தமிழகத்தில், பழைய ரேஷன்
கார்டுக்கு பதிலாக 'Smart Ration Card' வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு,
அதில், ரேஷன் கார்டுதாரின், ஆதார் விபரங்கள் பெறப்படுகின்றன.
நேற்று வரை, 4.76 கோடி
மட்டுமே, ஆதார் விபரங்களை பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களும் அந்த
விபரத்தை தராததால், ஸ்மார்ட் கார்டு வழங்குவது, தாமதமாகியுள்ளது.
எனவே, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தர,
நவ., 30 கடைசி நாள் என, காலக்கெடு நிர்ணயிக்க அரசிடம்
ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. அதற்குள், ஆதார் விபரம் வழங்கியவர்களுக்கு,
ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
No comments:
Post a Comment