Special Link: CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15
அரசு
பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,
அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு
அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, வெளிநாடு செல்ல முடியும்.
இந்த அனுமதியை பெற,
தங்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் "அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என தமிழக அரசு (Go.Ms.No. 71 Dt. 02.07.2015) தெரிவித்துள்ளதால்"
'பாஸ்போர்ட் பெறவும்,
புதுப்பிக்கவும், தடையில்லா சான்றுக்காக காத்திருக்க வேண்டாம்' எனவும் . 'பாஸ்போர்ட் பெற விரும்புவோர், விண்ணப்ப படிவ நகலை, பணி
நியமன அலுவலருக்கு அனுப்பி விட்டு, பாஸ்போர்ட் அதிகாரிக்கு
விண்ணப்பிக்கலாம்' எனவும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய செயல்முறைகளில் தெரிவித்துள்ளார்.
Link: MS_71 _20150001.pdf