Saturday, September 5, 2015

நாட்டுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்த 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி பிறந்தநாள்

V.O.Chidambaram Pillai
(05.09.1872 - 18.11.1936)
  • ஆங்கிலேயருக்கு கனவுகளில் கூட சிம்ம சொப்பனமாக விளங்கிய சுதந்திர போராட்ட தலைவர்.
  •  
  • 19ம் நூற்றாண்டில் நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர்.

  • ஏழைகளின் வழக்கறிஞர்.

  •  சுதேசி இயக்கத்தில் லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றியவர்.

  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1907ல்  S.S.Galileo, S.S.Lavo என்னும் கப்பல்களை வாங்கி   Swadeshi Steam Navigation Company (SSNC) என்னும் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கியவர்.
  • ஆங்கில அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்களை நடத்தியவர்.

  • 12.03.1908ல் சிறையில் அடைக்கப்பட்டு, சிறைதண்டனையில் செக்கிழுத்தவர்.
 
  • செல்வந்தராக பிறந்து, நாட்டுக்காக அனைத்தையும் இழந்து மரணம் வரை வறுமையில் வாழ்ந்தவர்.
சுதந்திரப் போராட்டச் செம்மல் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்த நாளை நன்றியுடன் நினைவு கூர்வோம்.