Wednesday, May 20, 2015

நாளை 10ம் வகுப்பு Result ; சிறப்பு துணைத் தேர்வு பதிவு ,மறுகூட்டல் மே 22 முதல் 27; மதிப்பெண் சான்றிதழ் மே 29

SSLC RESULT


பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி, காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்வர்கள், தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை   இணையதளத்தில் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே 29ம் தேதி முதல் மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய பள்ளியிலும் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, ஜூன் 4ம் தேதி முதல் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தேர்வு முடிவு வெளியாகும் இணையதள முகவரிகள்

விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டல் 

விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம். 

1
மொழிப்பாடங்கள் ( Tamil, English)
ரூ.305 (ஒரு பாடத்திற்கு)
2
கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்
ரூ.205  (ஒரு பாடத்திற்கு)

விண்ணப்பிக்கும் பள்ளியில் கட்டணத்தை பணமாக செலுத்தி, ஒப்புகைச் சீட்டு பெற வேண்டும். ஒப்புகைச் சீட்டின் விண்ணப்ப எண் அடிப்படையிலேயே, மறு கூட்டல் முடிவுகளை அறியலாம்


சிறப்பு உடனடித் துணைத் தேர்வு


பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காதவர் களுக்கான சிறப்பு உடனடித் துணைத் தேர்வுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.