இன்று (09.09.2015) நடைபெறவுள்ள மத்திய
அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான
அகவிலைப்படியை 6% உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் தற்போதுள்ள 113% இருந்து 119% ஆக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
இதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும், 55
லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள்.