அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 451 ஆண் நர்ஸ்கள் உட்பட 7243 நர்ஸ்கள் பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிக்க தமிழகத்தில் முதன் முறையாக அரசு தகுதித் தேர்வு கடந்த ஜூன் 28ம் தேதி நடைபெற்றது.
இத்தேர்வில் வெற்றிபெற்று மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தால்(MEDICAL SERVICES RECRUITMENT BOARD - MRB)தேர்வு செய்யப் பட்ட 7,243
நர்சுகளுக்கு, இன்று (செப்.12)
தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பணி
நியமன ஆணைகளை வழங்கினார். இதில் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.