2014-2015ம் கல்வியாண்டில்
TET
தேர்ச்சி பெற்ற 3500
SG , 7000 BT, PG என 10500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
31.05.2015ல் தமிழகம்
முழுவதும் 4000க்கும் அதிகமான ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
இக்காலிப்பணியிடங்களுக்கு 2015-2016ம் கல்வியாண்டுக்கான
TET தேர்வு நடத்தி பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு D.T.Ed,
B.Ed படித்து வேலைக்கு
காத்திருக்கும் பட்டதாரிகளிடையே இருந்து வருகிறது.
2014-2015ம் கல்வியாண்டின்
மாணவர் சேர்க்கை அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள உபரி ஆசிரியர்கள்
கணக்கெடுக்கப்பட்டு பணிநிரவல் (Deployment) செய்யப்பட உள்ளனர்.
2014-2015ம் கல்வியாண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை
விட, தற்போதுள்ள
உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் 2015-2016ம்
கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர்
நியமனத்துக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது