திய அரசின் ரகசியங்களை உளவு பார்ப்பதை தடுப்பதற்காக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்திய தொழில்நுட்பத்தை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும்..


முதல்கட்டமாக அரசு இணையதளங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், தனிநபர்களின் ரகசியங்களையும் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Saturday, September 12, 2015

7243 நர்சுகளுக்கு பணி நியமன ஆணை - முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

அரசு மருத்துவமனைகளில்  தொகுப்பூதிய அடிப்படையில் 451 ஆண் நர்ஸ்கள் உட்பட  7243 நர்ஸ்கள் பணியிடங்களுக்கு  பணியாளர்களை நியமிக்க தமிழகத்தில் முதன் முறையாக அரசு தகுதித் தேர்வு கடந்த ஜூன் 28ம் தேதி நடைபெற்றது.

இத்தேர்வில் வெற்றிபெற்று மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தால்(MEDICAL SERVICES RECRUITMENT BOARD - MRB)தேர்வு செய்யப் பட்ட 7,243 நர்சுகளுக்கு, இன்று (செப்.12) தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ புத்தகங்கள் - செப் 14 முதல் விநியோகம்

 

 
தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவிப் பள்ளிகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. செப்டமபர் 25ல்  காலாண்டுத் தேர்வுகள் முடிந்து அக்டோபர் 5 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றே மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், செயலாளர் கார்மேகம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி மாவட்ட அளவிலான குடோன்களுக்கு 2 ஆவது பருவத்திற்கு உரிய 1 கோடியே 33 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை அனுப்பி உள்ளனர். 

பாடப்புத்தகங்களை வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதால் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளி திறக்கும்போதே  அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதால் முதல் கட்டமாக  6 முதல் 9ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் செப்-14 முதல்   வழங்கப்பட உள்ளது உள்ளது  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, September 11, 2015

Ms Office 2016 பதிப்பு Sep 22ல் வெளியீடு (Microsoft Launch Office 2016 On Sep 22)


Ms Office ன் அடுத்த பதிப்பான "Office 2016"  Sep 22 ஆம் தேதி வெளியிடப்படுவதாக Microsoft  அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆஃபிஸ் 2016 சிறப்பம்சங்கள் :
Office 2016 பதிப்பில், ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்டோர் ஆவணத்தில் திருத்தம் (co-edit documents) செய்ய முடியும். IT நிர்வாகிகள் மற்றும் வணிகத்தினர்களுக்கான சில புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் ஒன் ட்ரைவுடன் (OneDrive) சின்க் (sync) செய்யும் வசதி என மேம்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை “மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் 2016” பதிப்பின் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளுக்கு 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை நாளை முதல் அமல்




 



நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் அமலாகிறது.



இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும், வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையை மாற்று முறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.



அதன்படி, இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 12) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இதேபோன்று 4-ஆவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 26) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.

2, 4-ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதால், அனைத்து வங்கிகளும் மற்ற சனிக்கிழமைகளில்  முழுநேரம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



 

Thursday, September 10, 2015

தமிழகம் முழுவதும் ஆதார் பதிவை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்

 

தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்திருந்தது. ஆனால் இதுவரை  5 கோடியே 1 லட்சம் பேருக்கு (74%) ஆதார் அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன

எனவே தமிழகத்தில் உள்ள அனைவருக்கும்(100%) ஆதார் எண் வழங்குவதற்கான விவரங்களை பதிவு செய்யும் பணியை டிசம்பர் 2015க்குள் முடிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கூடுதல் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது என இயக்குனராக அதிகாரி தெரிவித்துள்ளார்.

 


Wednesday, September 9, 2015

அகவிலைப்படி 6% - மத்திய அமைச்சரவை ஒப்புதல்



 
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே உள்ள 113% அகவிலைப்படி ஜூலை 1 முதல் 119% ஆ உயர்த்தி முன்தேதியிட்டு வழங்கப்படும்.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இதனை தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் 6 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்படும் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

6% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவையில் இன்று முடிவு ( 6% DA hike for Central Govt Employees)

 
இன்று (09.09.2015) நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6% உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால்  தற்போதுள்ள 113%  இருந்து 119% ஆக  உயரும்.  இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.


இதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள்.

Tuesday, September 8, 2015

ரூ.500, ரூ.1,000 தாள்களில் 7 புதிய மாற்றங்கள்: ரிசர்வ் வங்கி திட்டம் ( RBI Plans 7new security features in 500,1000 Rs.)



கள்ள நோட்டுப் புழக்கத்தைத் தடுக்க ரூ.500, ரூ.1,000 தாள்களில் 7 புதிய மாற்றங்கள் செய்ய  ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது

கடந்த சில மாதங்களாக இந்திய சந்தை முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் தொடர்ந்து புகார் வந்து வண்ணம் உள்ளன. மேலும் இக்கள்ள நோட்டுகள்  வங்கி .டி.எம்.களிலும்  இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே ரூ.500, ரூ.1,000 தாள்களில் 7 புதிய மாற்றங்கள் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. உதாரணமாக  மேலே படத்தில் உள்ள ரூபாய் நோட்டில் உள்ளது போல வரிசை எங்கள் ஒரே அளவில் இல்லாமல் முதல் 3 எண்-எழுத்துக்கள்(Alpha Numerals) ஒரே அளவிலும், அடுத்த 6 எங்கள் வளரும் நிலையிலும் (Rapid Growth) இருக்கும்.

மேலும் இதேபோல புதிதாக செய்யப்படவுள்ள மாற்றங்கள் அனைத்தும் சாதாரண மக்களாலேயே நல்ல ரூபாய் நோட்டுகளை அடையலாம் காணவல்ல வகையில் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recruitment in National Investigation Agency (NIA)

 
தேசிய புலனாய்வு நிறுவனமான NIA வில் பணிவாய்ப்பு  அறிவிக்கப் பட்டுள்ளது. 
 

மேலும் விவரங்களுக்கு 
 

உலக எழுத்தறிவு தினம்

               மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் 
               மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் 
               தன்தேச மல்லால் சிறப்பில்லை - கற்றோர்க்கு 
               சென்ற இடமெல்லாம் சிறப்பு.

Monday, September 7, 2015

தமிழக அரசு சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு - தொகுப்பூதியத்தில் 4 பணியிடங்கள்

சமூக பாதுகாப்புத் துறையால் மாநிலக் குழந்தை பாதுகாப்பு சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.



 வஎண் 
 பணியிடத்தின் பெயர் 
 பணியிடத்தின் எண்ணிக்கை 
 மாத தொகுப்பு ஊதியம் 
 1
 திட்ட மேலாளர் 
 1
 ரூ.35000/-
 2
 திட்ட அலுவலர் 
 1
 ரூ.26250/-
 3
 கணக்கர் 
 1
 ரூ.14000/-
 4
 உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் 
 2
 ரூ.10000/-


கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பட்டம் 

வயது : 40 வயதிற்கு மிகாமல் 
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி : 14.09.2015 மாலை 5.30க்குள் 

மேலும் விவரங்களுக்கு http://www.tn.gov.in/job_opportunity

Saturday, September 5, 2015

"கற்களை சிலைகளாக்கும் சிற்பிகள்" - அனைத்து நண்பர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்


“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.
ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“

  
 Dr. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
(05.09.1888 - 17.04.1975)
 
நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த மாமேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று(செப்டம்பர் 5) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது

டாக்டர் ராதாகிருஷ்ணன் 05.09.1888ல்  திருத்தணியில் தெலுங்கு நியோகி பிராமணப்பிரிவு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, தாயார் பெயர் சீதம்மா. இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஆரம்பக் கல்வியை திருத்தணியில் பயின்றார். திருப்பதியில் உள்ள லுத்தரன் மிஷன் பள்ளியில் உயர்நிலைக்கல்வியை பயின்றார்.

வேலூர் ஊரிஸ் கல்லூரியில் B.A தத்துவம் சேர்ந்து பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு மாறுதல் பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் M.A. தத்துவவியல் முடித்த பின்பு, 1909ல்  சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக சேர்ந்தார்.

1914ல் கணித மேதை டாக்டர் ஸ்ரீனிவாச ராமானுஜம், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு செல்வதற்கு முன் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

1918ல் மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மதிப்புமிக்க மன்னர் V ஜார்ஜ் பெயரால் வழங்கப்படும் தத்துவவியல் பேராசிரியர் பதவியை பெற்றார்.

1931ல் ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர் ஆனார். 
1939ல் மதன் மோகன் மாளவியா நிறுவிய பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக பொறுப்பேற்றார்.

சுதந்திரம் பெற்ற பிறகு 1948ல் பல்கலைக்கழக கல்விக் குழுவின்(University Education Commission ) தலைவர் ஆனார்.

1949ல் சோவியத் யூனியனுக்கான தூதுவராக நியமிக்கப் பட்டார்.

1952ல் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்
.
1954ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே ஆண்டில் அமெரிக்காவில் இவரது "The Philosophy of Dr. Sarvepalli Radhakrishnan" புத்தகம் வெளியிடப் பட்டது.
(Dr.Radhakrishnan and American President John F.Kennedy)

1962ல் இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவி வகிக்க அ வருக்கு அழைப்பு விடப்பட்டும் அவர் அதை விரும்பவில்லை.



அவரது 79வது வயதில் 1967ல் அவர் சென்னை திரும்பினார். தனது இறுதி நாள்வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது "Girija" இல்லத்தில் மகிழ்வோடு இருந்தார்.

1975 ஏப்ரல் 17ம் நாள்  அவர் இம்மண்ணுலகை விட்டு மறந்தார்.

சிறந்த ஆசிரியர்
 
அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பணியை போற்றியவர் 
 
தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை சேர்த்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்களுக்கு முன்னுதாரணம்.

ஆசிரியர்கள், சமூகத்தின் அடிப்படை:
 
ஒரு சமூகம் அதி உன்னத நிலை அடைந்து இருந்தால் நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால் ஆசிரியர் சமூகம் தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம்.

ஆசிரியர்கள், சமூக சிற்பிகள்: 
 
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தினையும், தன்னம்பிக்கை, நன்னெறி,ஒழுக்கம், அறிவுத்தேடல் ஆகியவற்றை ஊட்ட வேண்டும். ஒரு குழந்தை விரும்பா விட்டாலும் அதன் தாய் எப்படி உணவை வாயில் அடைத்து ஊட்டுகின்றாரோ அதை போல எப்படிப் பட்ட மாணவர்களையும் கைவிடாது ஆசிரியர்கள் இதை செய்யவேண்டும். இதை சரியாக செய்யும்போதுதான், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை அடைந்ததாக அர்த்தம்.

கல்போல, களிமண் போல  பக்குவம் இல்லாமல் தன்னிடம் வரும் மாணவர்களை , சிலைகளாகவும், சிற்பங்களாகவும்  செதுக்கிடும் ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர்தின நல் வாழ்த்துக்கள்!

நாட்டுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்த 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி பிறந்தநாள்

V.O.Chidambaram Pillai
(05.09.1872 - 18.11.1936)
  • ஆங்கிலேயருக்கு கனவுகளில் கூட சிம்ம சொப்பனமாக விளங்கிய சுதந்திர போராட்ட தலைவர்.
  •  
  • 19ம் நூற்றாண்டில் நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர்.

  • ஏழைகளின் வழக்கறிஞர்.

  •  சுதேசி இயக்கத்தில் லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றியவர்.

  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1907ல்  S.S.Galileo, S.S.Lavo என்னும் கப்பல்களை வாங்கி   Swadeshi Steam Navigation Company (SSNC) என்னும் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கியவர்.
  • ஆங்கில அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்களை நடத்தியவர்.

  • 12.03.1908ல் சிறையில் அடைக்கப்பட்டு, சிறைதண்டனையில் செக்கிழுத்தவர்.
 
  • செல்வந்தராக பிறந்து, நாட்டுக்காக அனைத்தையும் இழந்து மரணம் வரை வறுமையில் வாழ்ந்தவர்.
சுதந்திரப் போராட்டச் செம்மல் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்த நாளை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

Friday, September 4, 2015

ஆசிரியர் தினம் : முதல்வர் வாழ்த்து

 

செப்டம்பர் 5 - ஆசிரியர் தின வாழ்த்துரையாக தமிழக முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "கல்வி வளம் பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்ற லட்சியத்தோடும், தியாக உணர்வோடும், மன மகிழ்வோடும் ஆசிரியராக தன் பணியை தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் "ஒரு நாட்டின் உயர்வு தாழ்வு அந்த நாட்டின் இளைஞர்களுக்குக் கிடைக்கும் கல்வியைப் பொறுத்தே அமையும்" என்றார் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் அனைவருக்கும் தரமான கல்வியை அளித்திடும் வகையில் அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு 64,485.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 

அத்துடன் 1,319 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, 182 தொடக்கப் பள்ளிகள், தேசிய சட்டப் பள்ளி, 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. சிறந்த கல்வியை மாணவர்கள் இடையூறின்றி பெற்றிடும் வகையில் இதுவரை இல்லாத அளவிற்கு 72,843 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 

ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக திருச்சிராப்பள்ளியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆசிரியர் இல்லம், சென்னை, சைதாப்பேட்டையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் ஆசிரியர் இல்லக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 

அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவுக்கண்ணை திறந்திடும் மகத்தான மனிதவள மேம்பாட்டுப் பணியினை ஆற்றி வரும் ஆசிரியப் பெருமக்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு சிறப்பாகக் கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொளகிறேன். 

நாட்டின் எதிர்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கற்பித்து, அவர்களைத் தேசத்தின் விலை மதிப்பில்லாச் செல்வங்களாக உருவாக்கிடும் உயரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியர் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இன்று ESLC 'ரிசல்ட்'


எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட அறிப்பில், 'மே மாதம் நடந்த, எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படும்.தேர்வு எழுதிய மையத்தில் தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். சான்றிதழ் வழங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 2, 2015

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு அசல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்




ஜூன் 2015ல்  நடைபெற்ற 10ம்  வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள்  இன்று(02.09.2015) முதல் அந்தந்த தேர்வு மையங்களில் அசல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Tuesday, September 1, 2015

நாளை பாரத் பந்த்! நாடு முழுவதும் ஆட்டோ, டாக்சி ஓடாது. வங்கிகள் முடங்கும்


தொழிலாளர் சட்டம், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் போன்ற சில சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும்  என  எதிர்ப்பு தெரிவித்து   11 தொழிற்சங்கங்கள் நாளை (02.09.2015) பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. முன்னதாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் பந்த்துக்கு தங்கள் முழு ஆதரவு இருப்பதாக சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எம்எஸ், ஐஎன்டியுசி உள்ளிட்ட தமிழகத்தின் 12 ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்த நகரத்திலும் நாளை ஆட்டோக்கள் ஓடாது. அதேபோல, இந்த வேலைநிறுத்தத்தில், தமிழகத்தில் ஷேர் ஆட்டோ, டாக்சி, கால்டாக்சி உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் பல நகரங்களிலும் நாளை வேலை நிறுத்த பாதிப்பு எதிரொலிக்கும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால் காசோலை மற்றும் வங்கி பரிமாற்றங்கள் பாதிக்கப்படும்.  குறிப்பிடத்தக்கது.