Saturday, November 28, 2015

தமிழகத்தில் வருமான வரி செலுத்தும் 30 லட்சம் பேருக்கு Gas மானியம் ரத்து



இந்தியா முழுவதும் 16 கோடி Gas  சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். இதில் 5 கோடி பேர் ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால்  தற்போது, 36 லட்சம் பேர் மட்டும் தான்  காஸ் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர். 

வசதியானவர்கள் விட்டு கொடுக்கும் மானியத்தை பயன்படுத்தி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு  இலவசமாக(?) சிலிண்டர் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 30 லட்சம் பேர்  வருமான வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் 1 சதவீதம் பேர் கூட மானியத்தை விட்டு கொடுக்கவில்லை. 

எனவே  வருமான வரி செலுத்துவோருக்கு, மானிய சிலிண்டரை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.