வட கிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலுார்,விழுப்புரம்,கடலுார் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதனால், பள்ளிகளுக்கு நவம்பர் 9 முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
முந்தைய
அறிவிப்புப்படி, 10ம் வகுப்புக்கு டிசம்பர் 9 மற்றும் 12ம் வகுப்புக்கு டிசம்பர் 7ல் அரையாண்டுத் தேர்வு துவங்கி, டிசம்பர் 22ல் முடிய வேண்டும். ஆனால், மழை விடுமுறையால், ஆறு மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டுத் தேர்வை, ஜனவரி முதல் வாரத்தில் நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.