Thursday, October 29, 2015

தமிழக அரசின் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர Computer On Office Automation Examination Dec 2015

 Special Link: CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர(Typist),  கணினி இயக்கவும் தகுதி பெற வேண்டும். இதற்காக TNPSC  நடத்தும்  சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிக்கான தேர்வில், உரிய விதிப்படி தேர்ச்சி பெற்றாலும், கணினி தகுதி சான்றிதழ் படிப்பிலும் (COA) தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (Directorate of Technical Education) நடத்தும்  கணினி தகுதித்தேர்வுக்கு(Computer On Office Automation Examination Dec 2015) நவம்பர் 16ம் தேதிக்குள் http://www.tndte.com/ota.html ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, நவம்பர் 23ம் தேதிக்குள், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


Announcement : COA Dec-2015.PDF
Syllabus:  OFFICE_AUTOMATION_SYLLABUS-23.09.15..PDF

Wednesday, October 28, 2015

மார்ச் 2016: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் கடினமானவையாக இருக்கும்

 

மார்ச் 2016ல்  நடைபெற  உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு களுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியை  தேர்வுத் துறை துவங்கியுள்ளது.  வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு  பாடங்களின் உள் அம்சங்களில் இருந்து புதிய கேள்விகள் கேட்குமாறு  உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே  மார்ச் 2016ல்  நடைபெற  உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு வினாத்தாட்கள்  கடினமானவையாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ( Provisional Marksheet SSLC Result - September 2015)

Monday, October 26, 2015

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இ-சேவை மையத்தில் வசதி

Special Link: CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15
 

இ-சேவை மையத்தில்  TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டணம் எவ்வளவு?

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், புதிதாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிரந்தரப் பதிவு செய்ய, 50 ரூபாய், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, 30 ரூபாய், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய, ஐந்து ரூபாய், மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்புகை சீட்டு

நிரந்தர பதிவு கட்டணமான 50 ரூபாய் மற்றும் தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பணம் செலுத்தியதற்கான, ஒப்புகை சீட்டு, உடனடியாக பெற்று கொள்ளலாம் என, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, October 24, 2015

பாஸ்போர்ட் வேணா வாங்கிக்குங்க. ஆனா சொல்லிட்டு தான் வெளிநாடு போகணும்: பள்ளிக் கல்வி இயக்குனர்



அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, வெளிநாடு செல்ல முடியும். 

இந்த அனுமதியை பெற, தங்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் 
"அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும்  என தமிழக அரசு (Go.Ms.No. 71 Dt. 02.07.2015)   தெரிவித்துள்ளதால்"
  
'பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும், தடையில்லா சான்றுக்காக காத்திருக்க வேண்டாம்' எனவும் .  'பாஸ்போர்ட் பெற விரும்புவோர், விண்ணப்ப படிவ நகலை, பணி நியமன அலுவலருக்கு அனுப்பி விட்டு, பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம்' எனவும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய செயல்முறைகளில் தெரிவித்துள்ளார்.


Thursday, October 22, 2015

CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
  
தேவையற்ற குப்பைகளை 'முடிந்தவரை' உங்கள் பார்வைக்கு வைப்பதில்லை என்ற உறுதியுடன், நீங்கள் பயனடையும் வகையில் தகவல்கள் அளிக்க வேண்டும் என்ற உணர்வுடன், விஜயதசமி நல்வாழ்த்துக்களை அனைத்து   நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நவம்பர் 1 முதல் புதிய சிந்தனை மாற்றங்களுடன் deccanbluediamonds.

Tuesday, October 20, 2015

'ஜாக்டோ' போராட்டம் : விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் 'கட்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர்.


பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும் அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில், விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

Monday, October 19, 2015

NHIS ANNEXTURE VII

(For Friends)
                 1. Download the file here  fin_e_243_2012.pdf
                 2. Print the Pages 35 & 36
Link 
                  New Health Insurance - All G.Os  

23.10.2015 வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் : மொஹரம் விடுமுறை 24.10.2015 க்கான உத்தரவு


பொது விடுமுறை - மொகரம் பண்டிகை 23.10.2015ம் தேதிக்கு பதிலாக 24.10.2015 அன்று கடைபிடிப்பதையடுத்து தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு

 Click  Below to Download G.O.

 FRIDAY WORKING DAY GO.pdf

 

Saturday, October 17, 2015

epayroll'ல Bill போடுறீங்களா? DA வை நீங்க மாத்த முடியாது. NIC Server ல தான் மாத்த முடியும். Wait பண்ணுங்க.


epayroll மூலமாக அக்டோபர் மாத ஊதியப் பட்டியலை தயாரிக்கும் வேலையில் இருப்பவர்கள், தங்களுடைய  login சென்று DA வை 113% லிருந்து 119% ஆக மாற்ற முடியாது.  NICன்  Web Payroll System server ல் மாற்றினால் தான் நம்மால் புதிய DA வில் ஊதியப் பட்டியலை தயாரிக்க முடியும்.

திங்கள்கிழமை(19.10.2015) அன்று NIC Server ல் புதிய DA(119%) மாற்றப்படும். எனவே ஊதியப் பட்டியல்களை தயாரிக்கும் வேலையில் இருப்பவர்கள் திங்கள்கிழமை மதியம் முயற்சிக்கவும்.

Link:   

     

சாலை விபத்தில் தமிழகத்தில் 8 மாதங்களில் 10 ஆயிரம் பேர் மரணம்


போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் விளக்கம் :

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது.

அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து சாலை விரிவாக்கம் செய்வது, புதிய சாலைகளை அமைப்பது, பாலங்கள் கட்டுவது, இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்வதற்கான நடவடிக்கைகள்  என  சாலை விபத்துக்களை குறைக்க தமிழக அரசு சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

என்ன காரணம்?


சாலை விதி மீறல்கள், ஓட்டுநர்களின் கவனக்குறைவு, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுவது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்வது போன்ற காரணங்களால் சாலை விபத்துகள் நடக்கின்றன. 


எப்படி குறைப்பது?
விபத்துகளை குறைக்கும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின் றன. அரசின் நடவடிக்கைகளின் பலனாக 2014-ல் விபத்துகளால் பலியானோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம். 

கடந்த 1-ம் தேதிக்கு பிறகு புதிதாக உற்பத்தி செய்யும் லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டாயம் வேகக்கட்டுபாட்டு கருவியை பொருத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை பெரும்பாலான மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டன.


Link :  கனவுகளை நொடிப்பொழுதில் தகர்க்கும் சாலை விபத்துகளை தவிப்பது எப்படி?


தமிழகத்தில் இந்த ஆண்டு 

நம்பிக்கை
 
தமிழகத்திலும் இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. முறையாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கும் வகையில் கணினி மூலம் கண்காணிக்கும் வசதி 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விரைவில் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களால் வரும் நாட்களில் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகள் குறையும் என நம்பு கிறோம். 

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 58% இடங்கள் மட்டுமே நிரம்பின: 1.20 லட்சம் இடங்கள் காலி


 
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E, B.Tech, B.Arc படிப்புகளில் 58% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 1.20 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. 
 
  Thanks To:  The Hindu.

இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த கல்வியாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறும்போது, ‘‘பொறியியல் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. எனவே, அதிக செலவு செய்து பொறியியல் படிக்க வேண்டுமா என்று மாணவர்கள், பெற்றோர் கருதுவதால் கலை, அறிவியல் படிப்பை நாடுகின்றனர்". பொறியியல் படிப்பில் தேசிய அளவில்கூட 16.90 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அறிவித்துள்ளது. பொறியியல் இடங்களை 6 லட்சம் அளவுக்கு குறைக்கவும் AICTE திட்டமிட்டுள்ளது’’ என்றார்.  

'கால் டிராப்'புக்கு ரூ.1 நஷ்டஈடு (Compensate for call drops from Jan 1, 2016: TRAI to telcos)

 
புதுடில்லி,:'மொபைல் போனில் பேசுகையில், 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாதியில் இணைப்பு துண்டிக்கப்பட்டால், வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக, ஒரு ரூபாய் தர வேண்டும்' என, 'டிராய்' எனப்படும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

மொபைல் போனில் பேசுகையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இணைப்பு பாதியில் துண்டிக்கப்படுவது, 'கால் டிராப்' எனப்படும். இந்தியாவில், அடிக்கடி கால் டிராப் ஏற்படுவதாக, டிராய்க்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதற்கு தீர்வாக, கால் டிராப் ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு, நஷ்டஈடாக ஒரு ரூபாய் தர வேண்டுமென, டிராய் அறிவித்துள்ளது.வரும், 

ஜனவரி 1 முதல், இந்த உத்தரவு அமலாகிறது.கால் டிராப் நஷ்டஈடு, ஒருநாளைக்கு அதிக பட்சம், மூன்று முறை மட்டுமே வழங்கப்படும் என, டிராய் கூறியுள்ளது.

பாஸ்வேர்டு முறைக்கு குட்பை சொல்கிறது யாகூ

 

சர்வதேச அளவில் இணையதள சேவைகளில் முன்னணியில் உள்ள யாகூ நிறுவனம், தனது இமெயில் சேவைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, பாஸ்வேர்ட் இல்லா லாகின் (Password free email login) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மனிதனுக்கு வங்கிக்கணக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல இன்றைய நவநாகரீக உலகில், இமெயில் அக்கவுண்ட்டும் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. மக்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு ஏற்ப,மற்றும் தங்கள் வசதிக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்டுகளை பராமரித்து வருகி்ன்றனர். இந்த இமெயில் பாஸ்வேர்டுகள், ஓபன் சோர்ஸ் அடிப்படையினலாதனால், ஹேக்கர்ஸ்கள் எளிதாக, நமது இமெயில் அக்கவுண்ட்டுகளை ஹேக் செய்துவிடுகின்றனர். இதன்காரணமாக, நமது முக்கிய விபரங்கள் பறிபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


இந்த இமெயில் அக்கவுண்ட் ஹேக் தொடர்பாக பல புகார்கள், யாகூ நிறுவனத்திற்கு தொடர்ந்து வந்ததையடுத்து, பாஸ்வேர்டுக்கு மாற்று குறித்த ஆய்வில் யாகூ நிறுவனம் ஈடுபட்டிருந்தது. அதன் முயற்சியாக, தற்போது யாகூ நிறுவனம், பாஸ்வேர்டை உள்ளீடாக செலுத்தாமல், ஸ்மார்ட்போனிலிருந்து வரும் நோட்டிபிகேசனின் மூலம், இமெயில் அக்கவுண்டிற்குள் உள்செல்லும் முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் செய்ல்படும் வகையில் "அக்கவுண்ட் கீ" என்ற ஆப்சன் கொண்ட அப்ளிகேசனை அறிமுகப்படுத்தியுள்ள யாகூ, இதன் உதவிகொண்டு உருவாக்கப்படும் நோட்டிபிகேசனைக்கொண்டு, பாஸ்வேர்ட் இல்லாமல், இமெயில் அக்கவுண்ட்டை நிர்வகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறை தற்போது அறிமுகப்பட்டுள்ள போதிலும், பாஸ்வேர்ட் நடைமுறை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்று யாகூ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, October 16, 2015

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் 1ம் தேதியிலிருந்து இந்த உயர்வு வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசாணையை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 


தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி: முதல்வர் ஒப்புதல். இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு



தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படிக்கான உத்தரவில் தமிழக முதல்வர் நேற்று கையெழுத்திட்டார் என தகவல் வெளியாகி இருப்பதால் இன்று அதற்கான அறிவிப்பு மற்றும் அரசாணை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் 4900 பணியிடங்களுக்கு Group IV தேர்வு; டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்பு



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, அருள்மொழி நேற்று பதவி ஏற்றார். அரசு இ-சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார். 


அவர் அளித்த பேட்டி: 


போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள், தாமதமின்றி வெளியிடப்படும். அரசு துறை காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும்.  

டி.என்.பி.எஸ்.சி.,யின் இணைய வழி சேவை அனைத்தும், மிகக் குறைந்த செலவில் கிடைக்க, இ-சேவை மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.நிரந்தர பதிவு, தேர்வு விண்ணப்பம், அதில் மாற்றம், நகல் பெறுதல் போன்ற சேவைகளுக்கு, அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்களை அணுகலாம். அதற்கு, கட்டணம் உண்டு. இந்த சேவைகள், எல்காட் நடத்தும், இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, October 15, 2015

ஆசிரியர் குறை தீர்க்க கமிட்டி அமைக்க உத்தரவு

பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம்:

·  பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்துஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும்.

·  அதில்குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால்வட்டார வள மைய அதிகாரி தலைமையிலானவட்டார கமிட்டி விசாரித்து, 30நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்.

·  அதற்கு மேல்கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் மாவட்ட கமிட்டிமூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடிஆசிரியர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

· இறுதியாகமாநில அளவில்தொடக்கக் கல்வி இயக்குனரை தலைவராக கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இந்தக் கமிட்டிஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடிகுறைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

· ஆசிரியரின் பணி விதிமுறைகள்பதவி உயர்வுநிதி சார்ந்த கோரிக்கைகள்ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனை தொடர்பான குறைகளைஇந்தக் கமிட்டிகள் விசாரிக்காது. 

·         மத்திய மனிதவள அமைச்சகத்தின் இந்த உத்தரவால்எந்த பலனும் ஏற்படாது எனஆசிரியர்கள் குறை கூறி உள்ளனர். 

இதுகுறித்துபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: 
ஏற்கனவேஅனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தில்கிராம கல்விக் குழு என்ற குறை தீர்ப்பு கமிட்டி இருக்கிறதுஆனால்அது முறையாக செயல்படவில்லை என்ற குறையே இன்னும் போக்கப்படவில்லை.
பணி விதிமுறைகள்பதவி உயர்வுஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை ஆய்வு செய்யாமல்,ஆசிரியர்களின் குறைகளை எப்படி தீர்க்க முடியும்இவ்வாறு அவர் கூறினார்.

650 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நாளை முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது

2015-2016ம் கல்வியாண்டிற்கான இரண்டாம் கட்ட பட்டதாரி - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது 

Tuesday, October 13, 2015

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு


தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TNPSC GROUP II - A : 1863 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு






1863 உதவியாளர், இளநிலை உதவியாளர்  காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



TNPSC GROUP II A

பணியிடங்கள்
உதவியாளர், இளநிலை உதவியாளர்
கல்வித்தகுதி : 

இளநிலை பட்டப்படிப்பு 
பணியிடங்களின் எண்ணிக்கை
1863
கடைசி தேதி
11.11.2015


மேலும் விவரங்களுக்கு

வங்கிகளின் இணைய சேவைக்கு (Net Banking) கட்டணம்



வங்கிகளின் இணைய சேவைக்கு (Net Banking) அக்டோபர்  1 முதல் கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது.
வங்கிகளுக்கு சென்று பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க ATM மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ATM மூலம் ஐந்து முறை,  பிற வங்கி ATM   மூலம் மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். 

இதற்கு மேல் ATM  சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இதை தொடர்ந்து, தற்போது இலவசமாக இருக்கும் வங்கிகளின் இணைய சேவைக்கும்(Net Banking)  கட்டணம் வசூலிக்க வேண்டும் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.

வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு

 
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.விருப்பம் உண்டா?: ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2006 ஜன.,1 க்கு பின் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம், கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. 'இந்த பணியிடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.முரண்பாடு: ஏற்கனவே, ஆசிரியர் பயிற்றுனர்களாக பணிபுரிவோர், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வித்துறையின் நடவடிக்கையால் ஆசிரிய பயிற்றுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 'வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை' என, எங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையின் முரண்பாட்டால் எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் கிடைக்காமல் போய்விடும், என்றார்.

TNPSC ன் புதிய தலைவர்: கே. அருள்மொழி


 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த ஏ.நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பொறுப்பை கடந்த ஜூன் மாதம் அவர் ராஜினாமா செய்தார்.


இதன்பின் தலைவர் பொறுப்பை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக உள்ள பாலசுப்பிரமணியன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். 

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் அவர் 6 ஆண்டுகாலம் நீடிப்பார் என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, October 11, 2015

மனோரமா எனும் மனோரஞ்சிதப்பூ


'ஆச்சி' மனோரமா

                                 26.05.1937 - 10.10.2015


தனது வாழ்நாளில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், சிங்களம் ஆகிய 6 மொழிகளில் 1,300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

1000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்தவர்.

300க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியவர்.

தமிழ்த் திரையுலகில் 5 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

தென்னிந்தியாவின் 5 முதல்வர்களுடன் நடித்த புகழ் பெற்றவர்.

 
ஆச்சிஎன்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமா இவ்வுலகை விட்டு மறைந்தார்.


5 முதல்வர்களுடன் 

தனது திரை வாழ்க்கையில் சி.என்.அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் இணைந்து மேடை நாடகங்களில் பங்கு பெற்றிருக்கிறார்.  

 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' , "வேலைக்காரி'  உள்ளிட்ட சில நாடகங்களில் அண்ணாவுடனும்,  'உதயசூரியன்'  நாடகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு  கதாநாயகியாகவும் நடித்தார். ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

'அன்னமிட்டகை' உள்பட பல படங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடனும், 'லவகுசா' படத்தில் என்.டி.ராமராவுடனும் மனோரமா நடித்தார். இந்த ஐந்து பேரும் பிற்காலத்தில் முதல்-அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.


விருதுகள் 

  • 1300 படங்களிற்கு மேல் நடித்து சாதனை புரிந்ததால் கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்றார். 

  • 1989 ம் ஆண்டு புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார்.

  • 2002 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார்.

  • மனோரமாவின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு "கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது.
பேபி சாந்தா 

மனோரமா 26.05.1937ல் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில்  காசி கிழக்குடையார் - ராமாமிர்தம் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்

மனோரமாவின் தந்தை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் சாலை காண்ட்ராக்டராக இருந்தார். அதனால் மிகவும் வசதியான குடும்பமாக இருந்தது.  இந்த நிலையில் மனோரமாவின் தாயார், தனது உடன் பிறந்த தங்கையையே கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார்.

இதன் காரணமாக வீட்டு நிர்வாகம் மனோரமாவின் சித்தியின் கைக்கு மாறியது. அதன் பிறகு துன்புறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கியது.  இதனால் மனமுடைந்த மனோரமாவின் தாயார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது மனோரமாவுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை.

மனோரமாவின் அழுகுரலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, மனோரமாவின் தாயார் தூக்கு மாட்டிக்கொண்டு, உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து பதறினார்கள். கயிற்றை அறுத்து அவரைக் காப்பாற்றினார்கள். அதன் பின்னர் மனோரமாவை அழைத்துக்கொண்டு, அவரது தாயார் ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார்.

இளமையில் வறுமை

மிகவும் வறுமையில் வாடி வந்த அவர்கள், பலகாரம் சுட்டு விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள். அப்போது இரண்டு வயது சிறுமியாக இருந்த மனோரமா, 'திருநீலகண்டர்' படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய 'உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே' என்ற பாடலை பாடுவார்.

இதுபற்றி மனோரமாவின் நினைவுகள் :-

'எனக்கு இரண்டு வயது இருக்கும். மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை, ஓரளவு நயத்தோடு பாடினால் எந்த தாய்க்குதான் மகிழ்ச்சி பொங்காது!

தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன் முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அன்று முதல் என்னை பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் அருகே அழைத்து வைத்துக்கொண்டு, 'பாப்பா! ஒரு பாட்டு பாடு' என்று சொல்வார்கள். நானும் பாடுவேன்.

படிப்படியாக இந்த 'பாடும் வித்தை' எப்படியோ என்னை விடாமல் ஒட்டிக்கொண்டது. மற்றவர்களுக்கு பாடிக்காட்டி, பாடிக்காட்டி அதுவே நல்ல பயிற்சியாகவும் அமைந்து விட்டது.'



அதன் பிறகு மனோரமாவின் பாடல் நிகழ்ச்சி, பல வீடுகளின் விசேஷங்களில் முக்கிய இடம் பிடித்தது.

பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு முறை `பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாட்டை, 'மீரா' படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாட்டின் மெட்டில் பாடி ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற்றார்.

அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூட விழாக்கள், சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மனோரமாவை அழைத்துச்சென்று பாட வைத்தார்கள்.

பள்ளிக்கூடத்திற்கு சென்று திரும்பியதும், மனோரமா சினிமா 'டூரிங்' கொட்டகைக்கு சென்று பலகாரம் விற்பார்.

அங்கே பலகாரம் விற்பதுடன், எந்த காட்சியிலும், எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்கும் இலவச அனுமதியும் கிடைத்தது. 'பாட்டுப் பாடுற பொண்ணு படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்' என்று பிரியமாக விட்டு விடுவார்கள். அதனால் மனோரமாவும் இடை, இடையே தியேட்டருக்குள் சென்று பாடல் காட்சிகளை பார்த்து விட்டு வருவார்.

இப்படியே தியேட்டரில் படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டும் அவருடைய இசை ஞானம் வளர்ந்தது.


சில வருடங்களில் மனோரமாவின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே, பள்ளத்தூரில் ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ள மனோரமாவை அனுப்பி வைத்தார்.


மனோரமாவும், அவரது தாயாரும் வறுமையில் கஷ்டப்பட்டு வந்த நேரத்திலும், மனோரமாவின் இலவச பாட்டுக் கச்சேரி அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் நடந்து கொண்டு இருந்தது.

மனோரமா உருவானார்


இந்த நிலையில் கோட்டையூரில் ஏகாதசி நாள் விழா நடந்தது. அன்றைய தினம் இரவு 'அந்தமான் காதலி' என்ற நாடகம் நடந்தது. அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்கு பாட வராது. எனவே, அவருக்காக பாடவும், நாடகத்திற்கு இடையே நடனம் ஆடவும் ஒரு பெண்ணைத் தேடினார்கள். அந்த வாய்ப்பு மனோரமாவுக்கு கிடைத்தது. வறுமையுடன் போராடிக் கொண்டிருந்த மனோரமா, நாடக நடிகையானார்.


இந்த நாடகத்தில் பணிபுரிந்த டைரக்டர் சுப்பிரமணியன், உதவியாளர் திருவேங்கடம், ஆர்மோனிய வித்வான் தியாகராசன் ஆகியோர் வெகுவாக பாராட்டியதோடு, மனோரமா என்ற பெயரையும் வைத்தார்கள்.

கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீசியனாக இருந்த பால்ராஜ் என்பவர், மனோரமாவின் திறமையை பார்த்து வியந்தார். புதுக்கோட்டையில் நடந்த 'விதியின் விசித்திரம்' என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மனோரமாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.

வெறுமனே பாடியும், நடனமாடியும் வந்த மனோரமா, நாடக நடிகையானார். அதன் பிறகு அவர்கள் பசிக்கவலையும் மெல்ல, மெல்ல மறைந்தது.

அதன் பின்னர், எலக்ட்ரீசியன் பால்ராஜ் எழுதி தயாரித்த 'யார் மகன்?'  என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். சித்தன்னவாசலில் நடந்த இந்த நாடகத்திற்கு டைரக்டர் 'வீணை' எஸ்.பாலசந்தர் தலைமை தாங்கினார்.

வஞ்சிக்கப்பட்ட  காதல் 

சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ்.எம்.ராமநாதன், மனோரமாவை காதலித்தார். அந்தக் காதலை மனோரமா ஏற்றுக் கொண்டார்.

மனோரமா - ராமநாதன் திருமணம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.


மனோரமா - ராமநாதன் குடும்ப வாழ்க்கை, ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது. கர்ப்பிணியான மனோரமா, 9 வது மாத இறுதியில், பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குச் சென்றார்.  குழந்தை பிறந்தது. அவர்தான் 'உதிரிப்பூக்கள்'  நடிகர் பூபதி. குழந்தை பிறந்த 15' வது நாளில் மனோரமா வீட்டுக்கு வந்தார் கணவர்  ராமநாதன்.

பச்சை உடம்போடு பலவீனமாக இருந்த மனோரமாவை மீண்டும் வந்து நாடகத்தில் நடிக்கும்படி வற்புறுத்தினார். கையில் பிஞ்சுக் குழந்தையுடன் இருந்த மனோரமா, 'குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆகிறது. இன்னும் கொஞ்ச காலம் போகட்டும்' என்றார்.

மனைவி, மகன் பற்றிய சிந்தனையே இல்லாமல், தனது நாடகக் கம்பெனி பற்றிய எண்ணம் மட்டுமே கொண்டிருந்த ராமநாதன், மனோரமா மீது கோபம் கொண்டார். அன்று திரும்பிச் சென்றவர் பிறகு திரும்பி வரவில்லை.  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார் கணவர் ராமநாதன்.  மனோரமாவின் காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. 

இதுபற்றி மனோரமா நினைவுகள் :-

'நான் கொண்டது உண்மையான காதல். அவர் மனமும் அவ்வாறே இருக்கும் என்று நம்பினேன். எங்கள் பிரிவு தற்காலிகமானது என்று நினைத்தேன். ஆனால் என் நம்பிக்கை வீணாயிற்று. இடி விழுந்தது போல, ஒரு நாள் அவரிடமிருந்து 'விவாகரத்து நோட்டீஸ்' வந்தது. அந்த நோட்டீஸ், எனது நம்பிக்கையையும், எதிர்காலம் பற்றிய கனவுகளையும் பொடிப்பொடியாக்கி விட்டது. சோகச் சுமையை தாங்கிப் பழக்கப்பட்ட நான், இதையும் தாங்கிக் கொண்டேன். அவருடைய காதல் நாடகத்தில் நான் ஒரு ஏமாந்த கதாப்பாத்திரம்!'

எதிர்நீச்சல்


ராம பாலகான சபாவில் இருந்து பிரிந்து வந்த நடிகர் முத்துராமன், 'குலதெய்வம்' ராஜகோபால் ஆகியோர், 'கலைமணி நாடக சபா' என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தனர். அந்த நாடகக் குழுவில் 'புயலுக்குப்பின்' என்ற நாடகத்தில் நடித்தார்

பிறகு, 'வைரம் நாடக சபா'வில் நடித்துக் கொண்டிருந்தபோது, எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தின் 'மணிமகுடம்' நாடகத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக மனோரமா சென்னை வந்தார்.

அதையடுத்து கே.ஆர்.ராமசாமியின் நாடகங்களிலும், 'பிரண்டு' ராமசாமியின் நாடக மன்றத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

வெள்ளித்திரை பயணம்:- மாலையிட்ட மங்கை

நாடகத்தில் நடித்து வந்த மனோரமா 1958ல் வெளிவந்த கவிஞர் கண்ணதாசனின்  "மாலையிட்ட மங்கை'  என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். முதன்முதலில் ஆச்சி கதாநாயகியாக   நடித்த படம் 'கொஞ்சும் குமரி'.


நாகேஷ் - மனோரமா 

1960- 69 களில் நாகேஷ் - மனோரமா ஜோடி நகைச்சுவையில் சிறந்து விளங்கியது. 1970 - 80 களில் சோ மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகிய இருவருடன் இணைந்து நடித்த ஆச்சி நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்தார்.

தில்லானா மோகனாம்பாள் - ஜில் ஜில் ரமாமணி 

"தில்லானா மோகனம்பாள்', மனோரமாவின் நடிப்பில் ஒரு மணி மகுடம். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டரில் வரும் மனோரமாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. டி.எஸ்.பாலையா, சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு முன் நடிப்பதால் முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு மனோரமா தயங்கியுள்ளார். பின் இயக்குநர் தைரியம் ஊட்டி இவரை நடிக்க வைத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப்பேரொளி பத்மினி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் அவர்களை விடவும் அதிகமாக ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது மனோரமாவின் ஜில் ஜில் ரமாமணி வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்சாரம் அது மின்சாரம் - கண்ணம்மா 

குடும்ப சித்திரமாக வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கண்ணம்மா என்ற வேலைக்காரியாய் நடித்து அசத்தியிருப்பார். விசு, ரகுவரன், லட்சுமி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் மனோரமா பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க பாடுபடுவார். இந்தப் படத்தில் இவர் பேசிய "கம்முன்னு கிட" வசனம் மிகவும் புகழ்பெற்றது.


நடிகன் - பேபி

நடிகன் படத்தில் மனோரமா நடித்த பேபி அம்மா கதாபாத்திரம் இன்றளவும் மறக்க முடியாத ஒரு பாத்திரமாக திகழ்கிறது. சத்யராஜ், குஷ்பூ இருவருடனும் இணைந்து மனோரமா நடித்த நடிகன் திரைப்படம், மனோரமாவிற்கு மிகவும் பிடித்த ஒரு வேடம் என்று சமீபத்திய பேட்டியில் கூட அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தில் 2 பெண்களின் கார்டியனாக நடித்த மனோரமா நகைச்சுவையில் பின்னியிருப்பார்.

சின்னக் கவுண்டர் - ஆத்தா 

சின்னக்கவுண்டர் படத்தில் ஆத்தாக் கிழவியாக நடித்து அசத்தியிருந்தார் மனோரமா. விஜயகாந்தின் அம்மாவாக இந்தப் படத்தில் நடித்த மனோரமா தெற்றுப் பல்கள் வைத்து நடித்திருந்தார். குறிப்பாக இந்தப் படத்தில் அவரின் சிரிப்பு குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாகத் திகழ்ந்தது. சின்னக்கவுண்டர் படமும் மனோரமாவிற்கு மிகவும் பிடித்த படமென்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு வாசல் 

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. நிறைய படங்களில் அவர் நடித்திருந்தாலும் கிழக்கு வாசல் திரைப்படம் அவரின் அம்மா வேடத்தை நன்றாக பிரதிபலித்தது. மகன் கார்த்திக்காக குஷ்பூவை பெண் கேட்டு செல்லும் காட்சி மற்றும் குஷ்பூவின் வீட்டில் அவர் படும் அவமானங்கள் ஆகியவை ரசிகர்களையும் கண்ணீர் சிந்த வைத்தது.

சின்னத் தம்பி 

சின்னத் தம்பி படத்தில் பிரபுவின் அம்மாவாக நடிப்பில் கலக்கியிருப்பார்.இந்தப் படத்தில் மனோரமா ஏற்று நடித்த கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஏராளமான படங்களில் மனோரமா கண்ணம்மா என்னும் பெயரிலேயே நடித்திருக்கிறார். இதைத்தவிர அண்ணாமலை, மே மாதம், பாட்டி சொல்லைத் தட்டாதே, சிங்காரவேலன், அருணாசலம், மறுமலர்ச்சி, புதிய பாதை, அபூர்வ சகோதரர்கள், மன்னன் போன்ற திரைப்படங்களும் ஆச்சியின் நடிப்பில் குறிப்பிடத் தகுந்த படங்கள் ஆகும்.

பாடகியாக 

சிறந்த நடிகை மட்டுமன்று நல்ல பாடகியாகவும் திகழ்ந்த ஆச்சி சுமார் 300 க்கும் அதிகமான பாடல்களை தனது திரையுலக வாழ்க்கையில் பாடியிருக்கிறார். 'மகளே உன் சமத்து' படத்தில் மனோரமா தனது சொந்தக் குரலில் 'தாத்தா தாத்தா பொடி கொடு' என்ற பாடலை பாடி இருக்கிறார். அதன் பின்னர் பொம்மலாட்டம் படத்தில் 'வா வாத்தியாரே ஊட்டாண்ட நீ வராங்கட்டி நான் உடமாட்டேன் ' என்ற பாடலையும், 'பாட்டிச் சொல்லைத் தட்டாதே' படத்தில் 'டில்லிக்கு ராஜா ஆனாலும் பாட்டிச் சொல்லைத் தட்டாதே' என்ற பாடலையும் பாடினார். 'மே மாதம்' படத்தில் `மெட்ராசை சுத்திப் பார்க்க போறேன்' என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவின்  புகழஞ்சலி

மனோரமா ஒரு மனோரஞ்சிதப் பூ. மனோரஞ்சிதப் பூவுக்குத்தான் ஒரு வித்தியாசமான குணநலம் உண்டு. அதாவது, நாம் எந்த பூவை மனதில் நினைத்துக் கொண்டு மனோஞ்சித பூவை நுகர்கிறோமோ, அது அந்த பூவின் வாசனத்தை அப்படியே வெளிப்படுத்தும். அதேபோல், மனோரமா, நாம் ஒரு நகைச்சுவை நடிகையாக பார்த்தோமானால், அவர் அதைப் போலவே பளிச்சிடுவார். ஒரு குணச்சித்திர நடிகையாக பார்த்தால், அதைப்போல் அப்படியே பளிச்சிடுவார். இதுபோல், எந்த மாதிரி அவரைப் பார்த்தாலும், அந்த பாத்திரமாகவே அவர் காட்சியளிப்பார்.