Friday, January 27, 2017

ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30க்குள் நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்


 
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET- Teachers Eligibility Test)  தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கில், கடந்தாண்டு தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. 

எனவே,  தமிழகத்தில் வரும் 30.04.2017 க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனவும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு  ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில்  வெற்றி பெற்றவர்களை கொண்டு சுமார் 8000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 


No comments: