Zen Parables
டைடோ கோகுஷி புனிதமான ஜென் துறவி. ஒருநாள், ஆற்றங்கரையில் இருந்த ஆசிரமத்தின் குளிர்ந்த ஆலமர நிழலில், அவர் தியானத்தில் அமர்ந்து இருந்தார்.
அவரை சோதனை செய்து விளையாட நினைத்த சிறுவன் ஒருவன் குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு
பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டு ஜென் குருவிடம் வந்தான்.
துறவியின் முன்னால் நமட்டு சிரிப்புடன் நின்றான்.
துறவி அவனை நிதானமாக பார்த்தார்.
அவன் துறவியை பார்த்து,
"குருவே என்னுடைய கேள்விக்கு சரியான பதிலை உங்களால் சொல்ல முடியுமா என பார்க்க விரும்புகிறேன்" என்றான்.
துறவி புன்னகைத்தார்.
அவன் துறவியைப் பார்த்து தனது கேள்வியை கேட்டான்
"குருவே, என்னுடைய கைகளுக்குள்
வைத்திருக்கும் பறவை உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா?"
என்று கேட்டான்.
"குரு "இறந்து விட்டது" என்று சொன்னால், தன்னுடைய கையில்
இருக்கும் குருவியினை பறக்கவிடுவது; அப்படி இல்லாமல் குரு
"உயிருடன் உள்ளது" என்று சொன்னால் தன்னுடைய கைகளுக்குள் மறைந்து இருக்கும் குருவியின் கழுத்தை
நெரித்துக் கொன்று விடுவது" - இது தான் அவன் திட்டம்.
ஜென் துறவி சொன்னார்,
" இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது"
உணர்ந்தது
நமது கேள்விக்கான விளக்கங்களும், நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் நம்மிடமே இருக்கின்றன"