முதல்வர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த பொதுத்துறை, பொது நிர்வாகம், உள்துறை, IAS, IPS, IFS மற்றும் காவல்துறை உள்ளிட்ட துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று வெளியிடப்பட்ட ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளார்.
மேலும், முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் சட்டப்பிரிவு 166 (3)-ன்படி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று திரும்பும்வரை இனி, அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார். இலாகா இல்லாமல், ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார்.' எனவும்
ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment