Monday, January 30, 2017

ஏப்ரல் 29, 30-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன. 

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. 

தேர்வுக் கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 8-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். 

மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். BC, MBC ,SC,ST ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வரும் ஏப்ரல் மாதம் நடத்தப் படவுள்ள டெட் தேர்வு 3-வது டெட் தேர்வாகும். 

தமிழகத்தில் முதலாவது டெட் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதமும், அந்த தேர்வில் நேரக்குறைவு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோ பர் மாதம் துணை தேர்வாக இன்னொரு தேர்வும் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என 3 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 

மாற்றுத்திறனாளிகளுக் கென சிறப்பு டெட் தேர்வு 2014-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. 

ஏற்கெனவே நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. 

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, டெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்பு மதிப்பெண்) கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

டெட் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் டெட் தேர்வு எழுதலாம். 


Friday, January 27, 2017

ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30க்குள் நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்


 
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET- Teachers Eligibility Test)  தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கில், கடந்தாண்டு தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. 

எனவே,  தமிழகத்தில் வரும் 30.04.2017 க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனவும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு  ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில்  வெற்றி பெற்றவர்களை கொண்டு சுமார் 8000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 


Monday, January 16, 2017

16.01.2017 முதல் ATMகளில் ஒரு நாளைக்கு ரூ.10,000 எடுக்கலாம்: வாரத்திற்கு 24000/- என்பதில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பண மதிப்பு நீக்க அறிவிப்பை தொடர்ந்து , ஏடிஎம்களில் தினந்தோறும்  2000/- பிறகு தினந்தோறும்  ரூபாய்  4500/- எடுக்கும் வகையில் இருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இன்று(16.01.2016) முதல் ATM களில்,  10,000 ரூபாய் எடுக்கலாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. 

ஆனால் வாராந்திர அளவில் எந்த மாற்றமும் இல்லை.வாரத்தில் 24000/- வரை மட்டுமே எடுக்க முடியும்.

மேலும் , நடப்பு வங்கிக்கணக்கில்(Current Account) இருந்து 50,000 ரூபாய் என்ற உச்சவரம்பு தளர்த்தப்பட்டு, தற்போது , ருபாய் 1,00,000/- வரை எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 13, 2017

Kombu Vacha Singamda - Official Lyric Video | G V Prakash Kumar, Arunra...

எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜனவரி 17 ம் தேதி அரசு பொது விடுமுறை நாள்: தமிழக அரசு அறிவிப்பு

 
எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜனவரி 17 ம் தேதியை அரசு பொது விடுமுறை  நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமசந்திரனின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 (17.01.2017 மட்டும்) ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் , உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகள், அரசு வாரியங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்படும். தனியார் நிறுவனங்கள் ஜன.,17 ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.''

இன்று வெளியான அறிவிப்பையடுத்து, நாளை முதல் செவ்வாய் கிழமை வரை 4 நாட்கள் தொடர்ச்சியாக அரசு விடுமுறையாக அமைந்துள்ளது. 

Saturday, December 31, 2016

01.01.2017 முதல் ATMகளில் ஒரு நாளைக்கு ரூ.4500 எடுக்கலாம்: வாரத்திற்கு 24000/- என்பதில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நாளை (01.01.2017) முதல் ATM இயந்திரங்களில்  வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு  ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 17, 2016

Departmental Examinations, December 2016 Hall Ticket (Dates of Examinations: 23.12.2016 to 31.12.2016)

 click below to download the hall ticket


7% அகவிலைப்படிக்கான அரசாணை ( G.O. for 7% DA from July 2016)

MARCH 2017 - HSE , SSLC PUBLIC EXAM TIME TABLE


Click Here to Official TimeTable Download

XII TIME TABLE

EXAM COMMENCE AT 10.00 AM   ENDS AT 1.15 PM

10.00 AM TO 10.10 AM        -           Reading the Question Paper
10.10 AM TO 10.15 AM        -           Verification of Particulars by the Candidates
10.15 AM TO 1.15 PM           -           Duration of the Examination

DATE
DAY
SUBJECT
02.03.2017
THURSDAY
LANGUAGE PAPER 1
03.03.2017
FRIDAY
LANGUAGE PAPER 2
06.03.2017
MONDAY
ENGLISH PAPER 1
07.03.2017
TUESDAY
ENGLISH PAPER 2
10.03.2017
FRIDAY
COMMERCE, HOME SCIENCE. GEOGRAPGY
13.03.2017
MONDAY
CHEMISTRY, ACCOUNTANCY
17.03.2017
FRIDAY
COMMUNICATIVE ENGLISH, INDIAN CULTURE, COMPUTER SCIENCE, BIO-CHEMISTRY, ADVANCED LANGUAGE(TAMIL)
21.03.2017
TUESDAY
PHYSICS, ECONOMICS
24.03.2017
FRIDAY
ALL VOCATIONAL THEORY, POLITICAL SCIENCE, NURSING(G), STATISTICS
27.03.2017
MONDAY
MATHEMATICS, ZOOLOGY, MICRO BIOLOGY, NUTRITION AND DIETETICS
31.03.2017
FRIDAY
BIOLOGY, HISTORY, BOTANY,
BUSINESS MATHS



SSLC TIME TABLE
EXAM COMMENCE AT 09.15 AM   ENDS AT 12.00 NOON

09.15 AM TO 09.25 AM        -           Reading the Question Paper
09.25 AM TO 09.30 AM        -           Verification of Particulars by the Candidates
09.30 AM TO 12.00 NOON   -           Duration of the Examination

DATE
DAY
SUBJECT
08.03.2017
WEDNESDAY
TAMIL PAPER 1
09.03.2017
THURSDAY
TAMIL PAPER 2
14.03.2017
TUESDAY
ENGLISH PAPER 1
16.03.2017
THURSDAY
ENGLISH PAPER 2
20.03.2017
MONDAY
MATHEMATICS
23.03.2017
THURSDAY
SCIENCE
28.03.2017
TUESDAY
SOCIAL SCIENCE
30.03.2017
THURSDAY
PART IV OPTIONAL LANGUAGES

Thursday, December 15, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு ( 7% DA Hike for TN GOVT EMP)

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 
 
இந்த அகவிலைப்படி உயர்வானது 01.07.2016 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர். 
 
7% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் அகவிலைப்படி 125 -ல் இருந்து 132 சதவீதமாக உயரும்.  ஜூலை 1-ம் தேதி முதல் நவ.,30 வரையிலான அகவிலைப்படி உயர்வு வங்கி கணக்கில் செலுத்தப்படும். டிசம்பர் மாத சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 
 

Sunday, December 11, 2016

E - Certiifcate (Community,Nativity, Income) Support Files

Install the firefox version 38.0. Click Below to download

Firefox Setup 38.0

Install AzhagiPlus Setup for Unicode Typing 
(Phonetic or Typewriter classic keyboard). 
Click Below to download

AzhagiPlus-Setup 

Saturday, December 3, 2016

ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம் - RBI அறிவிப்பு

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய,  01.01.2017 முதல் Aadhaar எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ATM, Credit Card, NetBanking, Mobile Banking உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு PIN Number  மற்றும் Passwordகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், 

வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் ஆதார் வழி மட்டுமே செய்ய முடியும். ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொறுத்த வேண்டும்.ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்கள் இடையிலான KYC(Know Your Customer) திட்டத்திற்கு மாற்றாக Aadhaar  எண்ணை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமையாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, November 30, 2016

இன்று முதல் வங்கிகளில் பணம் எடுக்க உச்சவரம்பில்லை: ரிசர்வ் வங்கி அனுமதி

வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளருக்கு தேவைப்படும் பணத்தை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கணக்கில் இருந்து ரூ.24,000 மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி வரம்பிற்கு கூடுதலாக பணம் எடுக்க அனுமதிக்கலாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

குறிப்பாக இன்று முதல் வங்கிகளில் எடுக்கும் பணத்தை, 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவையை பரிசீலித்து பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால், பணம் டெபாசிட் செய்ய ஏற்படும் தயக்கத்தைப் போக்க இந்த நடவடிக்கை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

Thursday, November 24, 2016

EMIS - PHOTO UPLOAD ஆகவில்லையெனில் FSResizerSetup36.zip மென்பொருள் பயன்படுத்தவும்

EMIS  PHOTO UPLOAD செய்யும் போது, File is must be in JPG or JPEG format என error  வந்தால் கீழ்க்கண்ட மென்பொருளை பயன்படுத்தி group edit செய்யவும்.

file is available on www.tngdc.gov.in 

(or) click here to download  FSResizerSetup36.zip

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: 

சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வை நிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித் திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின் ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் 
கூறப்பட்டுள்ளது.

XII NOMINAL ROLL ONLINE UPDATE : FROM 24.11.2016 TO 30.11.2016

மார்ச் 2017 மேல்நிலை பொதுத்தேர்வுக்காக, Offlineல்  தயாரிக்கப் பட்ட   NOMINAL ROLL பெயர்ப்பட்டியலை  24.11.2016 முதல் 30.11.2016 வரை www.tngdc.gov.in வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்வதற்கு முன்னரே அனைத்து திருத்தங்களையும் சரிபார்த்துக் கொள்ளுமாறும், பதிவேற்றம் செய்த பின்னர் திருத்தங்கள் செய்ய கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் பள்ளிக்கல்வித் துறை  அறிவுறுத்தியுள்ளது.

Tuesday, November 15, 2016

ATM களில் விரைவில் ரூ.20, 50 நோட்டுக்கள்: எஸ்பிஐ தலைவர்

பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், விரைவில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் விநியோகம் துவங்கும் என ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும். மத்திய அரசு அறிவிப்பு

வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

டில்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

வங்கிக்கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கூட்ட நெரிசல் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது. வங்கியில் நெரிசலை குறைக்க, தேர்தலின் போது மை வைக்கப்படுவது போல், பணம் வாங்க வருபவர்களுக்கு விரலில் மை வைக்கப்படும். பணம் வழங்கும் கவுன்டரில் பணம் வாங்குவோரின் விரலில் மை வைக்கப்படும். பெருநகரங்களில் இன்று நடைமுறைக்கு வந்தது.