Sunday, July 19, 2015

CCSE - Group II Hall Ticket Download - Date of Exam 26.07.2015

  Combined Civil Services Examination (CCSE)
Group II   Services

Date of Examination:        26.07.2015  FN  10.00 AM   TO 01.00 PM , SUNDAY


Click Here to Download the Hall Ticket



or



Saturday, July 18, 2015

Zen Parables

 Zen  Parables
 

 
டைடோ கோகுஷி புனிதமான ஜென் துறவி. ஒருநாள், ஆற்றங்கரையில் இருந்த ஆசிரமத்தின் குளிர்ந்த ஆலமர நிழலில், அவர் தியானத்தில் அமர்ந்து இருந்தார்.

அவரை சோதனை செய்து விளையாட நினைத்த சிறுவன் ஒருவன் குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டு ஜென் குருவிடம் வந்தான்.

துறவியின்  முன்னால் நமட்டு சிரிப்புடன் நின்றான். 

துறவி அவனை நிதானமாக பார்த்தார். 

அவன் துறவியை பார்த்து,

"குருவே என்னுடைய கேள்விக்கு சரியான பதிலை உங்களால் சொல்ல முடியுமா  என பார்க்க விரும்புகிறேன்" என்றான்.

துறவி புன்னகைத்தார்.

அவன் துறவியைப் பார்த்து  தனது கேள்வியை கேட்டான் 

"குருவே, என்னுடைய கைகளுக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். 

"குரு "இறந்து விட்டது" என்று சொன்னால்,  தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை பறக்கவிடுவது; அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று சொன்னால் தன்னுடைய கைகளுக்குள் மறைந்து இருக்கும்  குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது" - இது தான் அவன் திட்டம்.

ஜென் துறவி சொன்னார்,

     " இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" 


உணர்ந்தது
                 
     நமது கேள்விக்கான விளக்கங்களும், நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் நம்மிடமே இருக்கின்றன"
  

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

நண்பர்களுக்கு இனிய 
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

Friday, July 17, 2015

+2 Special Supplimentary Exam July 2015 - Result

இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஜூலை 2015ல் நடைபெற்ற  12ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் (+2 Special Supplimentary Exam July 2015 - Result) http://www.dge.tn.nic.in/ இணையத்தளத்தில் வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மாணவர்கள் அவர்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வு முடிவுகளின் போதே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தியாவில் 46 லட்சம் ஜாதிகள் (46 lakh categories of caste's) - Finance Minister Arun Jaitley

  “The caste census conducted by the Registrar General of India has come out with 46 lakh categories of caste, sub-castes, different surnames in the caste and clan names, which have been sent to the states eight to nine months back for clubbing them to consolidate the caste count, said Arun Jaitley


2011 ல் எடுக்கப்பட்ட Socio-Economic-Caste (SEC) Census முடிவுகள் மத்திய அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அப்போது அதில் ஜாதிவாரி தகவல்கள் இடம்பெறவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து தற்போது  ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட  மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக, ஏற்கனவே எடுக்கப்பட்ட தகவல்களை பகுத்தாய்ந்து பட்டியலிடும் பணியை  NITI Aayog துணைத்தலைவர் Arvind Panagariya தலைமையிலான குழுவிடம் மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்த குழு, ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள கிளைகள், பிரிவுகள், குழுக்கள், ஜாதிகளின் பட்டப்பெயர், துணைப் பெயர் போன்றவற்றை ஒருங்கிணைத்து முறையான பட்டியலை தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கும். அதன் பின், ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிடுவது என முடிவாகி உள்ளது.

அப்படின்னா



சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர். 
 
 ன்னு நான் சொன்னது எல்லாம் ..........???
( From Mahakavi Subramanya Bharathi Mindvoice )

என்னம்மா, இப்படி பண்றீங்களேமா? - "Infosys" சேர்மன் நாராயணமூர்த்தி கவலை

கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த கண்டுபிடிப்பும் செய்யப்படவில்லை

பெங்களூர்  இந்திய அறிவியல் கழகத்தின்(IISc) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய "Infosys" சேர்மன் திரு N.R. நாராயணமூர்த்தி,

"கடந்த 50 ஆண்டுகளில் உலக அளவில் சிறப்பான கண்டுபிடிப்புக்கள் குறித்த Top 10 பட்டியல், உலகப் புகழ்பெற்ற, கண்டுபிடிப்பாளர்களின் உற்பத்தி தளமாக விளங்கும் Massachusetts Institute of Technology (MIT) நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது. 

இதில் கார்கள், எலக்ட்ரிக் பல்புகள், ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர், இன்டர்நெட், வை-பை, எம்.ஆர்.ஐ., லேசர், ரோபாட் உள்ளிட்ட பல்வேறு மிகப் பெரிய கண்டுபிடிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இவைகள் தந்ததற்காக மேற்கத்திய பல்கலைக்கழங்களின் ஆய்வுக்கு நன்றி.

அதே சமயம், இதில் இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் பங்கு என்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக IISc மற்றும் IIT களில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகிற்கும், சமூகத்திற்கு பயனளிக்கும் எந்த கண்டுபிடிப்பும் நிகழ்த்தப்படவில்லை என்பதே உண்மை.  

அறிவாற்றல், உற்சாகம், திறமை, ஆகியவற்றில் மேற்கத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்திய மாணவர்களுக்கு இடையே வேறுபாடு ஏதும்  இல்லை. ஆனால் நமது இளைஞர்கள் இணையதளங்களில் மூழ்கி உள்ளனர். போதிய அளவு உழைக்காமல் மாய உலகில் உள்ளனர். இவற்றை சரி செய்ய கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும்"  என   அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Wednesday, July 15, 2015

காமராஜ் ( KAMARAJAR BIRTHDAY ANNIVERSARY)

காமராஜர்
kamarajar quotes
(15.07.1903 - 02.10.1975) 

ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி 
ஒரு சர்ச் திறந்தால் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சி 
ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி 
ஒரு நூலகம் திறந்தால் கற்றவர்களுக்கு மகிழ்ச்சி 
ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் 
நம்மைப் படைத்த கடவுளுக்கே மகிழ்ச்சி 

                                                              - K.காமராஜ்



Tuesday, July 14, 2015

Our Sincere Condolences

M.S.Viswanathan
(24.06.1928 - 14.07.2015)
 
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் 
வாரி  வாரி  வழங்கும் போது வள்ளல் ஆகலாம் 
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம் 
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம் 
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் 
தெய்வம் ஆகலாம் ..

  

ஒரு சித்திரம் - ஒரு சிந்தனை

The Hindu Cartoons

our sincere thanks to : http://tamil.thehindu.com/

 


Sunday, July 12, 2015

Amazing Artworks By John Poppleton

 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் Sacramento வை சேர்ந்த John Poppleton உலகின் மிகச் சிறந்த Body Art  portrait புகைப்பட கலைஞர் ஆவார்.

2010 ல் முதல் முதலாக black light அடிப்படையிலான புகைப்படங்களை உருவாக்கி வெற்றி பெற்றார். 20 ஆண்டுகள் திருமண போட்டோகிராபராக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் ஜான் பாப்பில்டன் தனது புதிய முயற்சியால் உலகப் புகழ்பெற்று வருகிறார். அவரது படங்களை  உங்கள் ரசனைக்கு முன்வைக்கிறோம். 

For more details log on to http://www.poppletonportraits.com  




for more details logon to http://www.poppletonportraits.com 

2015-2016ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் கேள்விக்குறி ?



2014-2015ம் கல்வியாண்டில்  TET தேர்ச்சி பெற்ற  3500 SG , 7000 BT, PG என 10500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

31.05.2015ல்  தமிழகம் முழுவதும் 4000க்கும் அதிகமான ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.



இக்காலிப்பணியிடங்களுக்கு 2015-2016ம் கல்வியாண்டுக்கான TET தேர்வு நடத்தி பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு  D.T.Ed, B.Ed படித்து வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகளிடையே இருந்து வருகிறது.



2014-2015ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு பணிநிரவல் (Deployment) செய்யப்பட உள்ளனர். 

2014-2015ம் கல்வியாண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட, தற்போதுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் 2015-2016ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது

Saturday, July 11, 2015

B.Ed / B.Ed(Special) Result - TNTEU Announced

 
B.Ed. Degree Examination Results - May/June 2015
 


B.Ed. Spl. Degree Examination Results - May/June 2015




For Revaluation/ Retotalling Application

B.Ed தேர்வு முடிவுகள் இன்று(11.07.2015) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்படும் (B.Ed Degree Examination Results will be published on 11-07-2015 at 4.00 pm)



 B.Ed தேர்வு முடிவுகள் இன்று மாலை 4.00 மணியளவில்  வெளியிடப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக (TNTEU) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் திரு மணிவண்ணன்  அவர்கள்  தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளை  http://www.tnteu.in/  இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
 
Marksheet மற்றும் Provisional Certificate  ஜூலை 30க்கு பின்னர்  கல்லுாரிகளில்  வழங்கப்படும்.

Re totaling, Revaluation, Copy of Answer Script ஆகியவற்றைப்   பெற தனித்தனி விண்ணப்பங்களை ஜூலை 24க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவங்களை  http://www.tnteu.in/  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


Friday, July 10, 2015

மாயமான Dornier விமானம் கண்டுபிடிப்பு (Missing Dornier Aircraft Located Off Tamil Nadu Coastline)



கடலூர், பிச்சாவரம் அருகே 2015 ஜூன் 8ம் தேதி மாயமான Dornier விமானத்தின் உதிரிபாகங்கள் 33 நாட்களுக்கு பின்னர் பிச்சாவரத்திலிருந்து 16.5 மைல் கடல் தொலைவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


                   Pic: Thanks to HELIX
விமானத்தின் கறுப்பு பெட்டி கடலுக்கு அடியில் 950 மீட்டர் ஆழத்தில் இருந்துள்ளது.  விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட ஒலிம்பிக் கேன்யன், ஐ.என்.எஸ்., சிந்துவாஜ் கப்பல்கள் விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் மூலம், விபத்திற்கான காரணம் தெரிய வரும்.
 

Baahubali Trailer || Prabhas, Rana Daggubati, Anushka, Tamannaah || Bahu...

மருத்துவ படிப்புக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு

மருத்துவப் படிப்புகளுக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வு  வரும் 22ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் MBBS, BDS  படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது. மொத்தமுள்ள  2939 இடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்தனர். ஆனாலும் 137 பேர் கல்லுாரிகளில் சேரவில்லை. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வை  July 22 முதல்  25ம் தேதி வரை நடத்த  மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.


மாணவர்கள் சேராததால் அரசு கல்லுாரிகளில் MBBS படிப்புக்கு ஒன்பது இடங்கள், 20 BDS இடங்கள், சுய நிதி கல்லுாரிகளில் 108 MBBS  இடங்கள் என, 137 இடங்கள் காலியாக உள்ளன.  

இந்த  137 இடங்களுக்கும், சுயநிதி கல்லுாரிகளின்  1020 BDS இடங்களுக்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். இதுபற்றிய விவரங்கள், ஓரிரு நாளில்  www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Thursday, July 9, 2015

ஜூலை 15 முதல் +2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ( +2 Original Marksheet Will be Issued on July 15)


மார்ச் 2015ல் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 15 முதல் வழங்கப்படும்.
 
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 15.07.2015 அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தமது மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Thursday, July 2, 2015

47% நேரத்தை Smart Phoneகளில் கழிக்கும் இந்தியர்கள்: Ericsson நிறுவனம் ஆய்வறிக்கை




இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் நேரத்தில் 47 சதவிகிதத்தை WhatsApp, Facebook, Skype, Online Shopping, Email  போன்ற தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்வதில் செலவழிப்பதாக  தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் சுவீடன் நிறுவனமான Ericsson வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொபைல் போன்களில் உள்ள நவீன தகவல் தொடர்பு வசதிகள் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் மூலம் மொபைல் இணையதள சேவைக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகவும் எரிக்சன் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.

Wednesday, July 1, 2015

ஹெல்மெட் சார்பான காவலர்களின் அணுகுமுறைகள் - திரு S. George, I.P.S., Commr. of Police, Chennai


  1. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர், ஹெல்மெட் அணிந்து இருந்தால், தேவையில்லாமல் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.

  2. சாலையில் தடுப்பு அமைத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், சோதனை நடத்தக்கூடாது.

  3. ஹெல்மெட் அணியாமல் பிடிபடுவோருக்கு, எந்த வகையிலும் சலுகை காட்டக் கூடாது. ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று உள்ளிட்ட அனைத்து ஒரிஜினல்ஆவணங்களையும், பறிமுதல் செய்ய வேண்டும்.

  4. வாகனம் மற்றும் ஆவணங்கள் பறிமுதலுக்கான, ஒப்புகை சீட்டைகட்டாயம் வழங்க வேண்டும்.

  5. ஆவணங்களை, நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும்; லஞ்சம் வாங்கி திரும்ப ஒப்படைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  6. பணம் கேட்கும் போலீஸ் பற்றிஅவசர போலீஸ் எண், '100'க்கு தகவல் தெரிவிக்கலாம்.

  7. ஹெல்மெட்டை, வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்து பயணித்தல், தொங்க விடுதல், பின் பக்கத்தில் பூட்டு போட்டு இருத்தல் கூடாது. அவ்வாறு செய்தால், ஹெல்மெட் அணியாதவர் என்றே கருதப்படும். அவர்களிடமும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்.

  8.  வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து, மாற்றுப்பாதையில்தப்பித்து விடாத வகையில், மறைவிடங்களில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

  9.  ஹெல்மெட் கண்காணிப்பை காரணம் காட்டி, சாலை விதிகளை மீறி செல்வோரையும் கோட்டை விட்டுவிடக் கூடாது.

  10. பெண்களும், ஹெல்மெட் அணிவது கட்டாயம்; அவர்களுக்கு எவ்வித சலுகையும் காட்டக் கூடாது.இவ்வாறு, உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேவையற்ற உயிரிழப்பை தவிர்க்க, ஜூலை 1ம் தேதி முதல் (இன்று) இரு சக்கர வாகன ஓட்டி கள், பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அமல்படுத்த வேண்டியது போக்குவரத்து போலீசாரின் கடமை. அதை, 100 சதவீதம் அமல்படுத்துவோம் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரு ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


வழக்கு தள்ளுபடி

முன்னதாக , சென்னை உயர் நீதிமன்றத்தில், திருகோபாலகிருஷ்ணன் மற்றும்  திருமதி நிம்மு வசந்த் ஆகியோர் "பெண்கள், குழந்தைகள், ஹெல்மெட் அணிவதில் பிரச்னை உள்ளது; எனவே, அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" ஆகிய பிரச்சினைகளை  உள்ளடக்கி ஹெல்மெட் கட்டாயமாக்கப் படுவதற்கு தடை கோரி  தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
 




பெற்றோர் கோரிக்கை 

பள்ளிக்கு தந்தை, தாயுடன், இருசக்கர வாகனத்தில் செல்லும், 'குட்டீஸ்'களுக்கும், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தர வில் இருந்து விலக்கு வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரும்பாலான பெற்றோர், தங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை, டூவீலரில் தான் பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். 

பெற்றோர் மனநிலை :

காலையில் பள்ளிக்கு போகும் அவசரத்தில், குழந்தைகள், 'ஷூ, சாக்ஸ்' போடவோ, சாப்பிடவோ கூட நேரமிருப்பதில்லை.
பிள்ளைகளுடன் பள்ளி புத்தகப்பை, 'லஞ்ச் பேக்' வைக்கவே, டூ வீலரில் இடம் இல்லை. ஒரு தந்தை தனது இரண்டு பிள்ளைகளுடன், மூன்று ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் செய்யவே  முடியாது.
 Thanks to:  Dinamalar

இதற்காக அனைவராலும் மாற்று ஏற்பாடுகளை செய்யவும் முடியாது. எனவே இது பல குடும்பங்களில் புதிய பொருளாதார சிக்கல்களை உண்டுபண்ணும்.

மேலும் 1000பேர் படிக்கக் கூடிய ஒரு பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பெற்றோர்களுடன் இருசக்கர வாகனத்தில் தான் பள்ளிக்கு வருகிறார்கள். இந்த 300 மாணவர்களின்  ஹெல்மெட்களையும் பள்ளிகளில் வைக்க இடம் உண்டா என்பது கேள்விக்குறி.

மாணவர்களை பள்ளிகளில்  இறக்கிவிட்டு திரும்பும் பெற்றோர்கள் 2 அல்லது 3 ஹெல்மெட்களை திரும்ப எடுத்துச் செல்லமுடியுமா எனப்படும் சிக்கல்.
மாணவியர் ஹெல்மெட் அணிந்தால் தலை கலைந்து விடும். பல தனியார் பள்ளிகள், தலையை சரியாக பின்னவில்லை எனக்கூறி வெளியே அனுப்பி விடுவர்.
மேலும் சந்தையிலும் பள்ளிக்குழந்தைகளுக்கு தனியாக ஹெல்மெட் விற்கவில்லை. 
எனவே பெற்றோர்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது போலீசார் கெடுபிடி செய்யக்கூடாது என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும். இந்த உத்தரவு மிகவும் அவசியமானது என்றாலும், இதுவே பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தும் ஒன்றாக மாறக்கூடாது என்பது நமது விருப்பம் ஆகும்.

மேலும், இனி தமிழ்நாட்டில் எடுக்கும் அனைத்து திரைப்படங்களிலும் ஹீரோக்கள் ஹெல்மெட் அணிந்து தான் வண்டியை ஓட்டவேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். ஏனெனில் திரைப்படங்களே இன்றைய இளைஞர்களுக்கு "வழிகாட்டியாகவும்", Inspiration ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SMS உருவாக்கிய Matti Makkonen மரணம்


செல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்பும் முறையைக் கண்டறிந்த Matti Makkonen உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
SMS என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகள் செல்போன்களில் மிக சர்வ சாதாரணமாக அனுப்பப்பட்டு வந்தன. வாட்ஸ் அப் போன்ற மெசன்ஜெர்கள் வரும்வரையில் இளசுகளிடம் கொடி கட்டி பறந்தது எஸ்.எம்.எஸ்தான். அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறையை முதன்முறையாக கண்டுபிடித்தவர்தான் Matti Makkonen.


63 வயதான இவர் பின்லாந்தை சேர்ந்தவர். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட இவர் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இருந்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை பின்லாந்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.


20 ம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக எஸ்.எம்.எஸ் திகழ்கிறது. எனவே, இவர் "எஸ்.எம்.எஸ்" முறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இது குறித்து 2012ம் ஆண்டில் பி.பி.சிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த கண்டுபிடிப்பு தனது தனிப்பட்ட சாதனை அல்ல. ஒரு கூட்டு முயற்சி என தெரிவித்துள்ளார்.


எஸ்.எம்.எஸ் திட்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு நோக்கியா செல்போன் நிறுவனம் அவருக்கு உதவி செய்தது. எஸ்.எம்.எஸ் அனுப்ப கூடிய வகையில் நோக்கியா 2010 ரக செல்போனை உருவாக்கியது. அதில் இருந்து 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.