Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Wednesday, June 24, 2015
Tuesday, June 23, 2015
தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் DEO பதவி உயர்வு
பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள 60 மாவட்ட கல்வி
அதிகாரி பணியிடங்களுக்கு, தலைமை ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து
பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'உயர்நிலை மற்றும்
மேல்நிலை பள்ளிகளின் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களில், மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியலை மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்ப
வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
Monday, June 22, 2015
2005க்கு முந்தைய அனைத்து ரூபாய் நோட்டுகளுக்கும் ஜூன் 30 வரை மட்டுமே ஆயுட்காலம்
கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜூன் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த அவகாசம் முடிவடைய இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில்
'பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் தங்கள்
கணக்கில் அவற்றை Deposit செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து புதிய
நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கடந்த
ஆண்டு ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டது.
அதில், '2005க்கு முன் அச்சிடப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் உட்பட அனைத்து
ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகாது. எனவே இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக
மாற்றிக் கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலில் இதற்கு டிசம்பர் 2014
வரை
அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் 2015 ஜூன் 30ம் தேதி வரை அவகாசம்
நீட்டிக்கப்பட்டது.
ஒவ்வொரு
ரூபாய் நோட்டின் பின்புறத்தின் கீழ் பகுதியில், அந்த நோட்டு அச்சிடப்பட்ட
ஆண்டு சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்படி குறிக்கப்படவில்லை
என்றால் அது 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு என அறியலாம்.
Sunday, June 21, 2015
International Day of Yoga 21 JUNE 2015
Rid your body of its impurities,
let your speech be true and sweet,
feel
friendship for the world,
and with humility seek wealth and knowledge
“Be a lamp to yourself.
Be your own confidence.
Hold on to the truth within yourself as to the only truth.”
~ Buddha
Be your own confidence.
Hold on to the truth within yourself as to the only truth.”
~ Buddha
Yoga is not about the shape of your body,
but the shape of your
life.
Yoga is not to be performed;
yoga is to be lived.
Yoga doesn’t
care about what you have been;
yoga cares about the person you are
becoming.
A person experiences life as
something
separated from the rest -
a kind of optical delusion of consciousness.
Our task must be to free ourselves from this self-imposed prison,
and
through compassion,
to find the reality of Oneness
Click Here to download the Common Yoga Protocol by AYUSH, Govt of India
WhatsApp மூலம் அவதூறு பரப்புபவர்களை கண்காணிக்கும் பணியில் தமிழக சைபர் கிரைம்
'Facebook' நிறுவனத்துடன் MOU ?
அவதுாறு மற்றும் பீதியைப் பரப்பும், 'WhatsApp' பதிவுகளை செய்வோர் மீது
நடவடிக்கை எடுக்க தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
இணையதளங்களை
விட 'WhatsApp' பதிவுகள் காட்டுத் தீ போல சில நிமிடங்களில் நாடு
முழுவதும் பரவுகின்றன. இதில் தீய
நோக்கத்தோடு செய்யப்படும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.
சில நாட்களுக்கு
முன் சில தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டு, 'இவை தீவிரவாதிகளின் எண்கள்.
இதைத் தொடர்பு கொண்டால், குண்டு வைப்பது உள்ளிட்ட வேலைகள் நடக்கும். எனவே,
இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம்' என, பொதுமக்களை எச்சரிப்பதாக,
BSNL பெயரில் 'WhatsApp' பதிவு வெளியானது. ஆனால்
இந்த பதிவுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என BSNL நிறுவனம்
தெரிவித்தது.
உள்நோக்கத்தோடு அவதுாறு
பரப்பும் வகையில் இப்பதிவு உள்ளது என புகார் எழுந்துள்ளது. எனவே 'WhatsApp' பதிவுகளை தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணிக்கத் துவங்கி
உள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'WhatsApp' பதிவுகள் ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து மற்றொரு எண்ணிற்கு செல்லும்
போது, தொலைபேசி எண்ணிற்கு உரியவர்களை, பொறுப்பாக்க முடியும். இதுபோன்ற
புகார்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.
இரு தொலைபேசி எண்களுக்கு
இடையே நடக்கும் வாட்ஸ் ஆப் உரையாடல், தொலைபேசி உரையாடல் போலத் தான்
கருதப்படும். ஆனால், 'WhatsApp Groups' மூலம் பரப்பப்படும் பதிவுகள், எங்கிருந்து
துவங்கியது என்பதை கண்டுபிடிப்பது சற்று கடினமாக உள்ளது.
குரூப் பதிவின்
மூலத்தை, 'WhatsApp' சர்வரில் இருந்தே பெற முடியும். 'WhatsApp' சேவை,
'facebook' நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இதன் அலுவலகம் அமெரிக்காவில்
உள்ளது. எனவே WhatsApp பதிவின் மூலத்தைப் பெற பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளோம்.
தற்போதைக்கு குரூப் பதிவு குறித்து, வரும் புகார்களை பதிவு செய்து,
விசாரணை மட்டும் நடத்தி வருகிறோம்' என அவர் தெரிவித்துள்ளார்.
அவதுாறு பரப்பும் WhatsApp பதிவுகளை செய்வோருக்கு சிறை தண்டனை மற்றும்
அபராதம் விதிக்க அரபு நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
சில நாடுகள் WhatsApp பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Saturday, June 20, 2015
Friday, June 19, 2015
‘அனைத்து பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த சட்டம் வகுக்கப்படும் ’ - தமிழக அரசு
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு அவர்கள் 2011ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் .
'மெட்ரிக்குலேஷன்
பள்ளிகளுக்கான விதிமுறைகள் செல்லாது என அறிவிக்க வேண்டும். சென்னை
மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களால் 1976 ஜூன் 1ம் தேதி அன்று
அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தவிர மற்ற மெட்ரிக்குலேஷன்
பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என்பது அந்த மனுவின் சாரம்.
இதற்கு கல்வி துறை சார்பில்
பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி
புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய ’முதல் பெஞ்ச்’ முன நேற்று விசாரணைக்கு
வந்தது.
பள்ளி கல்வி துறை
சார்பில் இணைச் செயலர் அழகேசன் தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவில்
'கடந்த 1973ல் கொண்டு வரப்பட்ட 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை
சட்டம்' சட்டப்பூர்வமானது. அனைத்து தனியார் மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ
இந்தியன், நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான விதிமுறைகள்
சட்டப்பூர்வமற்றவை. இவற்றுக்கென ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தச் சட்டம், சமச்சீர் கல்வி சட்டம்
மற்றும் இலவச, கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் இருக்கும்' என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Thursday, June 18, 2015
MBBS, BDS நாளை கலந்தாய்வு- MBBS,BDS Counseling Schedule and Cutoff Details
MBBS, BDS படிப்புகளுக்கு நாளை முதற்கட்ட கலந்தாய்வு
துவங்குகிறது; 4,800 பேர்
அழைக்கப்பட்டு உள்ளனர்.
கலந்தாய்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் அரங்கிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு
உள்ளது.முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரியில் 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது;
ஞாயிற்றுக் கிழமையும் கலந்தாய்வு உண்டு. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 2257; எட்டு சுயநிதி கல்லூரிகளில் 551 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. 'மறுகூட்டல் மறுமதிப்பீட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதற்கான சான்றுகளை
கட்டாயம் எடுத்து வர வேண்டும்' என
மருத்துவ மாணவர்
சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் தெரிவித்து உள்ளார்.
கலந்தாய்வு தேதி, 'கட் - ஆப்' விவரம்
19ம் தேதி, விளையாட்டு
வீரர்கள்,
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான
கலந்தாய்வு நடக்கிறது.
தேதி
|
பிரிவு
|
'கட் - ஆப்'
|
20.06.2015
|
General
|
200 - 198.25
|
21.06.2015
|
General
|
198.25 - 197.50
|
22.06.2015
|
General
|
197.50 - 197.00
|
23.06.2015
|
General
|
197.00 - 196.25
|
24.06.2015
|
BC
|
196.50 - 196.25
|
BCM
|
196.50 - 195.00
|
|
MBC
|
196.50 - 195.50
|
|
SC
|
196.50 - 192.00
|
|
25.06.2015
|
SC
|
192.00 - 190.50
|
SCA
|
196.50 - 186.75
|
|
ST
|
194.25 - 180.25
|
ஜூலை 1 முதல் 2 ஹெல்மெட் வாங்கி வச்சுக்குங்க.
|
---|
ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வோரும் அதில் பயணிப்போரும் கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிய வேண்டும். தவறினால் மோட்டார்
வாகன சட்டம் - 1988, பிரிவு 206ல் தெரிவிக்கப் பட்டுள்ள விதிமுறைகளின்படி,
சம்மந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம்
ஆகியவை பறிமுதல் செய்யப்படும்.இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய
'ஹெல்மெட்' மற்றும் அதை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்தால்
மட்டுமே, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும்'
என, தமிழக அரசு உள்துறை முதன்மை செயலர் அபூர்வா வர்மா செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
பின் இருக்கையில் பெண்கள் அமர்ந்திருந்தால், அவர்களும் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.
'தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஜூலை 1 முதல் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும். இதை தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., நிறைவேற்ற வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தர விட்டதை அடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டம்
மோட்டார் வாகன சட்டம் - 129ன் படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும், 'ஹெல்மெட்' அணிவது அவசியம்.
மோட்டார் வாகன சட்டப்படி, 'ஹெல்மெட்' இன்றி இரு சக்கர வாகன ஓட்டுபவருக்கு முதலில் 100 ரூபாய்; தொடர்ந்து விதியை மீறும் பட்சத்தில் 300 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு, 'ஹெல்மெட்' கட்டாயம். இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்' என அறிவித்துள்ளது.
'ஹெல்மெட்' அணிவது கட்டாயம் என்றாலும், அதை அணியாவிட்டால், அபராதம் வசூலிக்க தான் சட்டத்தில் இடம் உள்ளது என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
வழக்கறிஞர்களின் பார்வை
அச்சுறுத்தும்
நடவடிக்கையாக, அரசின் அறிவிப்பு உள்ளது. உயிர் பாதுகாப்புக்கு தலை கவசம்
அணிய வேண்டும் என சட்டமும், உயர் நீதிமன்றமும் கூறியுள்ளது.ஆனால்,
'ஹெல்மெட்' அணியாவிட்டால், ஆவணங்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என
சட்டத்தில் கூறப்படவில்லை. சட்டப்படி, அபராதம் வசூலிக்கலாம் என வழக்கறிஞர்
வி.எஸ்.சுரேஷ் கூறியுள்ளார்.
Wednesday, June 17, 2015
10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஜூன் 18 முதல் ’ஹால் டிக்கெட்’
வரும் ஜூன்/ஜூலை 2015ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்
தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களுக்கும் (தட்கல் உட்பட) ஜூன்
18ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்பட உள்ளது.
தனித்தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் மார்ச் 2015 பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tuesday, June 16, 2015
நொடியில் கணிதம் - Maths Made Easy
பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் கணிதம் கற்பிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள் ஏ.சி.பிரபு, சாமி சுரேஷ்குமார் ஆகிய இருவரும்.
பிரபு
சென்னை லயோலா கல்லூரியில் கணிதவியலில் M.Sc.,M.Phil பட்டம்
பெற்றவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் Ph.D செய்துக்
கொண்டிருக்கிறார். சுரேஷ்குமார் B.Sc கணிதத்தில் கோல்டு மெடல்
வாங்கியவர்.
இருவருமே
நூற்றுக் கணக்கான அரசுப் பள்ளிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மாணவ-மாணவிகளுக்கு எளிய முறையில் கணிதத்தைச் சொல்லிக்
கொடுத்திருக்கிறார்கள்.
என்ன கற்பிக்கிறார்கள்?
“பெருக்கல் வாய்ப்பாட்டை ரொம்ப எளிதாக மாணவர்கள் மனதில் பதிய வைக்கிறோம்!
2 முதல் 19 ஆம் வரையிலான ஒவ்வொரு பெருக்கல் வாய்ப்பாட்டுக் கணக்குக்கும் 2
நொடியில் போடக்கூடிய மனக்கணக்கு சூத்திரங்கள் இருக்கின்றன. அதைத்தான்
சொல்லிக்கொடுக்கிறோம்!” என்கிறார்கள் இந்த இளைஞர்கள்.
இதற்காக Maths Made Easy என்று ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார்கள்.
புதுக்கோட்டையில் எளிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் பிரபு
(Cell: 9629483526). சென்னையில் வசித்தபோது காசிமேடு, வண்ணாரப் பேட்டையில் ஏழை
எளிய மாணவர்களுக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்துள்ளார்.
பிறகு, அரசுப் பள்ளிகளைத் தேடிச்சென்று கணக்கு கற்றுக்கொடுக்க
தொடங்கியிருக்கிறார். கோவையில் பி.எச்டி படிக்குபோதும் மாணவர்களுக்கு
இலவசக் கல்வி கற்பிப்பதை விடவில்லை. அப்படி ஒரு டியூசன் சென்டரில்
அறிமுகமாகி நண்பரானவர்தான் சுரேஷ்குமார். பிறகு, இருவரும் இணைந்து
மாணவர்களைத் தேடிச் சென்று கணிதம் கற்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
நமது கல்வி முறையை இன்னமும் எளிதாக்காமல் கல்வித் தரத்தில் உலக அளவில்
முதல் 10 இடங்களில் நம்மால் இடம்பிடிக்க முடியாது. அதற்கான சிறு
முயற்சியையே நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம் என்கின்றனர் இந்த
இளைஞர்கள்.
சரி இதை ஏன் நாம இப்போ இங்க போஸ்ட் பண்ணியிருக்கோம்? 'கணித ஆசிரியர்கள்' இவங்களை யூஸ் பண்ணி உங்க மாணவர்களை ஊக்கப் படுத்துவீங்கன்னு தான்.
Sunday, June 14, 2015
பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை! பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு(?)
'தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமலுக்கு வரும்' என்று Nakkeran, Dinamalar ஆகிய இணையத்தளங்களிலும், WhatsAppலும் நேற்று தகவல் பரவியது.
இத்தகவல் 'வதந்தி' என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளதாக தற்போது செய்தி அறியப்பட்டுள்ளது. இது நிஜமா? இல்லை வதந்தியா? என ஓரிரு நாட்களில் தெரியவரும் என்பதால் நண்பர்கள் யாரும் இப்போதைக்கு சந்தோசப் படவோ அல்லது துக்கப்படவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
+2 SPECIAL SUPPLIMENTARY EXAM , JUNE 2015 - HALL TICKET FROM 15.06.2015
பிளஸ் 2 -ஜூன் சிறப்புத் தேர்வுக்கு 15.06.2015 முதல் ஹால்டிக்கெட்
ஜூன் 22 முதல் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் நாளை
(15.06.2015)
முதல் www.tndge.in இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம்
செய்துக் கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
www.tndge.in இணையப் பக்கத்தில் Higher Secondary Exam June/July 2015 - Private Candidate -
Hall Ticket Print out என்று
தோன்றுவதை கிளிக் செய்து மார்ச் தேர்வு பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட் பதிவிறக்கம்
செய்துக் கொள்ளலாம்
Saturday, June 13, 2015
ஜூன் 24 முதல் பள்ளிகள் துவங்கும் நேரம்: காலை 9 மணி - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24-ந் தேதி முதல் காலை 9
மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
முப்பருவக் கல்வி
முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும்
தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும்,
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக
குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும்
என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி
அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
ஒவ்வொரு
வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பன்முக திறனை
வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடு தல், நகைச்சுவை
கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற
நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும்
சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை
மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை
நிகழ்வாகவும் அமைய வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Friday, June 12, 2015
மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 19
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும், ’ரேண்டம்’ எண் தரப்பட்டுள்ளது. www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவு எண் , பிறந்த தேதியை பதிவு செய்தால், ’ரேண்டம்’ எண் விவரம் அறியலாம்.
இந்த ஆண்டில் 20வது அரசு மருத்துவக் கல்லூரியாக, 100 எம்.பி.பி.எஸ்.
இடங்களுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்துள்ளது. இதனால்,
எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,655 ஆக உயர்ந்துள்ளது.
இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக, மீதம்,
2,557.
அரசு கல்லூரியில், 85
பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லூரிகளில் 780
எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,432 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. ஜூன் 15ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.
மாணவர்
சேர்க்கைக்கான, முதற்கட்ட கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி
வளாகத்தில், 19ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடக்கும். முதற்கட்ட
கலந்தாய்வில், சுய நிதி கல்லூரிகளின், பி.டி.எஸ்., இடங்கள் இடம்பெறாது என மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் ஆகியோர் தெரிவித்தனர்.
ஜூன் 15ல் பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு
விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் பட்டியல்
ஜூன் 15ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தேவராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மார்ச் 2015 பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின்
எண்ணிக்கை 8,82,260.
இதில் விடைத்தாள் நகல்கோரி
விண்ணப்பித்தவர்கள் 1,00,566.
இவற்றில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் 2,835
மறுமதிப்பீடு கோரி
விண்ணப்பித்தவர்கள் 3,502
மதிப்பெண் மறுகூட்டலில்
மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 696.
மறுமதிப்பீட்டில் மாற்றம் உள்ள
தேர்வர்களின் எண்ணிக்கை 2,782.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் scan.tndge.in என்ற
இணையதளத்தில் 15.06.2015 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிடப்படும்.
இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண்
மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் ஜூன் 16ம் தேதி காலை 10.00 மணி முதல் http://www.dge.tn.nic.in என்ற
இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை
தெரிவித்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக
மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இவ்வாறு
தெரிவிக்கப்படுகிறது.
Broadcom Ethernet Driver for Win Xp 32 Bit Lenovo System
Click the link to Download the Driver file
- Right Click the My Computer Icon on the Desktop
- Click Properties.
- Click Hardware Tab
- Click Device Manager.
- Expand Other Devices
- Right Click the Ethernet Controller and click the Uninstall option.
- After Uninstalling the Yellow Question Mark icon,
Right Click Other Devices option
and select, Scan for Hardware Changes.
- Now Found New Hardware Wizard appears on the Screen.
- Select the second Radio Button and then Click Next.
- Click Browse, then Browse for Folder.
- Select the folder in C:\ drive that contain your Driver Files
- Click ok then click next
- Now the Ethernet Card is installed in your computer.
Subscribe to:
Posts (Atom)