Sunday, September 27, 2015

வேளாண் , கணினி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவு

பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.


ஆசிரியர்களின் சூழலை உணர்ந்து சக ஆசிரியர்களுக்கு நடப்பது போன்று விதிமுறைகளை பின்பற்றி கணினி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 
இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, 30.09.2015 வரை காலியாக உள்ள கணினி மற்றும் வேளாண்மை ஆசிரியர்கள் பணியிடங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக கணக்கிட்டு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.



Click Here to Download the Computer & Agri Teachers Transfer Counselling GO PDF