Wednesday, October 5, 2016

காஸ் மானியம்: ஆதார் எண் சமர்ப்பிக்க நவம்பர் 30 ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு  சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. 

சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள், தங்கள்  வங்கி கணக்கில் நேரடியாக காஸ் மானியம் பெற, ஆதார் எண் சமர்ப்பிக்க செப்டம்பர் 30 வரை இறுதி கெடு கொடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மேலும் 2 மாதங்கள் நீட்டித்து நவம்பர் 30 ம் தேதிக்குள்,  ஆதார் எண்ணை, காஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

No comments: