Provisional Mark Sheet விநியோகம்
பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு நாளை(14.05.2015) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Sheet) மற்றும் மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படுகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
இம்மாதம் 7ம் தேதி, பிளஸ் 2 தேர்வு
முடிவு வெளியானது. தேர்ச்சி பெற்றவர் களுக்கு, தற்காலிக சான்றிதழ் வழங்கும்
திட்டத்தை, பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளிகளில், நாளை (14ம் தேதி) முதல் பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் தலைமை ஆசிரியரின்
கையொப்பத்துடன் வழங்கப்பட உள்ளது. இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
இதை பயன்படுத்தி மாணவ, மாணவியர் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம். நாளை முதல் 18ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளில் இச்சான்றிதழ்
வழங்கப்படும்; அதன்பின், dge.tn.nic.in இணையதள முகவரியில் சென்று மாணவ,
மாணவியரே இச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.