Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Tuesday, July 14, 2015
Sunday, July 12, 2015
Amazing Artworks By John Poppleton
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் Sacramento வை சேர்ந்த John Poppleton உலகின் மிகச் சிறந்த Body Art portrait புகைப்பட கலைஞர் ஆவார்.
2010 ல் முதல் முதலாக black light அடிப்படையிலான புகைப்படங்களை உருவாக்கி வெற்றி பெற்றார். 20 ஆண்டுகள் திருமண போட்டோகிராபராக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் ஜான் பாப்பில்டன் தனது புதிய முயற்சியால் உலகப் புகழ்பெற்று வருகிறார். அவரது படங்களை உங்கள் ரசனைக்கு முன்வைக்கிறோம்.
For more details log on to http://www.poppletonportraits.com
For more details log on to http://www.poppletonportraits.com
2015-2016ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் கேள்விக்குறி ?
2014-2015ம் கல்வியாண்டில்
TET
தேர்ச்சி பெற்ற 3500
SG , 7000 BT, PG என 10500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
31.05.2015ல் தமிழகம்
முழுவதும் 4000க்கும் அதிகமான ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
இக்காலிப்பணியிடங்களுக்கு 2015-2016ம் கல்வியாண்டுக்கான
TET தேர்வு நடத்தி பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு D.T.Ed,
B.Ed படித்து வேலைக்கு
காத்திருக்கும் பட்டதாரிகளிடையே இருந்து வருகிறது.
2014-2015ம் கல்வியாண்டின்
மாணவர் சேர்க்கை அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள உபரி ஆசிரியர்கள்
கணக்கெடுக்கப்பட்டு பணிநிரவல் (Deployment) செய்யப்பட உள்ளனர்.
2014-2015ம் கல்வியாண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை
விட, தற்போதுள்ள
உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் 2015-2016ம்
கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர்
நியமனத்துக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது
Saturday, July 11, 2015
B.Ed / B.Ed(Special) Result - TNTEU Announced
B.Ed. Spl. Degree Examination Results - May/June 2015
For Revaluation/ Retotalling Application
B.Ed தேர்வு முடிவுகள் இன்று(11.07.2015) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்படும் (B.Ed Degree Examination Results will be published on 11-07-2015 at 4.00 pm)
B.Ed தேர்வு முடிவுகள் இன்று மாலை 4.00 மணியளவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக (TNTEU) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் திரு மணிவண்ணன்
அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை http://www.tnteu.in/ இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Marksheet மற்றும் Provisional Certificate ஜூலை 30க்கு பின்னர் கல்லுாரிகளில்
வழங்கப்படும்.
Re totaling, Revaluation, Copy of Answer Script ஆகியவற்றைப் பெற தனித்தனி
விண்ணப்பங்களை ஜூலை 24க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவங்களை http://www.tnteu.in/ இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
Friday, July 10, 2015
மாயமான Dornier விமானம் கண்டுபிடிப்பு (Missing Dornier Aircraft Located Off Tamil Nadu Coastline)
கடலூர், பிச்சாவரம் அருகே 2015 ஜூன் 8ம் தேதி மாயமான Dornier விமானத்தின் உதிரிபாகங்கள் 33 நாட்களுக்கு
பின்னர் பிச்சாவரத்திலிருந்து 16.5 மைல் கடல் தொலைவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
Pic: Thanks to HELIX
விமானத்தின்
கறுப்பு பெட்டி
கடலுக்கு அடியில் 950 மீட்டர் ஆழத்தில் இருந்துள்ளது. விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட
ஒலிம்பிக் கேன்யன், ஐ.என்.எஸ்., சிந்துவாஜ்
கப்பல்கள் விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன்
மூலம், விபத்திற்கான காரணம் தெரிய வரும்.
மருத்துவ படிப்புக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு
மருத்துவப்
படிப்புகளுக்கான
இரண்டாம் கட்ட
கலந்தாய்வு வரும் 22ம்
தேதி துவங்குகிறது. தமிழகத்தில் MBBS, BDS படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது. மொத்தமுள்ள 2939 இடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்தனர். ஆனாலும்
137 பேர் கல்லுாரிகளில் சேரவில்லை. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை July 22 முதல் 25ம் தேதி வரை நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம்
திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள் சேராததால் அரசு கல்லுாரிகளில் MBBS படிப்புக்கு ஒன்பது இடங்கள், 20 BDS இடங்கள், சுய நிதி கல்லுாரிகளில்
108 MBBS இடங்கள் என,
137 இடங்கள் காலியாக
உள்ளன.
இந்த 137 இடங்களுக்கும், சுயநிதி கல்லுாரிகளின் 1020 BDS இடங்களுக்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். இதுபற்றிய விவரங்கள்,
ஓரிரு நாளில் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.
Thursday, July 9, 2015
ஜூலை 15 முதல் +2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ( +2 Original Marksheet Will be Issued on July 15)
மார்ச் 2015ல் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 15 முதல் வழங்கப்படும்.
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 15.07.2015 அன்று காலை 10.00
மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்
மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தமது மதிப்பெண்
சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Thursday, July 2, 2015
47% நேரத்தை Smart Phoneகளில் கழிக்கும் இந்தியர்கள்: Ericsson நிறுவனம் ஆய்வறிக்கை
இந்தியாவில் ஸ்மார்ட்போன்
பயன்படுத்துபவர்கள் தங்கள் நேரத்தில் 47 சதவிகிதத்தை WhatsApp, Facebook, Skype, Online Shopping, Email போன்ற தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்திக்
கொள்வதில் செலவழிப்பதாக தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் சுவீடன் நிறுவனமான Ericsson வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொபைல் போன்களில் உள்ள நவீன தகவல் தொடர்பு வசதிகள்
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் மூலம் மொபைல்
இணையதள சேவைக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகவும் எரிக்சன் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
Wednesday, July 1, 2015
ஹெல்மெட் சார்பான காவலர்களின் அணுகுமுறைகள் - திரு S. George, I.P.S., Commr. of Police, Chennai
- இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர், ஹெல்மெட் அணிந்து இருந்தால், தேவையில்லாமல் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.
- சாலையில் தடுப்பு அமைத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், சோதனை நடத்தக்கூடாது.
- ஹெல்மெட் அணியாமல் பிடிபடுவோருக்கு, எந்த வகையிலும் சலுகை காட்டக் கூடாது. ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று உள்ளிட்ட அனைத்து ஒரிஜினல்ஆவணங்களையும், பறிமுதல் செய்ய வேண்டும்.
- வாகனம் மற்றும் ஆவணங்கள் பறிமுதலுக்கான, ஒப்புகை சீட்டைகட்டாயம் வழங்க வேண்டும்.
- ஆவணங்களை, நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும்; லஞ்சம் வாங்கி திரும்ப ஒப்படைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பணம் கேட்கும் போலீஸ் பற்றிஅவசர போலீஸ் எண், '100'க்கு தகவல் தெரிவிக்கலாம்.
- ஹெல்மெட்டை, வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்து பயணித்தல், தொங்க விடுதல், பின் பக்கத்தில் பூட்டு போட்டு இருத்தல் கூடாது. அவ்வாறு செய்தால், ஹெல்மெட் அணியாதவர் என்றே கருதப்படும். அவர்களிடமும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்.
- வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து, மாற்றுப்பாதையில்தப்பித்து விடாத வகையில், மறைவிடங்களில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
- ஹெல்மெட் கண்காணிப்பை காரணம் காட்டி, சாலை விதிகளை மீறி செல்வோரையும் கோட்டை விட்டுவிடக் கூடாது.
- பெண்களும், ஹெல்மெட் அணிவது கட்டாயம்; அவர்களுக்கு எவ்வித சலுகையும் காட்டக் கூடாது.இவ்வாறு, உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
சாலை
விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தேவையற்ற உயிரிழப்பை தவிர்க்க, ஜூலை 1ம் தேதி முதல் (இன்று) இரு சக்கர வாகன
ஓட்டி கள், பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல
வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அமல்படுத்த
வேண்டியது போக்குவரத்து போலீசாரின் கடமை. அதை, 100 சதவீதம்
அமல்படுத்துவோம் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரு ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வழக்கு தள்ளுபடி
முன்னதாக , சென்னை உயர் நீதிமன்றத்தில், திருகோபாலகிருஷ்ணன் மற்றும் திருமதி நிம்மு வசந்த் ஆகியோர் "பெண்கள்,
குழந்தைகள், ஹெல்மெட் அணிவதில் பிரச்னை உள்ளது; எனவே, அரசு உத்தரவை ரத்து
செய்ய வேண்டும்" ஆகிய பிரச்சினைகளை உள்ளடக்கி ஹெல்மெட் கட்டாயமாக்கப் படுவதற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர் கோரிக்கை
பள்ளிக்கு தந்தை, தாயுடன், இருசக்கர வாகனத்தில் செல்லும்,
'குட்டீஸ்'களுக்கும், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தர வில்
இருந்து விலக்கு வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.பெரும்பாலான பெற்றோர், தங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட
குழந்தைகளை, டூவீலரில் தான் பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.
பெற்றோர் மனநிலை :
காலையில் பள்ளிக்கு போகும் அவசரத்தில், குழந்தைகள், 'ஷூ, சாக்ஸ்' போடவோ, சாப்பிடவோ கூட நேரமிருப்பதில்லை.
பெற்றோர் மனநிலை :
காலையில் பள்ளிக்கு போகும் அவசரத்தில், குழந்தைகள், 'ஷூ, சாக்ஸ்' போடவோ, சாப்பிடவோ கூட நேரமிருப்பதில்லை.
பிள்ளைகளுடன் பள்ளி புத்தகப்பை, 'லஞ்ச் பேக்' வைக்கவே, டூ வீலரில்
இடம் இல்லை. ஒரு தந்தை தனது இரண்டு பிள்ளைகளுடன், மூன்று ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் செய்யவே முடியாது.
Thanks to: Dinamalar
இதற்காக அனைவராலும் மாற்று ஏற்பாடுகளை செய்யவும் முடியாது. எனவே இது பல குடும்பங்களில் புதிய பொருளாதார சிக்கல்களை உண்டுபண்ணும்.
Thanks to: Dinamalar
இதற்காக அனைவராலும் மாற்று ஏற்பாடுகளை செய்யவும் முடியாது. எனவே இது பல குடும்பங்களில் புதிய பொருளாதார சிக்கல்களை உண்டுபண்ணும்.
மேலும் 1000பேர் படிக்கக் கூடிய ஒரு பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பெற்றோர்களுடன் இருசக்கர வாகனத்தில் தான் பள்ளிக்கு வருகிறார்கள். இந்த 300 மாணவர்களின் ஹெல்மெட்களையும் பள்ளிகளில் வைக்க இடம் உண்டா என்பது கேள்விக்குறி.
மாணவர்களை பள்ளிகளில் இறக்கிவிட்டு திரும்பும் பெற்றோர்கள் 2 அல்லது 3 ஹெல்மெட்களை திரும்ப எடுத்துச் செல்லமுடியுமா எனப்படும் சிக்கல்.
மாணவியர்
ஹெல்மெட் அணிந்தால் தலை கலைந்து விடும். பல தனியார் பள்ளிகள், தலையை
சரியாக பின்னவில்லை எனக்கூறி வெளியே அனுப்பி விடுவர்.
மேலும் சந்தையிலும்
பள்ளிக்குழந்தைகளுக்கு தனியாக ஹெல்மெட் விற்கவில்லை.
எனவே பெற்றோர்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு
செல்லும்போது போலீசார் கெடுபிடி செய்யக்கூடாது என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும். இந்த உத்தரவு மிகவும் அவசியமானது என்றாலும், இதுவே பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தும் ஒன்றாக மாறக்கூடாது என்பது நமது விருப்பம் ஆகும்.
மேலும், இனி தமிழ்நாட்டில் எடுக்கும் அனைத்து திரைப்படங்களிலும் ஹீரோக்கள் ஹெல்மெட் அணிந்து தான் வண்டியை ஓட்டவேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். ஏனெனில் திரைப்படங்களே இன்றைய இளைஞர்களுக்கு "வழிகாட்டியாகவும்", Inspiration ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SMS உருவாக்கிய Matti Makkonen மரணம்
செல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்பும் முறையைக் கண்டறிந்த Matti Makkonen உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
SMS என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகள் செல்போன்களில் மிக சர்வ சாதாரணமாக
அனுப்பப்பட்டு வந்தன. வாட்ஸ் அப் போன்ற மெசன்ஜெர்கள் வரும்வரையில்
இளசுகளிடம் கொடி கட்டி பறந்தது எஸ்.எம்.எஸ்தான். அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ்
அனுப்பும் முறையை முதன்முறையாக கண்டுபிடித்தவர்தான் Matti Makkonen.
63
வயதான இவர் பின்லாந்தை சேர்ந்தவர். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட இவர்
நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இருந்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை பின்லாந்தில்
இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.
20 ம்
நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக எஸ்.எம்.எஸ் திகழ்கிறது. எனவே,
இவர் "எஸ்.எம்.எஸ்" முறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இது குறித்து
2012ம் ஆண்டில் பி.பி.சிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த கண்டுபிடிப்பு
தனது தனிப்பட்ட சாதனை அல்ல. ஒரு கூட்டு முயற்சி என தெரிவித்துள்ளார்.
எஸ்.எம்.எஸ்
திட்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு நோக்கியா செல்போன் நிறுவனம் அவருக்கு
உதவி செய்தது. எஸ்.எம்.எஸ் அனுப்ப கூடிய வகையில் நோக்கியா 2010 ரக செல்போனை
உருவாக்கியது. அதில் இருந்து 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எம்.எஸ்
அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Saturday, June 27, 2015
நாளை முதல் 28.06.2015 அண்ணா பல்கலைக் கழக கவுன்சிலிங் துவக்கம் - TNEA 2015
தமிழகத்தில் உள்ள 539 இன்ஜினியரிங்
கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் Admission Counselling 28.06.2015 (ஞாயிறு) முதல் துவங்கி 30.07.2015ல் முடிவடைகிறது. கவுன்சிலிங்கில்
பங்கேற்க வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள் குளிக்கவும் தனி வசதி
செய்யப்பட்டுள்ளது.
- இடைத்தரகர்கள் உள்ளே வர தடை விதிக்கப் பட்டுள்ளது.
- அண்ணா பல்கலை ஊழியர்கள் போல் நடித்து மாணவர்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர்கள் மீது பெற்றோர் புகார் கொடுக்கலாம்.
- கவுன்சிலிங் வளாகத்தில், ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- குடிநீர், முதலுதவி, தீயணைப்பு மற்றும் , காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- பல்கலை வளாகத்தில், தனியார் கல்லுாரிகளின் துண்டு பிரசுரங்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு, அசல் அழைப்பு கடிதம் கொண்டு வந்தால் மாணவருக்கும், அவருடன் வந்து செல்லும் ஒருவருக்கும், அரசு பேருந்தில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும்.
- வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் குளிக்க, குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.
- கவுன்சிலிங் அழைப்பு கடிதம் தபாலில் கிடைக்காதவர்கள், மூன்று மணி நேரத்திற்கு முன் வந்து, அண்ணா பல்கலையில் கடித நகல் பெற்றுக் கொள்ளலாம்.
- கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில், எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன.
- மாணவர்கள், மூன்று வகை கல்லுாரிகள் மற்றும் விருப்ப பாடங்களை பதிவு செய்யலாம். இதற்காக, 50 பேர் ஒரே நேரத்தில் பதிவு செய்ய 50 கணினிகள் வைக்கப்பட்டுள்ளன.
Friday, June 26, 2015
CPS நிதியில் 25% தொகையை 10 வருடம் பணிமுடித்தவர்கள் திரும்ப பெறலாம் - பயனுள்ள அறிவிப்பா?
தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த அனைவரும் CPS திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய
திட்டத்தின் கீழ் உள்ளனர்.
CPS கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டி
வழங்கப்படுகிறது. ஊழியர் ஓய்வுபெறும்போது 60% திருப்பிக் கொடுக்கப்படும். எஞ்சிய 40%
தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும்.
பழைய ஓய்வூதிய திட்டமான GPF முறையில்,
ஊழியர்கள் தங்களின் GPF நிதியிலிருந்து 6
மாதங்களுக்கு ஒருமுறை அரசு கடன்பெறலாம். கடனை திருப்பி செலுத்திய பிறகு
மீண்டும் கடன் பெறமுடியும். மேலும் 15 ஆண்டுகள் பணி முடித்த ஒருவர் GPF
நிதியில் இறுதித்தொகையின் ஒரு பகுதியை (Part Final Withdrawal) திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால்,
புதிய ஓய்வூதிய திட்டத்தில் GPF போன்று கடன்பெறும் வசதியோ, பணத்தை
திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியோ இல்லாமல் இருந்துவந்தது.
தற்போது CPS திட்டத்தில் உள்ள அரசு
ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால் தங்களின் CPS நிதியில் இருந்து 25% தொகையை
திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்
அறிவித்துள்ளது.
ஆனால் இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி,
- CPS சந்தாதாரர்கள் தங்கள் பணிக் காலத்தில் 3 முறை சிபிஎப் தொகையை திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.
- பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு, வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, மருத்துவ செலவினங்களுக்கு (புற்றுநோய், சீறுநீரக குறைபாடு, இதய நோய் போன்றவை) இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- ஒவ்வொரு முறைக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்.இருப்பினும், மருத்துவ செலவினத்துக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி - Gmail அறிமுகம் - Undo Send for Gmail on the web
Previously a popular feature in Gmail Labs, and recently added to Inbox by Gmail, today we’re adding 'Undo Send' as a formal setting in Gmail on the web.
'Undo Send' allows people using Gmail to cancel a sent mail if they have second thoughts immediately after sending. The feature is turned off by default for those not currently using the Labs version, and can be enabled from the General tab in Gmail settings.
People currently using the Labs version of 'Undo Send' will have the setting turned on by default at launch.
இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட
நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்ச்சிவசப்பட்டு ஒரு
மெயிலை அனுப்பி விட்டு பின்னர்
அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என நினைப்பது போன்ற பல
காரணங்களுக்காக
இவ்வாறு நினைக்கலாம்.
இது போன்ற
நேரங்களில் கைகொடுப்பதற்காக Gmailல் தற்போது Undo Send வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Gmailல் மெயிலை தட்டச்சு செய்து Send பட்டனை அழுத்திய பின், திரையின் மேல்பகுதியில் Undo Send என குறிப்பிட்டு ஒரு பெட்டி எட்டிப்பார்க்கும்.
மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே Undo பட்டனை கிளிக் செய்தால், Mail அனுப்பப்படாமல் திரும்பி வந்துவிடும். அதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம்.
இந்த வசதியை
பயன்படுத்த Gmailன் வலப்புறத்தில் உள்ள Settings பகுதிக்கு சென்று Undo Sendல் 5 முதல் 30 விநாடிகள்
வரையான கால அவகாசத்தை
அமைத்துக் கொள்ளலாம். அதாவது 30 விநாடிகள் வரை அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அவகாசம் இருக்கும். ஆக, இனி தவறான முகவரிக்கு இமெயிலை அனுப்பி வருந்தும் நிலை இருக்காது.
Criptext Mail
இதே போல மெயிலை திரும்ப பெறும்
வசதியை Criptext எனும் புதிய மெயில் சேவையும்
அளிக்கிறது. Gmail விட ஒரு படி மேலே சென்று படிக்கப்பட்ட பிறகும் கூட அந்த மெயிலை திரும்ப பெற வழி செய்கிறது.
இன்பாக்சில் வந்த
மெயிலை படிப்பவர் டெலிட் செய்வது
போல அனுப்பியவர் டெலிட் செய்ய இது வழி செய்கிறது.
ஆக நாம் அனுப்பிய மெயிலை நாம் கட்டுப்படுத்த முடியும். தகவலை பரிமாறிக்கொண்ட பின் அந்த தகவல் ஆவணமாக இன்னொருவர்
கம்ப்யூட்டரில் இருப்பதை
இது தவிர்க்கிறது.
ஒரு மெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாக
மறைந்துவிடச்செய்யும் வசதியும் இது அளிக்கிறது.
ரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். அதேபோல அனுப்பிய மெயில் படிக்கப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம். மெயிலை Encrypt செய்தும் அனுப்பலாம்.
ரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். அதேபோல அனுப்பிய மெயில் படிக்கப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம். மெயிலை Encrypt செய்தும் அனுப்பலாம்.
Criptext Mail ஐ பெற http://www.criptext.com/email/
Wednesday, June 24, 2015
6லிருந்து 12 வரை
'Special Class'
அரசு பள்ளிகளின் தேர்ச்சியை
அதிகரிக்க கல்வி
ஆண்டின் துவக்கம் முதல் 6லிருந்து 12ம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது,
சென்னை
உள்ளிட்ட நகரங்களில், காலை 9 மணிக்கு
வகுப்புகள் துவங்கி மாலை, 3.30 மணிக்கு
முடிகிறது. மாவட்டங்களில்
9.30 மணிக்கு பள்ளி துவங்கி, 4.00 மணிக்கு முடிகிறது.
தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில்
சிறப்பு
வகுப்புகள் நடத்த,
ஆசிரியர்களுக்கு
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
6 முதல் 9
வகுப்பு
மாணவர்களுக்கு, காலையில் பள்ளி துவங்கும் முன் ஒரு
மணி நேரமும்(8.30 to 9.30), 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு
மாலையில்
வகுப்புகள் முடிந்த பின் ஒன்றரை மணி
நேரமும் (4.00 முதல் 5.30)
சிறப்புப்
பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
'இந்த
திட்டத்தில், தினமும் எந்த பாடத்துக்கு சிறப்பு வகுப்பு என்பதை,
ஆசிரியர்கள் முன்கூட்டியே அட்டவணை
தயாரித்து, தலைமை ஆசிரியருடன்
ஆலோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்; ஆசிரியர்
இல்லை என்ற காரணம் காட்டி,
சிறப்பு
வகுப்பை ரத்து செய்யக் கூடாது' என, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)