Sunday, January 10, 2016

SSLC Science Practical Instructions February 2016



10th Science Practical Examination

Starting Date: 22.02.2016
Ending Date: 02.03.2016
Morning Session : 9 to 12 ,  Evening Session: 2 to 5

Subject Code: 11
Time Duration : 2 ½ Hours
  
                        Physical Science      -           1 ¼ Hour

                        Biological Science    -           1 ¼ Hour

Mark Distribution:              

Total Marks    -           25  ( Pass mark  15  )
Internal            -           5  ( Att-1,Perfo-1, Motiv-1, Record-2)

External :-

Physical Science
                        Physics           - 1 Question   -           5 Marks
                        Chemistry       - 1 Question   -           5 Marks
                                                           
Total    -           10 Marks       
                       
Biological Science
                        Botany            - 1 Question   -           5 Marks
                        Zoology          - 1 Question   -           5 Marks
                                                           
Total    -           10 Marks       

Click Here to Download 10th Science Practical Instructions
  

HSS HM PANEL - PG,PD,HS_HM TO HSS HM - PANEL PREPARATION INSTRUCTION AND FORMS AS ON 01.01.2016

DSE - PG,PD, HS_HM  TO HSS_HM PROMOTION PANEL AS ON 01.01.2016 PREPARATION INSTRUCTIONS 

 PG/PD/HS_HM to HSS_HM Panel Preparation Inst. and Form

DSE - PG,PD, HS_HM TO MUNICIPAL_HSS HM PROMOTION PANEL AS ON 01.01.2016 PREPARATION INSTRUCTIONS 

 PG/PD/HS_HM to MUNICIPAL_HSS HM Panel Preparation Inst. and Form

2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோர் 'PAN CARD' எண்ணை தெரிவிக்க வேண்டும்

நகை விற்பனை  25% குறைவு 

2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோர், 'பான் கார்டு' எண்ணை தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், நகை விற்பனை, 25 - 30 சதவீதம் குறைந்து விட்டதாக, தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  

நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை கூட்டமைப்பான - ஜி.ஜே.எப்.,பின் தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது: 2016 ஜனவரி 1 முதல்,   2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோரிடம்  வருமான வரித் துறையின் பான் கார்டு எண் பெற வேண்டும் என, மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
இதற்கு முன், இந்த வரம்பு, 5 லட்சம் ரூபாயாக இருந்தது; இது, தற்போது, 2 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டதால், தங்க நகை விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக,கிராமப்புறங்களில் நகை வர்த்தகம் குறைந்துள்ளது. நாட்டின் மொத்த நகை விற்பனையில், கிராமப்புறங்களின் பங்களிப்பு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கிராமப்புற மக்கள், பாதுகாப்பிற்காக, தங்க நகைகளில் முதலீடு செய்கின்றனர்.

பான் கார்டு இல்லாததால், பலர் நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு தழுவிய அளவில், தங்க நகை விற்பனை, 25 - 30 சதவீதம் சரிவடைந்துள்ளது. மத்திய அரசு, உடனே இப்பிரச்னையில் தலையிட்டு, பான்கார்டுக்கான நகை விற்பனை வரம்பை, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என
நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை கூட்டமைப்பின் சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
 

Saturday, January 9, 2016

சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனம்


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 4362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்க்கான எழுத்துத்தேர்வு 31.05.2015 அன்று நடைபெற்றது.

'எழுத்துத்தேர்வு என்பது தகுதித் தேர்வு மட்டுமே (???), நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நியமனம் நடக்கும்' என அரசு அறிவித்தால், சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'எழுத்துத்தேர்வு மதிப்பெண்-150, வேலைவாய்ப்பு முன்னுரிமைக்கு  -10, உயர்கல்விதகுதிக்கு-5, ஆய்வக உதவியாளர் பணியில் முன் அனுபவத்திற்கு-2 என மதிப்பெண்களை ஒதுக்கி தேர்வு செய்யலாம்'  என உத்தரவிட்டது.

தற்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர், ஆய்வக உதவியாளர் பணி நியமனங்களுக்கான ஏற்பாடுகள் இருக்கும்  என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு ( 10th Science Practical Exam Date Announced)

அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை அறிவித்துள்ளது. இதன்படி 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகளில், ஜன., 11 முதல், 27க்குள், இரண்டாம் பருவ தேர்வை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 


Special Link: 

Friday, January 8, 2016

Post Continuation Order (Pay Extension Order) for 3 months from 01.01.2016

நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் :மூன்று நாட்கள் வங்கி சேவை பாதிக்கும்


பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான, "ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்', "ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர்', "ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா' ஆகிய 5 வங்கிகளின் நிர்வாகங்கள் புதிய பணி முறைகளை வாபஸ் பெறக் கோரி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுகின்றனர். 
 
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8, ஜனவரி 9 (இரண்டாவது சனிக்கிழமை), ஜனவரி 10 (ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
'வங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பணிச் சலுகை ஆகியவை தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை கைவிடக் கோரி நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது' என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார். 

வங்கிகள் போராட்டம் காரணமாக ஏடிஎம் மையங்களிலும் பண தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Wednesday, January 6, 2016

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு கட்டாயம்.

2006 ம் ஆண்டு ஜூன்  12 ம் தேதி, தமிழக அரசு கொண்டு வந்த தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால், 2006ம் ஆண்டு  ஒன்றாம் வகுப்பு சேர்ந்த மாணவர்கள் அனைவரும் 2016ல் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழை கட்டாயமாக எழுதவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவ்வுத்தரவால், தமிழகத்தில் சிறுபான்மை மொழிகளாக உள்ள    உருது,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகியவற்றை தாய்மொழியாக பயின்று வரும் மாணவர்களும் இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தை முதன்மைத் தேர்வாக எழுதவேண்டும்.
 
இம்மாணவர்கள் மார்ச் 15,16ல்  தமிழ்  தேர்வுகளையும் , கூடுதலாக , ஏப்ரல் 13ல்  சிறுபான்மை மொழிப்பாடத் தேர்வினையும்    எழுதவேண்டும்.

COMPUTER SCIENCE PRE-PUBLIC MODEL QUESTION PAPER (4 Pages )

Tuesday, January 5, 2016

பொங்கல் போனஸ் அரசாணை (Pongal Bonus G.O.)

Click Here to Download the G.O's for Pongal Bonus

தமிழில் 

fin_t_1_2016_0.pdf            (பணியாளர்கள் )

fin_t_2_2016.pdf                (ஓய்வூதியதாரர்கள்)


ஆங்கிலத்தில் 


fin_e_1_2016_0.pdf       (Employees)

fin_e_2_2016.pdf           (Pensioners)

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை (March/April 2016)அறிவிப்பு


பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிப்பு

மார்ச் 4 - தமிழ் முதல் தாள்
மார்ச் 7 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 9 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 10 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 14 - வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 17 - வணிகவியல், மனையியல், புவியியல்

மார்ச் 18 - கணிதம், விலங்கியியல், ஊட்டச்சத்து, நூண்ணுயிரியியல்  
மார்ச் 21 - கணினி அறிவியல், இந்திய கலாச்சாரம், உயிரி வேதியியல்,   
                     தொடர்பு மொழி ஆங்கிலம், சிறப்பு பாடம் - தமிழ்
மார்ச் 23 - அனைத்து தொழிற்கல்வி பாடங்கள் (கருத்தியல் ), நர்சிங்,  
                     புள்ளியியல், அரசியல் அறிவியல்.
மார்ச் 28 - உயிரியல், தாவரவியல், வரலாறு,  வணிக கணிதம்
ஏப்ரல் 1 - இயற்பியல் , பொருளியல் 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிப்பு

மார்ச் 15 - தமிழ் முதல் தாள்
மார்ச் 16 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 22 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 29 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 4 - கணிதம்
ஏப்ரல் 7 - அறிவியல்
ஏப்ரல் 11 - சமூக அறிவியல்
ஏப்ரல் 13 - விருப்ப மொழி பாடம்  ( Minority Languages )

Monday, January 4, 2016

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு - G.O. விரைவில்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
எனது தலைமையிலான தமிழக அரசு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் இன்றியமையாப் பணியினை கருத்தில் கொண்டு, அவர்கள் தங்கள் பணிகளை செம்மையாக செய்திட  ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.


அந்த வகையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு மிகை ஊதியம் அதாவது போனஸ் மற்றும் சிறப்பு மிகை ஊதியம், அதாவது சிறப்பு போனஸ் மற்றும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு ஆகியவை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி,

1. 2014-2015 ஆம் நிதி ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாடீநு என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்.

2. ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள்,

கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

3. உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை / சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

4. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்  பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய்  பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

இதனால் அரசுக்கு 326 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இ- சேவை மையங்களில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

வருவாய்த் துறை மூலம் நேரடி பட்டா, உள்பிரிவு பட்டா மாற்றம் செய்ய வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமலேயே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. வருவாய்த் துறை மூலம் நேரடி பட்டா மாறுதல், உள்பிரிவு பட்டா மாறுதல் பணிகளை வருவாய், நில அளவைத் துறைப் பணியாளர்களால் வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் பலரது சொத்துக்கள் தங்கள் மூதாதையர்கள் பெயரிலேயே இருப்பதால், அவர்களால் அரசு வழங்கக் கூடிய விவசாயக் கடன், சலுகைகளைப் பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். 
இதனால், சொத்துக்கள் உரிமையாளர்கள் பெயரில்தான் இருக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து கைகளால் எழுதப்பட்ட பட்டா, நிலப் பதிவேடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, கணினி வழி பட்டா வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த நிலையில், பட்டா மாறுதலுக்கு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் வசதி நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மேம்படுத்தி பட்டா மாறுதல்கள் இணைய வழியில் வழங்கும் வகையில், பட்டா மாறுதலுக்கான தமிழ் நிலம் மென்பொருள் என்ற இணையதள வசதியுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியைக் கொண்டு பட்டா மாறுதல் கோரும் பொதுமக்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உள்ள பொது இ-சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பம் அளிக்கலாம்.

விண்ணப்பிப்போரின் சொத்து விவரங்கள் குறித்த அசல் ஆவணங்களை இம் மையத்தில் அளித்து அவை இ-சேவை மையத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு, மீண்டும் மனுதாரருக்கு ஒப்படைக்கப்படும். விண்ணப்பம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு இ-சேவை மையத்தால் மனுதாரருக்கு வழங்கப்படும். இம் மனு ஏற்கப்பட்ட விவரம் மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

பட்டா மாற்றப்பட்ட பின்னர் அதன் உத்தரவை பொது இ-சேவை மையங்களில் மனுதாரர் பெற்றுக் கொள்ளலாம். இப் பட்டாவுக்கு வட்டாட்சியர் கையொப்பம் தேவையில்லை. இதன் மூலம், பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமலேயே பட்டா மாறுதல் உத்தரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

Sunday, January 3, 2016

CBSE - 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

CBSE  - March 2016 Public Exam Date's Announced for 10th & 12th


10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ., தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு மார்ச்1ம் தேதி துவங்கி மார்ச் 28ம் தேதி முடிவடைகிறது. சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.




மின் வாரியத்தில் உதவி மின் பொறியாளா் (TNEB - Recruitment for AE in Electrical/Machanical/Civil) பணியிடங்களுக்கு ஜனவரி 11 வரை விண்ணப்பிக்கலாம்.

Re post
 

375 உதவி மின்பொறியாளர் ( Electrical, Mechanical, Civil )பணியிடங்களுக்கு ஜனவரி 11 வரை onlineல்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

ஊதிய விகிதம்
:
Rs. 10,100 - 34,800 + 5100 GP 
வயது வரம்பு
:
OC பிரிவிற்கு  மட்டும் 30 வயது வரை.
மற்ற அனைவருக்கும் வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி  
:
AE(Electrical) :  BE (EEE / ECE / EIE / CSE /IT)
AE(Mech)      : BE Mech/Production Engg/ Manufac.Engee  / AMIE A&B
AE (Civil)       : BE Civil / AMIE A&B

online பதிவிற்கு கடைசி தேதி
:
11.01.2016
தேர்வு நடைபெறும் நாள்       
:
: 31.01.2016 (Sun),
Centre  for  Entrance  Examination, Anna University, Chennai-25    

For Applying Online : ONLINE DIRECT RECRUITMENT APPLICATION PORTAL

 

 Notification -1.pdf 

Syllabus.pdf 1.pdf 

Community list.pdf 

Schema of Exam - 1.pdf 

GUIDELINES TO FILLING UP APPLICATION - 1.pdf 

Guidelines to upload Images - 1.pdf 

Wednesday, December 30, 2015

மகப்பேறு விடுமுறை இனி 26 வாரங்கள் : மத்திய அரசு அறிவிப்பு விரைவில்.....

 
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்  மேனகாகாந்தி  நிருபர்களிடம் கூறுகையில், ''குழந்தை பிறந்த பின், ஆறு மாத காலம் குழந்தைகளை பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், பெண்களுக்கு 26 வார காலம் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தொழிலாளர் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தொழிலாளர் துறை உயரதிகாரி கூறுகையில், 'தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறரை மாதம், மகப்பேறு விடுமுறை அளிப்பதென  தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. விரைவில் அறிவிப்புவெளியாகும்' என்றார்.