தமிழகத்தில் உள்ள 539 இன்ஜினியரிங்
கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் Admission Counselling 28.06.2015 (ஞாயிறு) முதல் துவங்கி 30.07.2015ல் முடிவடைகிறது. கவுன்சிலிங்கில்
பங்கேற்க வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள் குளிக்கவும் தனி வசதி
செய்யப்பட்டுள்ளது.
- இடைத்தரகர்கள் உள்ளே வர தடை விதிக்கப் பட்டுள்ளது.
- அண்ணா பல்கலை ஊழியர்கள் போல் நடித்து மாணவர்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர்கள் மீது பெற்றோர் புகார் கொடுக்கலாம்.
- கவுன்சிலிங் வளாகத்தில், ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- குடிநீர், முதலுதவி, தீயணைப்பு மற்றும் , காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- பல்கலை வளாகத்தில், தனியார் கல்லுாரிகளின் துண்டு பிரசுரங்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு, அசல் அழைப்பு கடிதம் கொண்டு வந்தால் மாணவருக்கும், அவருடன் வந்து செல்லும் ஒருவருக்கும், அரசு பேருந்தில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும்.
- வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் குளிக்க, குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.
- கவுன்சிலிங் அழைப்பு கடிதம் தபாலில் கிடைக்காதவர்கள், மூன்று மணி நேரத்திற்கு முன் வந்து, அண்ணா பல்கலையில் கடித நகல் பெற்றுக் கொள்ளலாம்.
- கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில், எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன.
- மாணவர்கள், மூன்று வகை கல்லுாரிகள் மற்றும் விருப்ப பாடங்களை பதிவு செய்யலாம். இதற்காக, 50 பேர் ஒரே நேரத்தில் பதிவு செய்ய 50 கணினிகள் வைக்கப்பட்டுள்ளன.