பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான, "ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்',
"ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்', "ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர்', "ஸ்டேட்
பாங்க் ஆப் மைசூர்', "ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா' ஆகிய 5 வங்கிகளின்
நிர்வாகங்கள் புதிய பணி முறைகளை வாபஸ் பெறக் கோரி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட
நாடு முழுவதும் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள்
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜனவரி 8, ஜனவரி 9 (இரண்டாவது
சனிக்கிழமை), ஜனவரி 10 (ஞாயிறு) ஆகிய மூன்று நாள்கள் தொடர்ந்து வங்கிகள்
செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
'வங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பணிச் சலுகை ஆகியவை தொடர்பாக
பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை
கைவிடக் கோரி நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது' என அகில
இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம்
தெரிவித்தார்.
வங்கிகள் போராட்டம் காரணமாக ஏடிஎம்
மையங்களிலும் பண தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.