Showing posts with label C.Vidyasagar Rao. Show all posts
Showing posts with label C.Vidyasagar Rao. Show all posts

Tuesday, October 11, 2016

முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்: ஆளுநர் மாளிகை அறிவிப்பு (O.Panneerselvam gets Chief Minister’s portfolios)


முதல்வர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த பொதுத்துறை, பொது நிர்வாகம், உள்துறை, IAS, IPS, IFS மற்றும் காவல்துறை  உள்ளிட்ட துறைகள்  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று வெளியிடப்பட்ட ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளார். 

மேலும், முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் சட்டப்பிரிவு 166 (3)-ன்படி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்புகள்  வழங்கப்பட்டுள்ளதாகவும்  தமிழக ஆளுநர் விளக்கமளித்துள்ளார். 


முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று திரும்பும்வரை இனி, அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.  இலாகா இல்லாமல், ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார்.' எனவும்  ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.