Tuesday, November 24, 2015

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வு தள்ளிப்போகும்: பள்ளிக் கல்வித்துறை முடிவு

வட கிழக்கு பருவமழையால்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலுார்,விழுப்புரம்,கடலுார் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

அதனால், பள்ளிகளுக்கு  நவம்பர்  9 முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும்  அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

முந்தைய அறிவிப்புப்படி, 10ம் வகுப்புக்கு டிசம்பர்  9 மற்றும் 12ம் வகுப்புக்கு டிசம்பர்  7ல் அரையாண்டுத் தேர்வு துவங்கி, டிசம்பர்  22ல் முடிய வேண்டும். ஆனால், மழை விடுமுறையால், ஆறு மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டுத் தேர்வை, ஜனவரி முதல் வாரத்தில் நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.