Monday, January 16, 2017

16.01.2017 முதல் ATMகளில் ஒரு நாளைக்கு ரூ.10,000 எடுக்கலாம்: வாரத்திற்கு 24000/- என்பதில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பண மதிப்பு நீக்க அறிவிப்பை தொடர்ந்து , ஏடிஎம்களில் தினந்தோறும்  2000/- பிறகு தினந்தோறும்  ரூபாய்  4500/- எடுக்கும் வகையில் இருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இன்று(16.01.2016) முதல் ATM களில்,  10,000 ரூபாய் எடுக்கலாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. 

ஆனால் வாராந்திர அளவில் எந்த மாற்றமும் இல்லை.வாரத்தில் 24000/- வரை மட்டுமே எடுக்க முடியும்.

மேலும் , நடப்பு வங்கிக்கணக்கில்(Current Account) இருந்து 50,000 ரூபாய் என்ற உச்சவரம்பு தளர்த்தப்பட்டு, தற்போது , ருபாய் 1,00,000/- வரை எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: