Pic Source: Vanguard, Nigeria
Nigeria
Nigeria
Nigeria
Nigeria
2003ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த தமிழக அரசுப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் Contributory Pension Scheme (CPS) நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு ஓட்டைகளும், செயல்பாட்டில் எண்ணற்ற குழப்பங்களும் கூட நடைமுறையில் தான் உள்ளதாக ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் (GPF) இருக்கும் சலுகைகளில் ஒன்று கூட CPS திட்டத்தில் இல்லாதது இதன் சிறப்பாகும். சிறிய அளவிலான பண நெருக்கடிகளுக்குக் கூட வங்கிகளில் Personal Loan போடவேண்டிய வாய்ப்புகளை இத்திட்டம் அரசு ஊழியர்களுக்கு அளித்து வருகிறது.
CPS சந்தாதாரர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்தப் பின் அவர்கள் கணக்கில் இருந்து 25% தொகையை எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய உத்தரவு இருந்தாலும், அது தமிழில் 'புலி' படமாக மாறியிருக்கும் John
Carter படத்தில் வருவதைப் போல ஏழு மலைகள் , ஏழு கடல்கள் தாண்டுவது மட்டுமல்லாமல் செவ்வாய் கிரகத்தையே தாண்டுவது போன்ற பிரமிப்பை தரக்கூடிய கடுமையான விதிமுறைகளுடன் கூடியதாக உள்ளது.
மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி இறந்தவர்களுக்கு கூட இன்னும் CPS தொகையை அரசு அளிக்கவில்லை என பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நக்கீரன் இதழும் தனது ஆகஸ்ட் 22-25 வெளியீட்டில்
"
13 லட்சம் பேரின் 12000 கோடி CPS பணம் அம்போ" என தனது பாணியில் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
2014-2015ம் வருவாய் ஆண்டு முடிந்து 5 மாதங்கள் ஆகின்றன. 03/2014 முதல் 02/2015 வரையிலான Account Statement இன்னும் வெளியிடப் படவில்லை. இன்னும் 5 மாதங்கள் கடந்தால் 03-2015 முதல் 02/2016 வரையிலான Account Statement கூட நிலுவையில் வரலாம் என CPS சந்தாதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.