Wednesday, April 15, 2015

UGC NATIONAL ELIGIBILITY TEST (NET) - NOTIFICATION JUNE 2015

UGC NET  -  JUNE 2015

NOTIFICATION



It is notified that CBSE  will conduct the next  UGC-NET for Junior Research  Fellowship & Eligibility for Assistant Professor  which  will be held on 28th June  2015 (Sunday). The candidates who desire to appear in the test may see the detailed notification available on the website  www.cbsenet.nic.in  from  15th April  2015. The candidates are required to apply online only  from  16th April, 2015. The last date for applying online is  15th May 2015 and fee can be paid up to 16th May, 2015. 
 
 Important Dates
Online Form Submission
16th April 2015
Last date for Applying Online & generation of filled Bank Challan for Fee.
15th May 2015
Last date of submission of Fee through online generated Bank Challan, at any branch of (SYNDICATE/CANARA/ICICI BANK)
16th May 2015
Date of Examination
28.06.2015

 Fees



Category
Fee Amount
General
Rs. 600 /- (Six Hundred)
OBC 
Rs. 300 /- (Three Hundred)
SC / ST / Person with Disabilities(PwD)
Rs. 150 /- (One Hundred Fifty)
 

மாணவர்களின் ‘பஸ் பாஸ்’களில் அடுத்த ஆண்டு முதல் ரத்தப் பிரிவு இடம்பெறும்.

BUS PASS 

மாணவர்களின் ’பஸ் பாஸ்’களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகிறது என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

முதற்கட்டமாக, அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை, மாணவ, மாணவியரின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதை, EMIS, I.D.கார்டு, பஸ் பாஸ்  போன்றவற்றில் குறிப்பிட  முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் மூலம் உத்தரவிடப் படுகிறது.

வரும் கல்வியாண்டில்  ’பஸ் பாஸ்’  கோரும்  மாணவர்களின்  பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், பஸ்சில் ஏறும், இறங்கும் இடம், அந்தப் பாதையில் வரும் பஸ்களின் தடம் எண் போன்ற விவரங்களை, ஆன்-லைன் பதிவேட்டில் (EMIS) குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்துடன் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைத்து, ரத்தப் பரிசோதனை நடத்தி, அவர்களின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதையும் ஆன்-லைனில் மாணவர் விவரங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை, வரும், 28ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ரத்தப் பிரிவுடன் கூடிய விவரங்களை போக்குவரத்துத் துறைக்கு அனுப்பி, பள்ளி திறக்கும் ஜூன், 1ம் தேதி, மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய, ’பஸ் பாஸ்’ அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tuesday, April 14, 2015

நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.




             யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
             தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
             நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

             சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
             இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
             இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
  
             வானம் தண்துளி தலைஇ, ஆனாது
             கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
             நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
             முறைவழிப் படூஉம்என்பது திறவோர்

             காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
             பெரியோரை வியத்தலும் இலமே;
             சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


                     கணியன் பூங்குன்றன்
                                                 ( புறநானூறு - 192)







பொருள்:                                                                                               © deccanbluediamonds

            எவ்வூரும் எமது ஊர்.அனைவரும் எம் சொந்தம்.

            துன்பங்களும், இன்பங்களும் நம்மால் தான்.

            பிறர் தந்து வருவதல்ல தீதும், நன்றும்.



            மரணம் என்பது இயற்கை.

            அதனால்,

            வாழ்வு இனிது என

            மகிழ்வதும் தவறு.

            துறவு கொடிது என

            இகழ்வதும் தவறு.



            வெட்டும் மின்னலில்

            விழுகின்ற நீர்த் துளி

            கட்டுக் கடங்காத வெள்ளமாய்

            கல்லும் மண்ணும் புறண்டோட,

            அதில் சிக்கி அதன் வழியே போகும்

            ஓடம் போன்றது உயிர்.



            அது முன்னர் இட்ட முறைவழியே

            போகத் தான் செய்யும் என

            முன்பே அறிந்தவர் முனிவர்.

            அதனால்


                             பெரியோர் என நினைப்பவரை

            வியத்தலும் இல்லை.

            சிறியோரை இகழ்தல் என்பது

            அதனினும் இல்லை.            

                                                                 

                            
                                          

Sadhguru Tamil Video சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் Sadhguru...

Saturday, April 11, 2015

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JACTTO) வேலூரில் 19.04.2015 அன்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

 (JACTTO)  
 

'ஆசிட்' தாக்குதலுக்கு இலக்காகும் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு



நெஞ்சில் சிறிதும் ஈரமற்ற எண்ணற்ற மனித மிருகங்களையும் தான் நாம் கடந்து போகிறோம். 

சிலர் 15 வயது தாண்டியவுடனே, தலைமுடியை கண்டபடி செதுக்கி இருப்பார்கள். கழுத்தில் பிளேடு போட்ட சங்கிலியை போட்டிருப்பார்கள். கைகளில் தனது ஜாதி சார்ந்த ரப்பர் வளையம் இருக்கும்.  Yamaha, Pulsar, Apache போன்ற ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகளில் நண்பர்களுடன் சாலைகளை அலற விடுவார்கள். Accident ஆகி அடிபட்டாலும் கூட மீண்டும் அப்படித்  தான் இருப்பார்கள். பஸ் ஸ்டாண்ட், பெண்கள் கல்லூரி வாசல், பெண்கள் பள்ளிக்கூட வாசல், டியூஷன் வாசல் என எல்லா வாசல்களிலும் நின்று பெண்களை தொந்தரவு செய்வார்கள்.

வேறு சிலர் அதிக பட்சம் 10ம் வகுப்பிற்குள் படித்திருப்பார்கள். தலையை விட முடி அதிகமாக இருக்கும்.  பின்பக்கம் நீளமாக வால் ஒன்றை வைத்திருப்பார்கள். கிருதா 'வை கத்தி போன்று டிசைன் செய்திருப்பார்கள். அழுக்கு டி-சர்ட், ஜீன்ஸ் இருக்கலாம். எந்த பழக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம். எப்போதாவது வேலை இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வேலை  பஸ் ஸ்டாண்ட், பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி, கார்மெண்ட்ஸ் வாசல்கள் இதர சில இடங்கள். இவர்கள் திருமணமான பெண்களையும் கூட தங்கள் கணக்கில் வைத்திருப்பார்கள். 

இவர்கள் இருவரிடமும் நவீன செல்போன்கள் இருக்கும். பாக்கெட்'ல் 10 ரூபாய் கூட இருக்காது.

இப்படி இந்த இருவருக்கும் ஒரே நோக்கம் என்னவென்றால், அழகான பெண்களை(திருமணம் ஆகி இருந்தாலும் கூட) பின்தொடர்வது, அப்பெண்கள் வழக்கமாக வந்தே தீர வேண்டிய இடங்களில் "Wait" செய்வது, மோசமான சிக்னல்கள் கொடுப்பது, பஸ்களில் தவறாமல் தினமும் வந்து அருகில் நின்றபடி நண்பர்களுடன் பேசுவது, கண்களில் காமத்தை வழிய விடுவது போன்றவைதான்.

சரி இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? காதலா? அறிவியலின் படி "காதல்" என்பதே ஒரு பொய்.  அது அவர்களுக்கும் தெரியும். படிப்போ, வேலை ஆகியவற்றில்  திறமையோ இல்லாத இவர்களுக்கு  ஒரு அழகான பெண் வேண்டும். அதுவும் நல்ல வசதியான வீட்டு பெண்களாகவோ அல்லது  நன்கு படித்து வேலைக்கு போகக் கூடிய பெண்களாகவோ இருந்தால் கூடுதல் அதிர்ஷ்டம். 

இதெல்லாம் இதை படிக்கும் நமக்கு முன்பே தெரியுமா? ஏன் தெரியாது? இப்படிப் பட்ட Character கொண்ட ஹீரோக்களின் படங்கள் தானே இங்கு Block Buster  அடிக்கிறது. நாம் தானே அவைகளை வெற்றி பெற வைக்கிறோம். 

சரி அதனால் என்ன?  இப்படி சமூகத்தில் பல இடங்களிலும், பலராலும் தொல்லைகளுக்கு உட்படுகின்ற பெண்கள் பெற்றோர்கள் அல்லது காவல் நிலையத்தில்  முறையிட்டாலும்,  அல்லது தானாகவே எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட அவர்களுக்கான பாதுகாப்பை பெற முடிவதில்லை. 

அழகை அல்லது பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வன்மங்கள் நிறைந்த பல மிருகங்கள் இந்நாட்டின் திருமகள்களை, தேவதைகளை, வேர்களை  'ஆசிட் வீச்சு' எனும் பேரால் நிர்மூலமாக்கி இருக்கின்றன.



சரி இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அரசாலும், ஆசிரியர்களால் முடியும். மத்திய அரசும், மாநில அரசுகளும் மாணவர்களின் ஒழுக்கக் கல்விக்கு முக்கியத்துவம் தரும்படி திட்டங்கள் வகுக்க வேண்டும்.  

கண்டிப்பு இருந்தால் தான் ஒழுக்கம் வரும்  என்பது விதி. ஒழுக்கம் தவறும் போது தண்டனை வரும் என்பதை ஆசிரியர்கள் சிறு வயது முதலே மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.(ஆனால் ஆர்வக் கோளாறில் நாம் தண்டனை அளிக்கக் கூடாது). வன்முறையற்ற தண்டனைகள் தர ஆசிரியர்களை அனுமதிக்கலாம்.  

Slow Learners ஐ படிக்க வைக்கலாம். அது நம் கடமை. ஆனால் முறைகேடுகளாலேயே முன்னுக்கு வந்து விடலாம் என்பவர்களை( Eg. Bihar SSLC Exam Video) எப்படி படிக்க வைக்க முடியும். அப்படி இருப்பவர்களை கண்டறிந்து, தொழிற்கல்வி பள்ளிகள் அமைத்து, ராணுவப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு வேலைவாய்ப்புகள்  தரக்கூடிய தொழிற் கல்வி  போன்ற மாற்றுக் கல்வி திட்டங்கள் அளிக்கலாம்.


சரி  இவற்றையெல்லாம் நாம் ஏன் இப்போது பேசுகிறோம்?


மிகக் கொடூரமான, ஆசிட் வீச்சுக்கு இலக்கான மேலே படத்தில் உள்ள லட்சுமி என்ற இளம்பெண்ணின் வழக்கை, 2006ம் ஆண்டு முதல் விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கொண்ட அமர்வுசிறப்பான ஒரு உத்தரவை நேற்று பிறப்பித்தது.


'ஆசிட்' தாக்குதலுக்கு இலக்காகும் பெண்களுக்கு, உடனடியாக, தேவையான அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளையும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.



ஆசிட் வீச்சுக்கு இலக்காகும் பெண்கள், உடனடியாக தகுந்த சிகிச்சை கிடைக்காததால் தான், கடும் பாதிப்படைந்து உடல் பாகங்கள் கோரமாக ஆகின்றன என்பதால், இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி லோகுர், யு.யு.லலித் பிறப்பித்தனர்.

மேலும், இந்த உத்தரவை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்; அதற்கான விழிப்புணர்வை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிடம் இருந்தும் அதற்கான உறுதிமொழியை பெற்று, அருகில் உள்ள நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஏப்ரல் 15 முதல் நோடல் சென்டர்களில் விண்ணப்பிக்கலாம்

 14.04.2015 முதல் 21.04.2015 வரை

8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள்  14.04.2015 முதல்  21.04.2015 வரை நோடல் மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மண்டல  தேர்வுத் துறை துணை இயக்குநர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு தேர்வு எழுத  01.05.2015 அன்று 12½  வயது நிறைவு பெற்று இருக்கவேண்டும்.


தேர்வுக்கட்டணம்  ரூ. 125 மற்றும் ஆன்லைன விண்ணப்பப் பதிவுக் கட்டணம்  ரூ. 50 ஆகியவை சேர்த்து  மொத்தம் ரூ.175/- ஐ கட்டணமாக செலுத்த வேண்டும் 

விண்ணப்பத்துடன் முன்னர் படித்த வகுப்பின் TC அல்லது  பிறப்புச் சான்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

நோடல் சென்டர்கள்:

வேலூர்

1. தோட்டப் பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - பெண்களுக்கு மட்டும் 
2. செயின்ட் ஆண்ட்ரூஸ், அரக்கோணம்   -  ஆண், பெண்  இருபாலரும் 
3. அரசு மேல்நிலைப்பள்ளி, ராணிபேட்டை - ஆண்கள் மட்டும் 
4.பெண்கள் மேல்நிலைப் பள்ளி , காட்பாடி  - ஆண், பெண்  இருபாலரும் 
5. ராமகிருஷ்ணா மேல்நிலை, திருப்பத்தூர்  - பெண்களுக்கு மட்டும் 
6. மஸ்ருல் உலம் மேல்நிலை , ஆம்பூர்  - ஆண்கள் மட்டும்
7.இந்து மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி - ஆண், பெண்  இருபாலரும்


திருவண்ணாமலை
1.ஷண்முகா இண்டஸ்ட்ரிஸ் மேல்நிலைப்பள்ளி  -ஆண்கள் மட்டும்
2.தியாகி அண்ணாமலை அ.மே.நி.பள்ளி - பெண்களுக்கு மட்டும் 
3. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போளூர் -ஆண், பெண்  இருபாலரும் 
4. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கம் -ஆண், பெண்  இருபாலரும் 
5.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு - பெண்களுக்கு மட்டும் 
6.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி -ஆண்கள் மட்டும்
7.சுப்ரமணிய சாஸ்திரி  மேல்நிலைப்பள்ளி, ஆரணி- ஆண், பெண் 
தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட், தேர்வு நடைபெறும் நாட்கள் ஆகிய விவரங்கள் இணையத்தளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

Friday, April 10, 2015

கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக 10 ஆசிரியர்கள் தேர்வு



கற்பித்தலில் புதுமை

கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆசிரியர்களை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இவர்களது கற்பித்தல் முறைகளை, இணையதளத்தில் பதிவேற்றவும், அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்தியாசப்படுத்தவும்; ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும், பள்ளிக் கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளை விட, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த, புதிய முயற்சி ஒன்றை, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில், வீடியோவாக வெளியிட, முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, மாநிலம் முழுவதும், 1,526 ஆசிரியர்கள், தங்களின் கற்பித்தல் முறைகளை விளக்கி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தனர். இதில், கற்றலில் புதுமையை புகுத்திய 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, 75 ஆசிரியர்களின் கற்பித்தலை, வீடியோ எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதைப் பார்த்து, மற்ற ஆசிரியர்களும் பின்பற்ற வாய்ப்புள்ளது என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
.
    காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், உத்திரமேரூர், நெல்லிக்குப்பம், நல்லம்பாக்கம், தென்மேல்பாக்கம், ஓனம்பாக்கம், குருவிமலை, கருநிலம், கொளத்துார், ஆத்தனஞ்சேரி, மதுரமங்கலம் ஆகிய 10 அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

     இதுவரை, எட்டு ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், மீதமுள்ள இரண்டு ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை, வீடியோவாக பதிவு செய்து முடிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Wednesday, April 8, 2015

Dearness Allowance Hiked by 6%; to benefit over 1 crore Central Govt Employees



மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 107 சதவீத அகவிலைப்படியை 113 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.


ஆறாவது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்.  இதனால்  ஆண்டுக்கு ரூ. 6762.24 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பம் -தேர்வுத் துறை அறிவிப்பு

தனித் தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் விண்ணப்பிக்கலாம் 

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இணையதள விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை இணைக்க வேண்டும். இதற்கு தத்தகல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Tuesday, April 7, 2015

WHO: World Health Day 2015, Food Safety - the Global View

அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடங்கள்



பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை 

மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் RMSA திட்டத்தின் கீழ், தமிழக அரசு பள்ளிகளில், 25 வகை தொழிற்கல்வி படிப்புகள் துவங்கப்பட உள்ளன. மாணவர்கள் தொழிற்கல்வியினையும்   கற்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த பகுதிகள் சார்ந்துள்ள தொழில்களுக்கு ஏற்ப, பொது இயந்திரவியல், எலெக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், ஆடை உற்பத்தி, ஜுவல்லரி தயாரிப்பு உட்பட, 25 வகை தொழில் படிப்புகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


முதற்கட்டமாக, ஒன்பதாம் வகுப்பில் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளிகளிலும், அந்த பகுதிகளில் நிலவும் தொழில் சார்ந்த இரண்டு படிப்புகள் துவங்கப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sunday, April 5, 2015

சத்தமின்றி முத்தமிடு

dbd's RainTree Studio's Presents
 
How to fall in love with King Cobra
 
இப்படி பண்ணா நீங்களும் கூட பாம்புக்கு "இச்"  தரலாம்.


Saturday, April 4, 2015

'Online' ல் 12ம் வகுப்பு விடைத்தாள் நகல் பள்ளிக்கல்வித் துறை முடிவு

 'Online' ல் 12ம் வகுப்பு விடைத்தாள் நகல்

மார்ச் 2015ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, Online மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.
இந்த ஆண்டு முதல் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியானதும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு உடனே விண்ணப்பிக்கும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், மாணவ, மாணவியர் மதிப்பெண் சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. 
மேலும் கூடுதல் வசதியாக மாணவர்கள்,  மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்காக, விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், அவர்களுக்கு தாமதமின்றி நகல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
இதன்படி, இந்த ஆண்டு, Online மூலம், விடைத்தாள் நகல் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான முயற்சிகளை, தேர்வுத் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து மேற்கொண்டு வருவதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Aloe Vera Face Packs to Remove Dark Spots, Acne Scars & Pimple Marks

How to Lighten Dark Underarms

Wednesday, April 1, 2015

தமிழன்டா.........

தமிழன்டா.........

(கதை, சம்பவங்கள் கற்பனையே, நகைச்சுவைக்காக மட்டுமே SunMicroSystems பெயரை பயன்படுத்தி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் - deccanbluediamonds)


உகண்டா ல இருக்குற SunMicroSystems கம்பெனில JavaOS ப்ராஜெக்ட்ல வொர்க் பண்ண உலகம் முழுசும் இருந்து Apply பண்ணலாம் னு விளம்பரம் பண்ணி இருந்தாங்க. ஒரே ஒரு Vacant  தான்.


நம்ம ஆளுக்கு வேலை தான் எதுவும் இல்லையே,"சரி இதுக்காச்சும் apply பண்ணலாம்"னு அப்ளிகேசன் போட்டாரு.
இண்டர்வியு நாள் வந்தது. நம்ம ஆள் ஆப்பிரிக்கா கெளம்பி போனாரு. உகாண்டா கேபிடல் Kampala வுல இறங்கி நேரா கம்பெனிக்கு போனாரு.
.

அங்கே இவரைப் போல 5000 பேர் இன்டர்வியு' க்கு வந்திருந்தாங்க.  

நெறைய பேர் இருந்ததால, ஆளுங்களை filter பண்ண கம்பெனி முடிவெடுத்தாங்க.
முதல்ல "எத்தனை பேருக்கு JAVA OS ல அனுபவம் இருக்கு" னு  கேட்டாங்க.

நம்மாளுக்கு இந்தோனேசியா ல  இருக்குற JAVA  தீவு தான் தெரியும். இருந்தாலும் "பாத்துக்கலாம் விட்றா" னு தைரியம் ஆகி "தெரியும்" னு  சொல்லிட்டாரு.
java  தெரியாததால 3000 பேர் குறைஞ்சாங்க.

அப்புறம் "அமெரிக்கன் இங்கிலீஷ் ல எத்தன பேரு fluent" னு கேட்டாங்க.

நம்மாளுக்கு  தமிங்கிலீஷ் தான்  கரெக்ட்டா தெரியும். இருந்தாலும் இது ரெண்டாவது பொய் தானேன்னு நெனைச்சி "தெரியும்" னு  சொல்லிட்டாரு.
English  தெரியாததால 1000 பேர் குறைஞ்சாங்க.

அப்புறம் "எத்தனை பேர் ஆப்ரிக்கன் country" னு  கேட்டாங்க.

"சரி அடிச்சி விடுவோம்" னு  நெனைச்சி நம்மாளும்  "நானும் ஆப்ரிக்கா  தேங் " னு சொல்லிட்டாரு.
ஆப்ரிக்கனா  இல்லாததால ஒரு 500 பேர் குறைஞ்சாங்க.

அப்புறம் "எத்தனை பேருக்கு HR  ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு"னு கேட்டாங்க.நம்மாளுக்கும் அதுல ஒண்ணும் இல்லைதான். இருந்தாலும், டீ  கடைல, பார்பர் ஷாப் ல பொது அறிவை வளர்ததுனால அவரு "இருக்கு" ன்னுட்டாரு.
HR எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம 400 பேர் குறைஞ்சாங்க. 100 பேர் தான்  மிச்சம். அதுல நம்மாளு ஒருத்தர்.

கடைசியா, "எத்தனை பேருக்கு உகாண்டா மொழியான Bantu தெரியும்" னு கேட்டாங்க.

நம்மாளுக்கு தமிழே தகறாரு. இந்தி இம்சை, English  னாவே இழுப்பு வந்திடும். இருந்தாலும் 'பத்தோட பதினொன்னு' னு  நெனைச்சி "எனக்கு ரொம்ப நல்லா தெரியும்" னு சொல்லிட்டாரு.
Bantu மொழி தெரியாம 98 பேர் போயிட்டாங்க. 

மிஞ்சி இருந்தது ரெண்டே பேர் தான். அதுல நம்மாளு ஒருத்தர். உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறல் எடுத்தாலும் நம்மாளு கொஞ்சம் கெத்தோட உக்காந்து இருந்தாரு.
Interview பண்றவங்க கடைசியா இருந்த ரெண்டு பேரையும் "உங்களோட Bantu மொழியில பேசிக்குங்க பாப்போம்"னு சொன்னங்க.

நம்மாளு எதிர்ல இருந்தவர் கிட்டே கேட்டாரு.

"தம்பிக்கு எந்த ஊரு?"
அதுக்கு அவன் சொன்னான்.

"அண்ணே நான் திருச்சி பக்கம். நீங்க?"